“சூர்யா அழுதபோது எனக்கும் கண்ணீர் வந்தது” – சூரரை போற்று குறித்து வைகைப்புயல் வடிவேலு!

321

சூரரை போற்று குறித்து வைகைப்புயல் வடிவேலு…

இறுதிச்சுற்று சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் சூரரைப்போற்று. ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தில் அபர்ணா முரளி நாயகியாக நடித்துள்ளார்.

இந்த படம் 5 நாட்களுக்கு முன் அமேசான் OTT தளத்தில் ரிலீஸ் ஆகி ஏகபட்ட பாராட்டுக்கள் கிடைத்தது. அதிலும் சூர்யா நடிப்பெக்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்க படுகிறது.

இந்த நிலையில், சூரரைப்போற்று படத்தை பார்த்த பல திரையுலக பிரபலங்கள் சூர்யாவை பாராட்டி தள்ளுகிறார்கள். இப்படி பல திரையுலக பிரபலங்கள் சூர்யாவுக்கு தங்களது பாராட்டுக்களும் தெரிவித்த நிலையில்,

நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு அவர்கள் தந்து Official Twitter வலைதளத்தில், “தம்பி சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை பார்த்தேன். அவர் அழும் இடங்களில் நம்மை அறியாமலே கண்ணீர் வருகிறது‌.

இத்தகைய படைப்பை எம்மக்களுக்கு கொடுத்த படக்குழுவினருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்” என்று மனதார பாராட்டி உள்ளார்.