திருட்டு கதையில் சிக்கிய ஜெயம் ரவியின் திரைப்படம்!! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..!

409

ஜெயம் ரவி…

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் முன்னணி நடிகர் ஜெயம் ரவி. இவர் தற்போது ஜன கண மன, பொன்னியின் செல்வன் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

லட்சுமணன் இயக்கத்தில் இவர் நடித்து முடித்து வெளிவர காத்திருக்கும் படம் பூமி. கொறோனா காரணமாக தற்போது இப்படத்தின் ரிலீஸ் சற்று தள்ளிப்போய் இருக்கிறது.

ஏற்கனவே இப்படத்தின் டீஸர் வெளிவந்து தமிழ் திரையுலக ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இப்படத்தின் ஒன் லைன் கதை என்வென்றால் ஒரு சைண்டிஸ்ட் விவசாயத்திற்காக தனது துறையில் இருந்து விலகி விவசாயத்தில் களமிறங்குகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் கதை என்னுடையது என துணை இயக்குனர் ஒருவர் பூமி படத்தின் மீது திரையுலக எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் பூமி கதை என்னுடையது என புகர் அளித்த துணை இயக்குனரின் பக்கம் நியாயம் இருக்கிறது என்று தற்போது கோலிவுட் வட்டாரத்தில் சிலரால் கூறப்படுகிறது.

ஆனால் இது உண்மையா அல்லது பொய்யா என எழுத்தாளர் சங்கத்தில் இருந்து தெரிவிக்கும் வரை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.