ரம்யா பாண்டியன் சகோதரர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

260

ரம்யா பாண்டியன் சகோதரர்…

பிக்பாஸ் வீட்டில் நேற்றுமுன்தினம் அர்ச்சனா வெளியேறியதை அடுத்து தற்போது 9 பேர் உள்ளனர். இன்னும் ஒரு சில வாரங்களில் இறுதி போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இவர்களில் 4 பேர் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்பதும் அவர்களில் ஒருவர் டைட்டில் பட்டம் வெல்வார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இனி வரும் வாரங்கள் போட்டி கடுமையாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் வீட்டில் மட்டுமன்றி சமூக வலைதளங்களிலும் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களை ஆதரித்தும் பிடிக்காத போட்டியாளர்களை கடுமையாக விமர்சனம் செய்தும் ரசிகர்கள் வாக்குவாதம் செய்து வருகின்றனர்.

கிட்ட தட்ட அஜித் விஜய் ரசிகர்கள் போல் பிக்பாஸ் போட்டியாளர்களின் ஆர்மியினர் மோதிக்கொள்வது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா பாண்டியனின் சகோதரர் பரசு பாண்டியன் அவர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும் தனது சகோதரி ரம்யா பாண்டியன் குறித்து ஆரியின் ரசிகர்கள், ஒரு பெண் போட்டியாளர் என்றும் பாராமல் கொச்சையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்றும், தயவு செய்து இதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்றும், ஆரி அவர்களே இதுபோன்ற விமர்சனங்களை பார்த்தால் தன்னுடைய ரசிகர்கள் இவ்வளவு மோசமாக நடந்து கொள்கிறார்களா? என்று வருத்தப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

ஆரி செய்த சாதனைகள் மற்றும் சமூக சேவை மதிப்புக்குரியது என்றும், அதனால் அவருடைய ரசிகர்களும் இது ஒரு கேம் ஷோ மற்றும் இது ஒரு என்டர்டைன்மென்ட் விளையாட்டு போட்டி என்பதை மனதில் வைத்துக் கொள்ளும்படி கேட்டு கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

திறமையான போட்டியாளர்களில் ஒருவர் வெல்லப் போகிறார் என்ற நிலையில் மற்ற போட்டியாளர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்வது தேவையில்லாதது என்று குறிப்பிட்ட பரசுபாண்டியன், நீங்கள் உங்கள் விருப்பத்துக்குரிய போட்டியாளர்கள் மீது அன்பு செலுத்துங்கள், ஆதரவு தாருங்கள் அது தவறில்லை ஆனால் மற்ற போட்டியாளர்களை தரமின்றி விமர்சனம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேபோல் ரம்யா பாண்டியனுக்கு ஆதரவு அளித்து வரும் அவருடைய ரசிகர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றி என்றும் பரசு பாண்டியன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது