விஜய் சேதுபதி படத்தின் படப்பிடிப்பில் தீடீரென மயங்கி விழுந்த நடிகை.. அதிர்ச்சியில் படக்குழு!

376

விஜய் சேதுபதி..

வித்யாசமான கதைக்களம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது தீபக் சுந்தர் ராஜன் இயக்கத்தில் நடித்து வரும் படம் அனபெல் சுப்ரமண்யம்.

இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து டாப்ஸீ, ராதிகா சரத்குமார், யோகிபாபு, பிக் பாஸ் ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வந்தது. அப்போது படப்பிடிப்பில் நடித்து கொண்டிருந்த பிக் பாஸ் ஜாங்கிரி, மதுமிதா தீடீரென மயங்கி விழுந்துவிட்டார்.

படப்பிடிப்பின் பொது விரதம் மேற்கொண்ட, உணவு சாப்பிடாமல் இருந்து வந்த நடிகை மதுமிதா தொடர்ந்து காலையில் இருந்து இரவு வரை நடைபெற்ற படப்பிடிப்பு காரணமாக மயங்கி விழுந்தாராம்.

இதனால் பதறிப்போன படக்குழு மதுமிதாவிற்கு முதலுதவி செய்து மயக்கத்தை தெரிவித்தாராம். ஆனால் அதன்பின் கூட படப்பிடிப்பை முடித்த பின்னர் தான் கிளம்பினாராம் மதுமிதா.