என்னை சாவடிச்சிருங்க : ஸ்ரீ ரெட்டியின் உருக்கம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

என்னுடைய பிறப்பை நினைத்து நானே வேதனைப்படுகிறேன் என்று நடிகை ஸ்ரீரெட்டி உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

தமிழ்-தெலுங்கு திரையுலகில் திரைப்பட வாய்ப்புக் கேட்கும் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாக நடிகை ஸ்ரீரெட்டி குற்றம்சாட்டினார். இது தொடர்பாகத் தெலுங்கு நடிகர்கள் சங்க அலுவலகம் முன்பு ஆடையை களைத்து அரை நிர்வாண போராட்டம் நடத்திப் பரபரப்பை ஏற்படுத்தினார்.

பின்னர், தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் மீது பாலியல் புகார்களை அடுக்கி அதிர்வலையை ஏற்படுத்தினார்.

இதையடுத்து சினிமா வாய்ப்பு தேடி சென்னை வளசரவாக்கத்தில் வாடகை வீட்டில் குடியேறிய ஸ்ரீரெட்டி தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்கிறார்.

இருப்பினும் சினிமா வாய்ப்புக்காக ஸ்ரீரெட்டி இப்படி பொய் புகார் கூறுகிறார் என்றும் படுக்கைக்கு சென்று சினிமா வாய்ப்பு பெற என்ன அவசியம்? நீயெல்லாம் நல்ல குடும்பத்து பெண்ணா? என்றும் பலரும் அவரை வசைபாடி ஓய்ந்து விட்டனர்.

இருப்பினும் ஸ்ரீரெட்டியின் இந்த செயல்கள் பொதுவெளியில் இருப்பவர்களை அவரின் குடும்பத்தையே அதிகம் பாதித்து இருக்கும். குறிப்பாக ஸ்ரீ ரெட்டியின் அம்மா இந்த விவகாரத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீரெட்டி ஒரு உருக்கமான பதிவை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ‘என்னுடைய பிறப்பை நினைத்து நானே வேதனைப்படுகிறேன். என்னை போன்ற ஒரு பெண்ணுக்கு வேறு எந்த தாயும் பிறப்பு கொடுத்திருக்க மாட்டாள்.

என்னை பெற்றது ஒன்றுதான் நீங்கள் செய்த தவறு. அதனால் தான் நான் உங்களுக்கு இப்படி ஒரு கொடூரமான தண்டனையை கொடுத்திருக்கிறேன். எனக்கு தெரியும் நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை. ஆனால் நான் உங்களுக்கு தொல்லை கொடுத்துள்ளேன். என்னால் உங்களை பல பேர் தகாத வார்த்தையால் திட்டுகிறார்கள்.

நீங்கள் தினம்தோறும் ஒரு பிணத்தை போல் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். என் தவறுக்காக எல்லோரும் உங்களை குற்றம்சாட்டுகிறார்கள். நீங்கள் சொல்லுங்கள், நான் என்ன செய்ய வேண்டும். நீங்கள் கொடுத்தது இந்த உடம்பு, என் மூச்சை நீங்களே எடுத்து கொள்ளுங்கள்’ என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். பதிவிற்கு சிலர் ஆறுதலாகவும் சிலர் எதிர்மறையாகவும் கருத்து கூறி வருகின்றனர்.

கமல்ஹாசனை நோக்கி செருப்பு வீச்சு!!

மதுரை திருப்பரங்குன்றத்தில் பொதுக்கூட்ட மேடைக்கு வந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை நோக்கி காலணி வீசப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், அரவக்குறிச்சி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது தீவிரவாதம் குறித்து பேசினார்.

அதில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து எனவும், அவர் தேச தந்தை காந்தியை படுகொலைச் செய்த நாதுராம் கோட்சே என கூறியிருந்தார்.

கமல்ஹாசனின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், பிரதமர் மோடி துவங்கி சினிமா பிரபலங்கள் பலரும் அவருடைய கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர்.

இதனால் 2 நாட்களாக கமல்ஹாசன் தேர்தல் பரப்புரையில் ஈடுபடாமல் இருந்தார். அவருடைய வீட்டிற்கும் பொலிஸார் பலத்த பாதுகாப்பு போட்டிருந்தனர்.

