அஞ்சலி..
அஞ்சலி தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் படம் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து கலகலப்பு, மங்காத்தா போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக முயற்சித்தார்.
அதோடு தெலுங்கு சினிமாவில் இவர் பெரிய ரவுண்ட் வந்தார். இந்நிலையில் பல வருடமாக அஞ்சலில் அவரை காதலிக்கிறார், இவரை காதலிக்கிறார், ஏன் இந்த பிரபலத்துடன் திருமணமே ஆகிவிட்டது என்றெல்லாம் கூறுவார்கள்.
ஆனால், அஞ்சலி சமீபத்தில் ஒரு பேட்டியில், இந்த சோசியல் மீடியாவில் உள்ளவர்கள் எனக்கு 10 தடவை மேல் திருமணம் செய்து வைத்து விட்டார்கள், நான் கண்டிப்பாக திருமணம் என்றால் உங்களுக்கு சொல்லிவிட்டு தான் செய்வேன் என்று ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.