ரசிகர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய நடிகர் லாரன்ஸ், என்ன செய்தார் தெரியுமா?

778

ராகவா லாரன்ஸ்….!

திரையுலகில் தான் நடித்தால் மட்டும் போதும் என்று கூட சிலர் இருக்கிறார்கள். ஆனால், நடிப்பதையும் தவிர்த்து ரசிகர்களுக்கு மக்களுக்கும் தன்னால் முடிந்தவரை உதவவேண்டும் என்று கூட பலர் உள்ளனர். அதில் நடிகர் ராகவா லாரன்ஸும் ஒருவர்.

அண்மையில் கூட இணையத்தில் இவரிடம் பலரும் உதவி கேட்டு வந்தார்கள். அதற்கு லாரன்ஸ் அவர்கள், “என்னிடம் நிறைய பேர் உதவி கேட்டு வருகிறார்கள் ஆனால், என்னால் முடிந்த வரை தான் உதவ முடிகிறது இதனால் நான் அரசாங்கத்திடம் உதவி கேட்க முயற்சிக்க போகிறேன்” என்று கூறினார்.

அதனை நிறைவேற்றும் விதமாக இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களை சந்தித்துள்ளார். தான் கேட்டதை விட அதிகமாகவே உதவுவதாக கூறினார் அவர் என ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.