நந்தினி சீரியலில் இருந்து திடீரென வெளியேறிய பிரபல நடிகை : இதுதான் காரணமா?

1234

படங்களை விட சீரியல்கள் தான் மக்களிடம் அதிகம் போய் சேர்கிறது. அப்படி கன்னட சினிமாவிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் நந்தினி. இதை நிதின் என்பவர் இயக்க நாம் அனைவருக்கும் தெரிந்த நடிகர் ரமேஷ் அரவிந்த் சீரியலை தயாரிக்கிறார்.

600 எபிசோடுகளை கடந்து முதல் இடத்தில் TRPல் இருக்கும் இந்த சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார் காவ்யா. காரணம் அவருடைய வேடத்திற்கு முக்கியத்துவம் இல்லாமல் போனதாம். இதனால் அவரே இந்த சீரியலில் இருந்து விலகுவதாக கூறியிருக்கிறார்.

காவ்யாவின் வேடத்திற்கு வேறொரு நடிகையை தேடி வருகின்றனர் சீரியல் குழுவினர்.