இவ்வளவு பெரிய விடயத்தை மறைக்க தான் நேசமணி டிரண்டிங் செய்யப்படுகிறதா? தீயாக பரவும் தகவல்!!

728

காட்டாங்களத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதை திசைதிருப்பவே நேசமணி டிரண்டிங் செய்யப்படுகிறதா என இணையதளவாசிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.

சமூக வலைத்தளத்தில் எந்த ஹேஷ்டேக்குகள் எப்போது ட்ரெண்ட்டாகும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. யாராவது ஒரு கருத்தைச் சொல்ல போய் அது இந்தியளவில் ஹேஷ்டேக்குகளாக உருவாக்கப்பட்டு ட்ரெண்ட்டாகும்.

அந்த வரிசையில் #Pray_for_Neasamani, #PrayforNesamani என்ற ஹேஷ்டேக்கு இந்தியளவில் ட்ரெண்ட்டாக தொடங்க, என்னவென்று பலரும் பார்த்து உலகளவில் ட்ரெண்ட்டாக வைத்தனர். இதனிடையில் நேசமணி டிரண்டுக்கு வேறு காரணம் இருப்பதாக சமூவலைதளத்தில் சிலர் கூறி வருகிறார்கள்.

அதாவது சில தினங்களுக்கு முன்னர் சென்னையை அடுத்த காட்டாங்களத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் அடுத்தடுத்து ஒரு மாணவரும், மாணவியும் மாடியில் இருந்து கீழே குதித்து உயிரிழந்தனர்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்....

இது தற்கொலை என கூறப்படும் நிலையில் இந்த விடயத்தை திசை திருப்பவே #Pray_for_Neasamaniடேக் டுவிட்டரில் டிரண்ட் செய்யப்பட்டு வருவதாக சமூகவலைதளங்களில் சிலர் தெரிவித்துள்ளனர்.