7 வருடம் கழித்து மீண்டும் நடிகை த்ரிஷா எடுத்துள்ள முடிவு – என்னவென்று தெரியுமா?

320

த்ரிஷா..

நடிகை த்ரிஷா கிட்டத்தட்ட 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருக்கிறார்.

சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை த்ரிஷா.

இதனை தொடர்ந்து, முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாகியுள்ளார்.

இவர் நடிப்பில் உருவான ராங்கி, கர்ஜனை, சதுரங்க வேட்டை 2 உள்ளிட்ட படங்கள் தயாராகி, வெளிவராமல் இருக்கிறது.

இதுமட்மின்றி, பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்திலும் த்ரிஷா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை த்ரிஷா 7 வருடம் கழித்து மீண்டும் கன்னடத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.