ரசிகர்களை இழக்கிறாரா ரம்யா பாண்டியன்?

265

ரம்யா பாண்டியன்…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்தே பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவரும் போட்டியாளர் ரம்யா மட்டுமே. குறிப்பாக சுரேஷ் சக்ரவர்த்தி இடமிருந்து எவிக்சன் பாஸை திறமையாக பெற்று அதை அவர் ஆஜித்துக்கு விட்டுக் கொடுத்த பின் அவருடைய இமேஜ் வேற லெவலுக்கு சென்றது மட்டுமின்றி அவருக்கு ரசிகர்களின் எண்ணிக்கை எகிறியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த வீட்டில் புத்திசாலித்தனமாகவும் அழகாகவும் இருக்கும் ஒரே போட்டியாளர் ரம்யா தான் என்று அவரது ஆர்மியினர் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது அவர் கொஞ்சம் கொஞ்சமாக தனது ரசிகர்களை இழந்து வருவது போல் தெரிகிறது.

குறிப்பாக ஆரிக்கு எதிராக யார் சண்டை போட்டாலும் உடனே அவர்களுக்கு ஆதரவாக ரம்யா சொம்பு தூக்குகிறார் என்று அவர் மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வளர்ப்பு சரியில்லை என்று சம்யுக்தா கூறிய கருத்துக்கு ஆதரவாக ரம்யா பேசுவது பார்வையாளர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.

ஏனெனில் இதற்கு முன்னர் நடந்த நீதிமன்ற டாஸ்க்கில், ‘ஒரு பெண்ணிடம் பேச கூட தெரியவில்லை, இவனெல்லாம் வந்துட்டான் பிக்பாஸ் வீட்டுக்கு, இவனுக்கெல்லாம் வளர்ப்பு சரியில்லை என்று அப்போதும் ரம்யாவிடம் தான் சம்யுக்தா கூறினார். ஆனால் அவ்வாறு சொல்வது தவறு என்று ரம்யா சம்யுக்தாவிடம் கூறவில்லை.

ஆரிக்கு எதிரானவர்களுக்கு ஆதரவாக ரம்யா பேசுவதும் ஆஜித்துக்கு ஆதரவாக மட்டுமே இருப்பதும் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாலாஜி உள்பட மற்ற சண்டைகளை எல்லாம் வேடிக்கை பார்த்து சிரித்துக் கொண்டிருக்கும் ரம்யா,

ஒருசில சண்டைகளில் மட்டுமே தனது ஆதரவை தெரிவிக்கும் பாணியை மாற்றிக் கொள்ளாவிட்டால் ரம்யாவுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக விலகும் அபாயம் உள்ளது என்று என்று தெரிகிறது.