கஷ்டம்…
சினிமாவில் கால்பதிப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. முன்பெல்லாம் சினிமா வாய்ப்பு என்பது மிகவும் கஷ்டம். பெரிய நடிகர் நடிகைகளின் வாரிசாக இருந்தால் சுலபமாக திரையில் நடித்து விடலாம். ஆனால் தற்போது அப்படியல்ல.. திறமை இருந்தால் போதும்.
அப்படித்தான் செய்திவாசிப்பாளராக அறிமுகமாகி, சின்னத்திரையில் கால்பதித்த பிரியா பவானி ஷங்கர், தனது அழகாலும் வசீகரத்தாலும் ஏராளமான ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் அழகு தேவதையாக வலம் வந்த பிரியா, பின்னர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதையடுத்து மேயாதமான் படம் மூலம் பெரியதிரைக்கு வந்த அவர், தற்போது பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.
என்னதான் படங்களில் பிசியாக இருந்தாலும், சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாகவே இருப்பார். அந்த வகையில் இன்று இன்ஸ்டாகிராமில் சூரிய உதயத்தை வரவேற்று ஒரு போட்டோவை பதிவிட்டிருந்தார்.
அந்த போட்டோவை பார்த்த ரசிகர் ஒருவர் வா சுருதி போலாம் என்ற பதிவிட்டுள்ளார். தற்போது இவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.