பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் மூளைச்சாவு : கேரள திரையுலகினர் அதிர்ச்சி!!

330

ஷாநவாஸ்…

தமிழ்நாடு கேரள எல்லையில் அமைந்துள்ள அட்டப்பாடியில் பிரபல மலையாள சினிமா இயக்குனர் ஷாநவாஸ் மூளைச்சாவு அடைந்தார்.

மலையாள சினிமாவில் எடிட்டராக கால் பதித்தவர் ஷாநவாஸ். ஏராளமான மலையாள சினிமாவில் எடிட்டராக பணிபுரிந்த இவர், கடந்த சில வருடங்களுக்கு முன் முதன்முதலாக கரி என்ற படத்தை இயக்கினார்.

இந்தப் படம் தோல்வியடைந்தாலும் சினிமா விமர்சகர்களின் ஆதரவு கிடைத்தது. இந்நிலையில் பிரபல நடிகர் ஜெயசூர்யாவை நாயகனாக வைத்து சூபியும் சுஜாதயும் என்ற பெயரில் ஒரு படத்தை இவர் இயக்கினார்.

இந்த சமயத்தில் தான் கொரோனா பரவல் காரணமாக லாக் டவுன் அமலுக்கு வந்தது. இதையடுத்து இந்த படத்தை ஓடிடியில் வெளியிடத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கு மலையாள சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் க டு ம் எ தி ர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் அந்த எ தி ர்ப்பையும் மீ றி இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் இந்தப் படத்தின் இயக்குனர் ஷாநவாஸ் தனது அடுத்த படத்திற்காகக் கதை எழுதும் பணியில் தீ வி ரமாக ஈடுபட்டிருந்தார்.

இதற்காக பாலக்காடு அருகே உள்ள அட்டப்பாடி என்ற இடத்தில் இவர் தங்கியிருந்தார். கடந்த சனிக்கிழமை இரவு தி டீ ர் மா ர டை ப்பு ஏ ற்பட்டது. இதையடுத்து அவரை உடனடியாக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்குத் தீ வி ர சி கிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை 9 மணியளவில் இயக்குனர் ஷாநவாஸ் மூளைச்சா வு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.