“என்னுடைய வாழ்க்கை வரலாறான 800 படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலக வேண்டும்” – முத்தையா முரளிதரன் !

298

முத்தையா முரளிதரன்…

எல்லா பெரிய தலைகளின் Biopicகள் குத்தகைக்கு எடுத்த பாலிவுட் திரையுலகம் தவறவிட்ட Biopic தான் இந்த பிரபல இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். இந்த திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முரளிதரனாக நடிக்க இருப்பதாகவும்,

இந்த படத்திற்கு 800 என்றும் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது, அதுவும் இல்லாமல் Motion Poster கூட வெளியானது.ஆனால் மக்கள் மத்தியில் ஈழத் த மிழர் பி ரச்சனையில் சி ங்களருக்கு ஆதரவாக நடந்து கொள்ளும் முரளியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என உலகத் த மிழர்களிடம் இருந்து எ தி ர்ப்பு கி ளம்பியது. இருப்பினும் விஜய்சேதுபதி எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார்.

இப்போது முத்தையா முரளிதரன் அவர்கள், தானே முன்வந்து தம்முடைய வாழ்க்கை குறித்த படமான 800 திரைப்படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகிக் கொள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். இதனை நடிகர் விஜய்சேதுபதியும் ஏ ற்றுக் கொ ள்வது போல, “நன்றி… வணக்கம்” என்று ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

முத்தையா முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது சுயசரிதை படமான 800 திரைப்படத்தை சுற்றி தமிழ்நாட்டில் சிலரால் ஏற்படுத்தப்பட்டுள்ள ச ர்ச்சைகள் காரணமாக இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

என் மீதுள்ள த வறான பு ரிதலால் 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என்று நடிகர் விஜய்சேதுபதி அவர்களுக்கு சிலர் தரப்பில் இருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன். எனவே என்னால் தமிழ்நாட்டில் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை,

அதனால் நான் அவரை விலகிக் கொ ள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று பெருந்தன்மையாக அந்த அறிக்கையில் கூறியுள்ளார். இவர்களின் அ ரசியலுக்குள் ஒரு நல்ல படம் முடங்கி விட்டதே என்று ஆத்திரத்தில் இருக்கிறார்கள் விஜய்சேதுபதியின் ரசிகர்கள்.