தன்னை விட 10 வயது குறைந்த நபரை இரண்டாம் திருமணம் செய்யவுள்ள சுரேகா வாணி… அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

35350

சுரேகா வாணி..

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சுரேகா வாணி. திருமணம் ஆன சில வருடங்களிலேயே ஒரு பெண் குழந்தைக்கு தாயான இவர் அடுத்த சில மாதங்களில் தன்னுடைய கணவரை இழந்தார். இது ரசிகர்களை மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த சுரேகா வாணி தற்பொழுது தன்னை விட பத்து வயது குறைந்த ஒரு நபரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழில் மெர்சல், விசுவாசம், உத்தமபுத்திரன், வந்தா ராஜாவாதான் வருவேன், மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

தெலுங்கில் வருடத்திற்கு 10 படங்கள் நடித்து விடுகிறார் சுரேகா வாணி. 2019ஆம் ஆண்டு இவரது கணவர் சுரேஷ் உடல்நிலை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை எடுத்து வந்தார் ஆனால் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார்.

இது ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியளிக்கிறது இவர் தொலைக்காட்சி சீரியல் ஏற்கனவே சின்னத்திரையில் பல சீரியல்களுக்கு வசனகர்த்தாவாகவும் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ப்ரீத்தி என்ற மகள் உள்ளார். இப்படி இருக்கும் நடிகை சுரேகா வாணி தற்போது தன்னை விட 10 வயது சிறிய ஒரு நபரை தன்னுடைய மகளின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து நடிகை சுரேகா வாணி இதுவரை எந்த பதிலும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வரும் நிலையில் தெலுங்கு சீரியல்களில் கலக்கி வரும் இளம் நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள தயாராகி வருகிறார் சுரேகா வாணி என்று கூறுகிறார்கள். தற்பொழுது 45 வயதாகும் சுரேகா வாணி 36 வயது உடைய அந்த நடிகரை விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.