இதுதான் பிரச்சனை.. ரகசிய திருமணம் செய்ததற்கு உண்மை காரணத்தை கூறிய சஞ்சீவ்!!

827

உண்மை காரணத்தை கூறிய சஞ்சீவ்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடித்து அதன்பிறகு நிஜ வாழ்க்கையிலும் காதலிக்க ஆரம்பித்தவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா ஜோடி.

விஜய் டிவி நடத்திய ஒரு விழாவில் அவர்களுக்கு மேடையிலேயே மாலை மாற்றி நிச்சயதார்த்தம் செய்து வைத்தனர். இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் ரகசியமாக திருமணம் நடைபெற்று முடிந்துவிட்டதாக தகவல் வெளியானது.

திடீரெனெ ரகசிய திருமணம் செய்தது ஏன் என்ற கேள்விக்கு பதில் அளித்த சஞ்சீவ் “எங்களுக்கு மே 27ம் தேதியே திருமணம் முடிந்துவிட்டது. ஆல்யா மானசா வீட்டில் எங்கள் காதலுக்கு ஒப்புதல் இல்லை. எவ்வளவோ பேசி பார்த்தோம். வேறு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள். அதனால் அவரசமாக திருமணம் செய்துகொண்டோம்” என கூறியுள்ளார்.