எல்லை மீறவே மாட்டேன்… காதல் பற்றி ஓப்பனாக பேசிய ரேஷ்மா!!

545

ரேஷ்மா…

வேலன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் ஹிட்டுக்கு அந்த படத்தில் இடம்பெற்ற புஷ்பா காமெடி மிக முக்கியக் காரணம். தெரியாத் தனமாக ஒரு விலைமாது பெண்ணை திருமணம் செய்துகொண்டு படாத பாடு படும் அவஸ்தையை சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பார் சூரி.

அந்த புஷ்பா வேடத்தில் நடித்தவர்தான் ரேஷ்மா. படத்தில் கொஞ்ச நேரமே அவர் வந்தாலும் படம் முழுவதும் நகைச்சுவைக் காட்சிகள் அவரை சுற்றியே உருவாக்கப்பட்டு இருக்கும். அந்த படம் பெரிய வெற்றி பெற்றாலும் பின்னர் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த அவருக்கு கைகொடுத்தது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல்.

அந்த புஷ்பா வேடத்தில் நடித்தவர்தான் ரேஷ்மா. படத்தில் கொஞ்ச நேரமே அவர் வந்தாலும் படம் முழுவதும் நகைச்சுவைக் காட்சிகள் அவரை சுற்றியே உருவாக்கப்பட்டு இருக்கும். அந்த படம் பெரிய வெற்றி பெற்றாலும் பின்னர் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த அவருக்கு கைகொடுத்தது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல்.

`
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் கோபிக்கு கல்யாணம் ஆனது தெரியாமல் அவரைக் காதலிக்கும் பெண்ணாக நடித்திருப்பார். சீரியலில் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடித்தாலும், சமூகவலைதளங்களில் அல்ட்ரா மாடர்னாக வலம் வருகிறார்.அதுமட்டும் இல்லாமல் இப்போது தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் சிறப்பு விருந்தினராகவும், நடுவராகவும் கலந்து கொண்டு வருகிறார்.

சோஷியல் மீடியாவில் படுதீவிர ஆக்டிவ்வோடு இருக்கும் இவர் பகிரும் புகைப்படங்கள் எல்லாம் வைரல் ஆகி வருகின்றன. அந்த வகையில் இப்போது டைட்டான ஜீன்ஸ் அணிந்து இப்போது விதவிதமான போஸ்களில் அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இந்நிலையில் அவர் ஒரு நேர்காணலில் தன்னுடைய பள்ளிகால காதல்கள் பற்றி பேசியுள்ளார். அதில் “எனக்கு நிறைய பேர் லவ் லெட்டர் கொடுத்திருக்காங்க. சிலர் ரத்தத்தில் எல்லாம் லெட்டர் எழுதி இருக்காங்க. நான் எல்லாத்தையும் வாங்கி வச்சிப்பேன். யார் மனசும் புண்படக் கூடாதுன்னு நெனப்பேன். என்ன சில பேர் காதலிச்சாங்க. நானும் அவங்கள கண்களாலேயே காதலிச்சென். ஆனால் தொட்டுக்கொள்கிற காதல் இல்லை. அந்த காதல் அந்த அளவிலேயே நின்றுவிடும். அதற்கு மேல் செல்லாது. நானும் அதை மறந்துவிடுவேன்” எனக் கூறியுள்ளார்.