மோசமாக நடந்துகொண்ட தளபதி 64 படக்குழுவினர் : பார்வையற்றோர் பள்ளி ஆசிரியர் புகார்!!

780

தளபதி 64 படக்குழுவினர்..

நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் முதன் முறையாக இணையும் படம் தான் தளபதி 64. இப்படத்தின் முதல் மற்றும் இராண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ள நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பி கர்நாடகாவில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் சில காட்சிகள் மட்டும் தற்போது சென்னையில் உள்ள பார்வையற்றோர் பள்ளி ஒன்றில் மூன்று நாட்களுக்கு முன்பு நடந்த முடிந்துள்ளது.மேலும், அதில் படகுழுவினரால் சில சங்கடங்கள் தங்களுக்கு நடந்துள்ளது என்று அந்த பள்ளியின் ஆசிரியர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதாவது “தளபதி 64 பட குழுவினர் தங்களது பள்ளியில் சிகரெட் பிடித்து விட்டு அங்கேயே போடுவது மற்றும் குப்பைகளை பொது இடத்தில போடுவது போன்ற தவறான செயல்களை செய்துள்ளனர். மேலும், பார்வையற்ற மாணவர்களையும் அவர்கள் தரக்குறைவாக நடத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி ரசிகர்கள் அதிகம் கூடுவதால் பள்ளிக்கு வந்த மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவர் இடமும் மாணவர்களிடம் வந்து 2 நிமிஷம் உரையாற்றும்படி கேட்டுள்ளனர். இதற்கு லோகேஷ் அவர்கள் வந்து பேசிவிட்டு சென்று விட்டாராம். ஆனால், விஜய் இப்போது வருகிறார் அப்போது வருகிறார் என மாணவர்களை காக்க வைத்திருந்தனராம்.

மாணவர்கள் விஜய்யை காண ஒரு இடத்தில் குழுவாக வரவைக்கப்பட்டனர். ஆனால் பல மணி நேரம் காத்திருந்த பிறகும் விஜய் வந்து சந்திக்காமல் ஷூட்டிங் முடிந்து ரகசியமாக சென்றுவிட்டார்” என அந்த ஆசிரியம் குற்றம் சாட்டியுள்ளார்.