பிக்பாஸ் டைம்ல எல்லோரும் கொண்டாடினாங்க.. இப்போ யாருமே இல்லை.. புலம்பும் நடிகை!!

1223

புலம்பும் நடிகை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலம் ஆன நடிகை ஒருவர் தற்போது பட வாய்ப்புகளே இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார். தமிழகத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இதன் மூலம் பலர் சினிமா உலகில் அடையாளம் காணப்பட்டார்கள்.

யார் என்றே தெரியாத பலர் இணையம் முழுக்க இந்த நிகழ்ச்சி காரணமாக வைரலாகி பெயர் பெற்றார்கள். அப்படித்தான் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அந்த நடிகையும் வைரலானார். முதலில் அவர் பெரிய நடிகை எல்லாம் கிடையாது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு பெரிய பிரேக் கொடுத்தது.

தமிழகமே கொண்டாட்டம் சரியாக சொல்ல வேண்டும் என்றால் தமிழகமே அவரை வைத்து கொண்டாடியது. பல பேர் அவரை குறித்து டிவிட் செய்தனர். அந்த 80+ நாட்களில் அவரின் வாழ்க்கையே தடம் மாறியது. யார் வெற்றி இதையடுத்து அவர் வெளியே வந்த பின் பெரிய அளவில் கொண்டாடப்படுவார் என்று எல்லோரும் நினைத்தார்கள்.

அவரும் அப்படித்தான் நினைத்தார். ஆனால் அவர் வெளியே வந்த பின் அடையாளமே தெரியாத நிலைக்கு சென்றார். ஒரு சில படங்களில் சிறிய ரோலில் நடித்தார். மிக மோசம் ஆனால் அதற்கு பின் அவருக்கு பட வாய்ய்ப்புகளே கிடைக்கவில்லை. இப்போது ஒரு பட வாய்ப்பு கூட இல்லாமல் இருக்கிறார். பிக்பாஸ் நேரத்தில் எல்லோரும் கொண்டாடினார்கள், இப்போது யாருமே இல்லை என்று அவர் புலம்பி வருகிறார்.