இந்த நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த கமல்ஹாசன், அரவக்குறிச்சியில் தான் பேசியது குறித்து விளக்கம் கொடுத்தார்.

அப்போது பாஜக கட்சியை சேர்ந்த 10க்கு ம் மேற்பட்ட இளைஞர்கள் திடீரென கமல்ஹாசனை நோக்கி காலனியை வீசியெறிந்தனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்களை கைது செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீண்ட நாளாக காத்திருந்த அனுஷ்காவுக்கு தேடி வந்த அதிர்ஷ்டம்!!

நடிகை அனுஷ்கா தமிழ் சினிமாவில் பெரும் இடத்தை பிடித்து வைத்திருந்தார். அருந்ததி, பாகுபலி ஆகிய படங்கள் மிக முக்கியமானதாக அமைந்தது. பாகமதி படத்திற்கு பின் அவர் படங்களில் நடிக்கவில்லை. 35 வயதை கடந்துவிட்ட அவருக்கு வீட்டில் மாப்பிள்ளை தேடி வருகிறார்கள்.

அதே வேளையில் அவரும் அமெரிக்காவில் உடல் எடை குறைப்பதற்காக யோகா, சிகிச்சைகள் என எடுத்து வந்தார். மேலும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியானது.

மேலும் இப்படத்தின் ஷூட்டிங் அமெரிக்காவில் நடைபெறவுள்ளதாம். இதற்காக O1 விசாவுக்காக அவர் நீண்ட நாளாக காத்திருந்தார். தற்போது அதற்கான அனுமதி கிடைத்துவிட்டதாம்.

இதனால் அனுஷ்கா விரைவில் ஷூட்டிங்குக்காக அமெரிக்கா செல்லவுள்ளார். இப்படத்தில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே என பலர் நடிக்கிறார்கள்.

என்னுடைய ஆசை எல்லாம் இது தான் : கணவர் ராம்கிக்காக இப்போதும் நெகிழும் நிரோஷா!!

தமிழ் சினிமாவில் 90’களில் வெற்றிகரமாக வலம வந்த நடிகைகளில் ராதிகாவின் தங்கையான நிரோஷாவும் ஒருவர், தன்னுடைய முதல் படமான அக்னி நட்சத்திரமே இவரை வேற லெவலில் அறிமுகப்படுத்தியது.

அதன் பின் பாண்டிய நாட்டு தங்கம், இணைந்த கைகள் என நடித்து வந்த இவர், நடிகர் ராம்கியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும், சீரியல்கள் மற்றும் வெள்ளித்திரையில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவரின் பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் என்னுடைய திரைப்பயணத்தில் நிறைய ஏற்றத்தாழ்வுகளை சந்தித்துருக்கிறேன்.

ஆனால் நான் அதைப் பற்றி எல்லாம் கவலைப்பட்டதில்லை. அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் என்னுடைய கணவர் ராம்கி தான், நாங்க இருவரும் போராடித்தான், கல்யாணம் செய்துகிட்டோம்.

அது ரொம்பவே சுவாரஸ்யமானது. இப்போவரை நான் நடிச்சுகிட்டிருந்தாலும், சினிமா துறையில் எனக்குப் பெரிசா எந்த ஆசையுமில்லை. ஆனா, என் கணவருக்கு அதிக புகழ் கிடைக்கணும்னு ஆசைப்படறேன் என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

பிரபல நடிகரை திருமணம் செய்ய ஆசைப்படும் நடிகை டாப்ஸி : யார் அவர் தெரியுமா?

நடிகை டாப்ஸி ஆரம்பத்தில் கதை சரியாக தேர்வு செய்யாமல் கவர்ச்சி என்ற ரூட்டில் சென்றவர். பின் சுதாரித்துக் கொண்டு தனக்கு நடிப்பை வெளிக்காட்ட முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அவரது நடிப்பில் ஹிந்தியில் வந்த பிங்க் என்ற படத்தின் ரீமேக்கில் தான் இப்போது அஜித் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் நடித்து வருகிறார். தெலுங்கு, தமிழை தாண்டி தற்போது பாலிவுட் படங்களில் தான் அவர் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார், அப்போது அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் இந்த நடிகர்களில் யாரை திருமணம் செய்ய ஆசை என கேட்டுள்ளனர். அதற்கு டாப்ஸி நடிகர் விக்கி கோஷலை திருமணம் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 3க்காக அட்டகாசமாக போட்டோசூட் நடத்திய கமல்ஹாசன் வைரலாகும் புகைப்படம்!!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு சீசனாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதனால் அந்த தொலைக்காட்சியின் டி.ஆர்.பி ரேட்டும் வேற லெவலுக்கு சென்றது.

