Big Boss Confession ரூமில் அழுது ஒப்பாரி வைத்த சுரேஷ் சக்ரவர்த்தி ! வைரலாகும் Promo !

295

சுரேஷ் சக்ரவர்த்தி…

நேற்று, ராஜா அரக்கர்கள் டாஸ்க்கில் பல இடங்களில் சொந்த விஷயங்களை கிளறி விடுவது போல சுரேஷ், சனம் ஷெட்டியை பேசினார்.

ஆனாலும் சனம் அதற்கு சிறிது கூட அசையவில்லை. எனவே நேற்று சனத்திடம் தோற்று விட்டனர். இது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் சுரேஷுக்கு எதிராக பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று மௌனம் காத்த சனம் இன்று செம்ம கோபமாக அவரை வாடா போடா என்று பேசும் அளவிற்கு வந்து விட்டார். பிரச்சனை என்ன என்றால்,

சுரேஷ் வைத்திருக்கும் தடியால் சனத்தை தாக்கி,அதன்பின் சனம் மிகவும் கோபமடைந்து அவரை வாடா போடா என்று பேசுவதையும் நாம் இரண்டாம் புரோமோவில் காண முடிந்தது.

தற்போது வெளியான புரோமோவில், தன்னை தானே Confession ரூமுக்கு அழைக்குமாறு சுரேஷ் Big Bossயிடம் கேட்டுகொள்கிறார். CONFESSION ரூமுக்கு சென்றவுடன், Big Boss அவரை பார்த்து, “நீங்க வேணும்னே அவரை அடிச்சீங்களா ?”

என்று கேட்டவுடன் உடனே சின்ன குழந்தை போல் தார தாரையாக கண்ணீர் விட்டு “இல்லை, என்னை இங்க கார்னர் செய்யுறாங்க” என்று கூறி அழ ஆரம்பிக்கிறார்.

இதை பார்த்த ரசிகர்கள், ” உங்கள யார் இங்க கார்னர் செஞ்சாங்க, சனமை தான் எல்லாரும் கார்னர் செஞ்சாங்க” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.