லாஸ்லியா தந்தை பிக்பாஸ் வீட்டில் செய்த செயல் : சாண்டியின் முதல் மனைவி எடுத்த திடீர் முடிவு!!

859

சாண்டியின் முதல் மனைவி

குணச்சித்திர வேடங்களில் பல திரைப்படங்களில் தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகை காஜல் பசுபதி. இவர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை பார்த்து அடிக்கடி தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் புதிய பதிவை வெளியிடுபவர் ஆவார்.

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகை காஜல் பசுபதியும் , இந்நிகழ்ச்சியைப் பற்றி என தன்னுடைய சொந்த கருத்துக்களை தினந்தோறும் வெளியிட்ட வண்ணம் இருந்தார்.

இந்நிகழ்ச்சியில் நடிகர் கவின் மற்றும் இலங்கையை சேர்ந்த பெண்ணான லாஸ்லியா ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது கவின் , லாஸ்லியா இடையேயான காதல் விவகாரம்தான்.

கவின் , லாஸ்லியா இடையேயான காதல் விவகாரத்தை பற்றியும் நடிகை காஜல் பசுபதி தினமும் புதிய வெளியிட்டவர் பதிவுகளை வெளியிட்ட வண்ணம் இருந்தார்.

கடந்த சில வாரங்களாகவே நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆகியோர் வந்து அவர்களை ஊக்குவிப்பதற்காக வந்த வண்ணம் இருந்தனர்.

இந்நிலையில் லாஸ்லியாவின் பெற்றோரும் இலங்கையிலிருந்து அவரைக் காண்பதற்காக வந்திருந்தனர் . அவர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த உடனே லாஸ்லியாவிடம் கவின் உடன் அவருக்கு ஏற்பட்ட பழக்கத்தை பற்றி கோபமாக கேட்டனர்.

இதனால் பிக்பாஸ் வீடு பரபரப்பு நிறைந்த இடமாக மாறியது. லாஸ்லியாவின் பெற்றோர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த எபிசோடை பார்த்த நடிகை காஜல் பசுபதி,

“இனிமேல் நான் கவின் லாஸ்லியா ஆகியோரின் காதலைப் பற்றி விமர்சிக்க போவதில்லை” என்று கூறியுள்ளார். இதனை பார்த்த காஜல் பசுபதி ரசிகர்கள் எதற்காக இந்த முடிவை எடுத்துள்ளீர்கள் என்று கமென்ட் செய்த வண்ணம் உள்ளனர்.

நடிகை காஜல் பசுபதி ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்தாண்டு போட்டியாளராக பங்கேற்றார். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடன இயக்குனர் சாண்டியின் முன்னாள் மனைவி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.