ஷபானா..
ஜீ தமிழில் செம்பருத்தி என்ற சீரியல் சில வருடங்களாக ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த சீரியலின் முக்கிய ஜோடியாக முதலில் கார்த்திக் மற்றும் ஷபானா இருவரும் நடித்தார்கள்.
பின் கார்த்திக் சீரியலில் இருந்து வெளியேற அவருக்கு பதிலாக ஒரு புதுமுக நடிகர் நடித்து வருகிறார். முன்பு இருந்ததை போல சீரியலுக்கு TRP கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.
இந்த நிலையில் தான் ஷபானா சீரியல் நடிகர் ஆர்யன் என்பவரை காதலிக்கும் விஷயம் வைரலாகி வந்தது.
அந்த ஆர்யன் வேறுயாரும் இல்லை விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் செழியன் தான்.
ஆர்யன் லேட்டஸ்டாக தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரே மாதிரியான மோதிரம் அணிந்த தனது காதலியுடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
இதனால் இருவருக்கும் நிச்சயதார்த்தம் ரகசியமாக முடிந்துவிட்டதோ என பேச்சு எழும்பியுள்ளது.
View this post on Instagram