அரை மணிநேரம் தேம்பி தேம்பி அழுத சமந்தா : ஏன் என்று தெரியுமா?

993

நட்சத்திரத் தம்பதிகளான நாகசைதன்யா, சமந்தா இருவரும் திருமணத்திற்கு பிறகு முதன்முதலாக இணைந்து நடித்து சமீபத்தில் வெளிவந்து மகத்தான வெற்றி பெற்ற படம் மஜிலி.

அந்த படத்தின் வெற்றி பற்றி வந்த முதல் செய்தியைக் கேட்டதும் அரை மணி நேரம் அழுததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார், சமந்தா.

மேலும், அதிகாலை 2.30 மணிக்கே எழுந்து ஒன்றைரை மணிநேரம் படத்தின் வெற்றிக்காகவும், கணவருக்காகவும் பிரார்த்தனை செய்தாராம்.

படத்தின் வெற்றி நாகசைதன்யாவுக்கு இந்த நேரத்தில் தேவைப்படும் ஒரு வெற்றியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.