ஐஸ்வர்யா மேனன்..
கேரளா சொந்த மாநிலமாக இருந்தாலும் தமிழகத்தில் ஈரோட்டில் பிறந்தவர் ஐஸ்வர்யா மேனன். எனவே, மலையாளத்தை விட தமிழ் நன்றாக பேசுவார். இவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை கூட சென்னையில் முடித்தார்.
மாடலிங் மற்றும் சினிமாவில் ஆர்வம் கொண்ட ஐஸ்வர்யா மேனன் ஆப்பிள் பெண்ணே என்கிற திரைப்படத்தில்தான் அறிமுகமானார். அதன்பின் சில படங்களில் நடித்தார்.
ஆனால், முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு அவரை தேடிவரவில்லை. எனவே, கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். சினிமா வாய்ப்புக்காக கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், படகில் கடலுக்கு சென்று கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘மாண்டேஸ் புயல் வர நேரத்துல கடலில் கவர்ச்சி தேவையா’ என கிண்டலடித்து வருகின்றனர்.