கடற்கரையில் மிளிரும் நடிகை கீர்த்திசுரேஷ்… – உருகும் ரசிகர்கள்…!

326

கீர்த்தி சுரேஷ்..

மலையாளத்தில் தயாரிப்பாளரான சுரேஷ் குமார், நடிகை மேனகா தம்பதியின் இரண்டாவது மகள் தான் கீர்த்தி சுரேஷ். இவர் தன் அப்பாவின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்,

அதன் பின் வளர்ந்த பிறகு, விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ்.

அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

இவர் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளி அன்று ரீலீஸ் அகவுள்ளது என்று அதிகாரப் பூர்வமாக கூறியுள்ளனர். மேலும், கீர்த்தி சுரேஷ் இதுவரை குடும்பபாங்கான கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடித்து வருகிறார்.

ஆனால் சமீபத்தில் வெளியான ‘RangDe’ படத்தில் கொஞ்சம் கவர்ச்சி காட்டியுள்ளார். இந்தநிலையில், கடற்கரையில், இவரது செல்ல நாய்க்குட்டியுடன் அழகான போஸ் கொடுத்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் “Butter செஞ்ச சிலை..” என்று கூறி வருகிறார்கள்.