ரோஷினி…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மக்கள் மத்தியில் பிரபலமான ஒன்று பாரதி கண்ணம்மா.
இதில் கதாநாயகியாக நடித்து வருபவரின் பெயர் ரோஷினி. இவர் இந்த சீரியலின் மூலமாக தமிழ் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார்.
தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் இரு குழந்தைகளுக்கு தாயாக நடித்து வரும் நடிகை ரோஷினி,
கதாபாத்திரத்துடன் ஒன்றிணைந்து போனதனால், மனநிலை மாறி, நிஜ வாழ்க்கையிலும் என் குழந்தை எங்கே,
என் குழந்தையை பார்க்க வேண்டும் என்று கூறி வருவதாக சில தகவல்கள் இணையத்தில் பரவியது.
ஆனால் அவரை விசாரித்தபோது, இதனை முற்றிலும் மறுத்துள்ளார்.
மேலும் அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.