நடிகை-அரசியல்வாதியின் கார் விபத்து: 3 பேர் பரிதாப பலி!

283

உமாஸ்ரீ..

பிரபல நடிகைக்கு சொந்தமான கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே இருவரும் சிகிச்சை பலனின்றி ஒருவரும் என மொத்தம் 3 பேர் பலியாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல கன்னட நடிகை உமாஸ்ரீ. இவர் அரசியலிலும் ஈடுபட்டு உள்ளார் என்பதும் கர்நாடக மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் உமாஸ்ரீக்கு சொந்தமான கார் கர்நாடக மாநிலத்தில் உள்ள உப்பள்ளி என்ற பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தது.

இந்த காரில் நடிகை உமாஸ்ரீ செல்லவில்லை என்பதும் டிரைவர் மட்டுமே சென்று கொண்டிருந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் இந்த கார் பாண்டிவாடா என்ற பகுதியில் கார் சென்றபோது எதிரே வந்த டாக்டர் ஸ்மிதாகுட்டி என்பவரின் கார் மீது மோதியது.

நேருக்கு நேர் மோதிக் கொண்ட இந்த விபத்தில் டாக்டர் ஸ்மிதாகுட்டி காரில் இருந்த டாக்டர் ஸ்மிதாகுட்டி, அவரது தாயார் ஷோபா குட்டி மற்றும் டிரைவர் சந்திப் ஆகியோர் உயிரிழந்தனர். உமாஸ்ரீ கார் டிரைவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து கர்நாடக மாநில போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பிரபல நடிகை மற்றும் அரசியல்வாதிக்கு சொந்தமான கார் விபத்து ஏற்பட்டு மூன்று பேர் பலியாகிய சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.