பிகில் சாதனையை முறியடிக்க மற்ற நடிகர்களுக்கு இன்னும் பல காலம் ஆகும்.. மாஸ் காட்டும் அர்ச்சனா கல்பாத்தி!!

600

2019ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு விஜய் நயன்தாரா நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி 300 கோடி வசூல் செய்த திரைப்படம்தான் பிகில். 300 கோடி ச மாச்சாரத்தை படக்குழுவினர் வெளியிடவில்லை என்றாலும் அரசாங்கம் வெளியிட்டது.

ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் பிகில் படத்தை தயாரித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் விஜய் ரசிகர்கள் தலைகால் புரியாமல் சமூக வலைதளங்களில் ஏகத்துக்கும் கொண்டாடி வந்தனர். அதே சமயத்தில் மற்ற ரசிகர்களுடன் வ ம்பிழுத்து வந்ததையும் பார்க்க முடிந்தது.

அதிகாரப்பூர்வமாக அறிவித்தாலும் பிகில் படம் ஃப்ளாப் என பலரும் இன்னும் சமூக வலைதளங்களில் கூறிக் கொண்டுதான் இருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் அந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியிடம் தொடர்ந்து அது மாதிரியான கேள்விகளையே வைத்து வருகின்றனர்.

சமீபத்திய பேட்டியில் கூட அர்ச்சனா கல்பாத்தியிடம் அந்த கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அர்ச்சனா கல்பாத்தி இந்த முறை மிகவும் தைரியமாகவும் க ர்வத்துடனும் பதிலளித்துள்ளது விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. அவர் கூறியதாவது, பிகில் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருந்தாலும் அதை விட அதிகமாகவே லாபம் கொடுத்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிகில் படம் படைத்த சாதனைகளை மு றியடிக்க பலருக்கும் நீண்டகாலம் ஆகும் எனவும் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் விஜய்யை வைத்து மீண்டும் படம் தயாரிக்க ஆர்வமாக இருப்பதையும் வெளிக்காட்டியுள்ளார். மேலும் எதை வைத்துக் கொண்டு பிகில் படம் தோல்வி என்று கூறுகிறார்கள் என்பது தான் தனக்கு இப்போது வரை புரியவில்லை எனவும் ஏ ளனமாக சிரித்துள்ளார்.