கதை எழுதியது என்னவோ விஜய்க்கு.. ஆனால் நடிக்க போவது ரஜினி : சீக்ரெட் அப்டேட்!!

891

விஜய்-ரஜினி…!

சினிமாவில் ஒருவருக்கு எழுதிய கதையில் இன்னொருவர் நடிப்பது ஒன்றும் புதிதல்ல. அந்த வகையில் எதிர்பாராத விதமாக பல நடிகர்களுக்கு ஹிட் கிடைத்துள்ளது. அதை ஒரு சில இயக்குனர்கள் வெளிப்படையாக பேட்டிகளில் தெரிவித்துவிடுவர்.

இது பல முன்னணி நாயகர்கள் இளம் கதாநாயகர்களாக இருக்கும்போதே இந்த மாதிரி சில சம்பவங்களால் பெரும் வெற்றியும் பெற்றுள்ளனர். அதே சமயத்தில் கதை தேர்வில் சொதப்பி தோல்வியும் பெற்றுள்ளனர். அந்நாளில் தளபதி விஜய்க்கு நிறைய கதைகள் கைவிட்டுச் சென்றது.

அதற்கு காரணம் அவருக்கு கதை பிடிக்காமல் இருக்கலாம். விஜய் மட்டுமல்ல, அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களும் தங்களக்கு கதைபிடிக்காமல் நிராகரித்த திரைப்படங்கள் மற்ற நடிகர்களின் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த தகவல் கௌதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்கப் போகிறார் என்பது. அந்த படத்திற்கு யோகன் அத்தியாயம் ஒன்று என பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளிவந்தன.

இந்த படத்தின் மீது அப்போதே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் கதையில் சிறு குழப்பம் ஏற்பட்டதால் விஜய் படத்திலிருந்து விலகினார். தற்போது அந்த கதையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.

சமீபத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் அந்த கதையை ரஜினியிடம் கூறியிருக்கிறார். ரஜினியும் பச்சைக்கொடி காட்டி விட்டதாக தெரிகிறது. இந்த படத்தை மாபெரும் பொருட்செலவில் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கலாம் எனவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.ரஜினி நடித்த தர்பார் திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.