பணத்திற்காக பிக் பாஸ் குழுவை மி ரட்டிய மதுமிதா : போலீஸ் புகாரின் முழு பின்னணி!!

890

மதுமிதா

பிக் பாஸ் வீட்டில் மட்டும் இன்றி, வெளியே வந்ததும் கூட மதுமிதாவால் பெரும் ச ர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் த ற்கொ லை முயன்றதாக கூறி வெளியேற்றப்பட்ட மதுமிதா மீது விஜய் டிவி தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரில் மதுமிதா த ற்கொ லை செய்துக்கொள்வதாக மி ரட்டுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புகாரின் முழு பின்னணியும் தற்போது தெரிய வந்துள்ளது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து மதுமிதா வெளியே செல்லும் போது அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான பில் அனுப்பி வைக்கப்பட்டதாம். ஒப்பந்தத்தில் கூறியபடி மதுமிதா ஏற்கனவே ரூ.11.50 லட்சம் பெற்றுள்ளார். மீதமுள்ள ஒரு நாள் ரூ.80,000 வீதம் 42 நாட்களுக்கான பாக்கி பணத்தை திருப்பி தருவதாக விஜய் டிவி நிர்வாகம் கூறியிருக்கிறது.

அப்போது அதற்கு ஒப்புக்கொண்ட மதுமிதா, திடீரென்று கடந்த 19 ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டீனா என்பவருக்கு வாட்ஸ் அப் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி மி ரட்டல் விடுத்துள்ளார். அதில், இன்னும் இரண்டு நாட்களில் பாக்கி பணத்தை தரவில்லை என்றால் த ற்கொ லை செய்து கொள்வேன், என்று மிரட்டியுள்ளார்.

மேலும், இது குறித்து நடிகை மதுமிதாவிடம் கேட்டதற்கு, “விஜய் டிவியுடன் ஒப்பந்தம் செய்திருப்பதால் எதையும் தெரிவிக்க முடியாது. ஆனால், தனக்கு தர வேண்டிய நிலுவை தொகையை விஜய் டிவி தரவில்லை. இந்த புகாரை சட்ட ரீதியாக எதிர் கொள்வேன்” என்று தெரிவித்திருக்கிறார்.