ஹீரோ வில்லன் என இரண்டு கேரக்டரிலும் நடிக்கும் இளம் நடிகர்!

329

கௌதம் கார்த்திக்…

தமிழ் சினிமாவின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான கௌதம் கார்த்திக் ஹீரோ வில்லன் என இரண்டு கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அறிமுக இயக்குனர் தக்ஷிணாமூர்த்தி ராமர் என்பவர் இயக்கவுள்ள படத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடிக்க உள்ளார்.

மதுரையை பின்புலமாகக் கொண்ட திரைப்படங்கள் பல வந்திருந்தாலும் இந்த படம் முற்றிலும் வித்தியாசமானது என்று இயக்குனர் தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.

முதல் முறையாக இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடிக்க இருக்கும் கௌதமுக்கு இரண்டுமே கேரக்டர்களுமே வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்று இயக்குனர் கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் ரொமான்ஸ் காட்சிகளே இல்லை என்றும் இருப்பினும் பிரபல நடிகை ஒருவர் வலிமையான கேரக்டர் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் அது மட்டுமின்றி 80களில் ஹீரோவாக இருந்த ஒருவரும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.