கடந்த இரண்டு சீசனையும் நம்மவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதால் என்னவோ, பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக மூன்றாவது சீசனில் அடி எடுத்து வைத்துள்ளது.

இந்நிலையில், இன்று பிக்பாஸ் விரைவில் என்று ப்ரோமோ வீடியோ போல் ஒரு வீடியோவினை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது.

அதில், கமல்ஹாசன் பார்ப்பதற்கே அட்டஹாசமாக இருந்தார். இதையடுத்து, அடுத்த ப்ரோமோ வீடியோவிற்காக கமல்ஹாசன் போட்டோசூட்டுக்கு போஸ்கொடுத்த புகைப்படம் தற்போது அதிகளவில் வைரலாகி வருகிறது.

இதைப்பார்த்த ரசிகர்கள், விருமாண்டி ரிட்டன் அதே முறுக்கு மீசையுடன் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் 3ல் இந்த மூன்று பிரபலங்களா? கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!!

விஜய் டிவியில் இன்று பிக்பாஸ் 3-ஐ பற்றிய புரோமோ ஒன்று வெளியானது, பிக்பாஸ் 3 எப்போது வரும் என்று பலரும் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், இந்த வீடியோ வெளியாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் சீரியல் நடிகை ஆல்யா மானாசா, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் விஸ்வாசம், காலா படங்களில் நடித்த ஷாக்‌ஷி அகர்வால் ஆகியோர் பங்குபெறவிருப்பதாக கூறப்படுகிறது.

இதைக் கண்ட நெட்டீசன்கள் பலரும், எம்.எஸ் பாஸ்கரை ஒத்துக் கொள்ளலாம், அது ஏன் ஷாக்சி அகர்வால் கூட ஓகே, ஆனால் ஆல்யா மானாசா என்பது தான் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இன்னும் சிலர் பிக்பாஸ் பற்றிய அறிவிப்பு வந்துவிட்டதால், இன்னும் சில நாட்களுக்கு இது போன்ற செய்தியைத் தான் பார்க்க முடியும் எனவும், ராஜாராணி என்ற பீக் சீரியலில் இருக்கும் போது, அவர் எப்படியப்பா 100 நாள் கேம் ஷோவில் கலந்து கொள்வார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பிக்பாஸில் எனக்கு நீங்க சொன்னது ஞாபம் இருக்கு : கமலை வெளுத்து வாங்கிய நடிகை காயத்ரி!!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சமீபத்தில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கூறியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘இதுபோன்ற முட்டாள்தனமான பேச்சுக்களை விட்டு விட்டு மாற்றத்தை ஏற்படுத்துங்கள். அதற்காக தான் மக்கள் ஓட்டு போட்டுள்ளனர். கொலைகாரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது.

தீவிரவாதத்தில் மதத்தை கொண்டு வர வேண்டாம். நீங்கள் திரையுலகில் சிறந்த மனிதர் என்பதில் ஐயம் இல்லை, ஆனால் அரசியல் என்பது மேடை நாடகம் இல்லை.

மோசமான அரசியல்வாதிகளான அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா ஆகியோரின் ஆதரவை பெற, மக்களிடம் அனுதாபத்தை பெற அழுவது போன்றவற்றை விட்டுவிட்டு மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள் என்று நம்பி மக்கள் வாக்களிக்கிறார்கள். அரசியலில் மேலும் ஒரு நடிகராகிவிடாதீர்கள்.

மேலும் மற்றொரு ட்வீட்டில் அவர் கூறுகையில், ‘வேறு ஒரு மதத்தினர் வசிக்கும் பகுதியில் இந்து மதத்தை குறிப்பிட்டு கமல் பேசியது ஏன்?. அவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் தானே? இந்துக்களுக்கும் கமல் தீவிரவாதியா?, பயங்கரவாதியா? தவறான வார்த்தைகளை நியாயப்படுத்தாதீர்கள். அவரது வார்த்தை முட்டாள்தனமானது.

