நடிகர் நாகார்ஜூனாவின் பண்ணையில் வீசிய துர்நாற்றம் : ஆய்விற்கு சென்ற அதிகாரிகளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!!

764

நடிகர் நாகார்ஜூனாவின் பண்ணையில் வீசிய துர்நாற்றம்..

இந்தியா – ஹைதராபாத்தில், பிரபல நடிகர் நாகார்ஜூனாவுக்குச் சொந்தமான பண்ணை தோட்டத்தில் மனித எலு ம்புக் கூடு இருந்தது பற்றி தெலுங்கானா பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,நடிகர் நாகார்ஜூனா, தெலுங்கானா மாநிலம் மெகபூப்நகர் மாவட்டத்தில் சாத் நகர் அருகே பாப்பிரெட்டி குடா என்ற கிராமத்தில் 40 ஏக்கரில் விளை நிலம் ஒன்றை அண்மையில் வாங்கியிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அந்த விளைநிலம் இயற்கை விவசாயம் செய்வதற்கு ஏற்ற வகையில் உள்ளதா என மண்ணின் தன்மையை அறிவதற்காக நிபுணர் குழுவினை நாகர்ஜூனா கடந்த புதன்கிழமை அனுப்பி வைத்திருந்தார்.

அங்கு சென்ற அந்தக் குழு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியுள்ளது. எங்கிருந்து வருகிறது என்பதை அறியும் நோக்கோடு தேடிய போது களஞ்சிய அறையில் இருந்து இந்த துர்நாற்றம் வருவதை அறிந்து அந்த களஞ்சிய அறையை திறந்துள்ளனர்.

அங்கு மனித எ லும்புக் கூடு கிடந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பொலிஸிற்கு தகவல் வழங்கியதையடுத்து, எ லும்புக் கூட்டை மீட்ட பொலிஸார் விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், நிலத்தை இந்த மாதம் முதல் வாரத்தில் நாகார்ஜூனாவின் மனைவி நடிகை அமலா பார்வையிட்டு இருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அங்கிருந்து மீட்கப்பட்ட எ லும்புக் கூடு சுமார் 35 வயது மதிக்கத்தக்கவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் எனவும் அந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உ யிரிழந்த நபர் 6 மாதத்திற்கு முன் உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர் எனவும், அவர் டீ சேர்ட் மற்றும் காற்சட்டை அணிந்திருக்கலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.