அந்த பழக்கத்திற்கு நான் அடிமையாகிவிட்டேன் : அதனால் தான் படங்களில் நடிக்கவில்லை : ஆண்ட்ரியா அதிரடி!!

1148

ஆண்ட்ரியா..

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக்கூடியவர்.

அதில் ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது.

அவருக்கு முறிந்த சிறகுகள் என்ற பெயரில் கவிதை தொகுப்பை எழுதியுள்ளார். தன் சமூகம் பற்றி வரலாறையும் அவர் புத்தகமாக எழுதப்போகிறாராம்.

பெங்களூரில் நடந்த கவிதை நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் சில கவிதைகளை வாசித்திருக்கிறார். அதில் சோகம் அதிகமாக இருக்க ஏன் என அவரை கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு அவர் திருமணமான ஒரு நபருடன் நான் தொடர்பு வைத்திருந்த இருண்ட காலத்தை துயரத்தை அடக்க முடியாமல் எழுதியவை என கூறினார்.

சினிமாவிற்கு திடீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன். மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பாதித்திருந்தது என கூறியுள்ளார்.