இந்து மதத்தை அவமதிப்பது போல கமல், கி.வீரமணி, ஸ்டாலின் ஆகிய சிலர் தொடர்ந்து பேசி வருகின்றனர். முதல்வர் பழனிசாமி இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது இது போன்று யாரும் பேச துணிவிருந்ததில்லை. நீங்களும் இதைப் போல செய்ய வேண்டுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், மன்னிப்பு மன்னிக்கறவங்களோட மன்னிப்பு கேக்கறவங்க தான் பெரிய ஆளு, நல்ல மனிதர் என்று நீங்கள் என்னிடம் பலமுறை கூறி இருக்கிறீர்கள்.

இந்துக்களிடம் மன்னிப்பு கேட்பது பெரிய விஷயம் ஆகிவிடாது. இதில் நீங்கள் மதத்தினை உள்ளே கொண்டு வராதீர்கள். மாற்றத்தை கொண்டு வருவீர்கள் என்று மக்கள் பெரிதும் நம்பி இருக்கிறார்கள் மற்றவர்களைப் போல நீங்களும் இருப்பதை விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மிளகாய்யை அந்த உறுப்பில் சொருகி கொள்ளுங்கள் : நெட்டிசன்ஸை மோசமாக விமர்ச்சித்த நடிகை!!

பிரபல தொலைக்காட்சி நடிகையான ரிச்சா சோனி, இஸ்லாமியரான ஜிகர் அலி சம்பானியா என்பவரை பல காலமாக காதலித்து கடந்த பிப்ரவரி மாதம் 11ம் தேதி பெங்காளி முறைப்படியும், அதே மாதம் 18ம் தேதி இஸ்லாமிய முறைப்படியும் திருமணம் செய்து கொண்டார்.

ரிச்சாவின் பெற்றோருக்கே அவர் திருமணத்தில் பிரச்சனை இல்லை. ஆனால் இந்த நெட்டிசன்களோ ரிச்சாவை விலைமாது என்று கேவலமாக திட்டினார்கள். ஒரு முஸ்லிமை திருமணம் செய்தது தவறு என்று ரிச்சாவை பற்றி தரக்குறைவாக பேசினார்கள்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் தன்னை திட்டுபவர்களை மிக மோசமாக திட்டி ரிச்சா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சும்மா ஏதோ பெயர்கள், அடையாளத்தை வைத்து என்னை பின்தொடர்பவர்களுக்கு முதுகெலும்பு இல்லை. ஆனால் எனக்கு அப்படி இல்லை அது தான் உங்களுக்கு பிரச்சனையாக உள்ளது.

ஒருவரை விலைமாது என்று அழைப்பது, மதத்தை பற்றி பேசுவது உங்களுக்கு எளிது. அது உங்களின் வளர்ப்பை காட்டுகிறது. உங்களின் வெறுப்பை கக்கும் கமெண்டுகளால் நான் வெளியிட விரும்பும் புகைப்படங்களை வெளியிடாமல் இருக்க மாட்டேன் என பதிவிட்டுள்ளார்.

பெண்கள் நுழையக்கூடாத இடம் : தமிழ் சினிமாவில் இப்படியும் நடக்கிறதா : புகைப்படத்துடன் நடிகை கஸ்தூரி குற்றச்சாட்டு!!

சபரிமலை கோவிலில் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் நுழைய கூடாது என தடை உள்ளது. அதற்காக பெண்கள் அமைப்புகள் பல போராட்டம் நடத்தியும் வருகின்றன.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி தமிழ் சினிமா ஷூட்டிங்குகளில் உள்ள யூனிட் வண்டி, ஜெனரேட்டர் வண்டி போன்றவற்றில் பெண்கள் நுழையக்கூடாது என்று விதி இருப்பதை பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

“சபரிமலைக்கு போராடும் அதிமேதாவிகள் இதற்கு என்ன செய்யப்போகிறார்கள்? சினிமா ஜெனெரேட்டர் வண்டிக்குள் ஆண்கள் புழங்கலாம், உறங்கலாம், ஆனால் பெண்கள் எந்த நேரத்திலும் நுழைந்து விட கூடாது …. காரணம் தீட்டாம்!” என கஸ்தூரி ட்விட்டியுள்ளார்.