இரண்டாம் திருமணம் செய்யவுள்ள பிக்பாஸ் காயத்ரி ரகுராம் : இப்படி ஒருவர் தான் வேண்டுமாம்!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்று பெரிய அளவில் சர்ச்சைகளில் சிக்கியவர் காயத்ரி ரகுராம். டான்ஸ் மாஸ்டரான அவரின் கேரக்டர் பற்றி இணையவாசிகள் கடுமையாக வறுத்தெடுத்தனர்.

காயத்ரி ரகுராமன் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில் தற்போது காயத்ரியின் அம்மா இரண்டாம் திருமணம் செய்துகொள் என வலியுறுத்துகிறாராம்.

இது பற்றி பேசிய காயத்ரி “எனக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை, என் அப்பாவின் இடத்தைப் பூர்த்தி செய்பவராக இருக்கணும்னு ஆசைப்படறேன். அப்படியொருத்தர் கிடைச்சா திருமணம் செய்வேன்” என தெரிவித்துள்ளார்.

நல்ல புகைப்படத்தை வெளியிட்ட நடிகை காஜல் அகர்வால் : ஆனால் மோசமாக திட்டும் ரசிகர்கள்!!

நடிகைகள் படங்கள் நன்றாக நடிக்கிறார்களோ இல்லையோ போட்டோ ஷுட்டை மட்டும் சரியாக நடத்திவிடுவார்கள்.

நாள்தோறும் நடிகைகளின் புதிய புதிய புகைப்படங்களை நாம் பார்த்து வருகிறோம். சமீபத்தில் நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய அழகான புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.

அதை எப்போதும் பதிவிடுவது போல் இல்லாமல் Grid Post என்ற வகையில் பதிவிட்டார், அது என்னவென்றால் ஒரு புகைப்படம் பெரிதாக வரும், பாதி பாதியாக குறிப்பிட்ட புகைப்படமாக வரும்.

அப்படி போடும் போது ஒரு புகைப்படம் கொஞ்சம் கவர்ச்சியாக மோசமாக வந்ததால் ரசிகர்கள் அவரை திட்டி வருகிறார்கள்.

எமி ஜாக்சனை தொடர்ந்து திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான அஜித் பட நடிகை!!

அஜித் நடித்த பில்லா 2 படத்தில் நாயகியாக நடித்தவர் புரூனா அப்துல்லா. பிரேசில் நாட்டைச் சேர்ந்த இவர் இந்தியாவிற்கு சுற்றுலாவுக்காக வந்தவர் பின்னர் நடிகையானார்.

சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ள இவருக்கும் ஸ்காட்லந்து நாட்டைச் சேர்ந்த ஆலன் பிரேசர் என்பவருக்கும் சமீபத்திலதான் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், திருமணத்திற்கு முன்பே புரூனா அப்துல்லா கர்ப்பம் அடைந்துள்ளார்.

இது பற்றிய தகவலை அவரே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இன்னும் ஐந்து மாதங்களில் தனக்கு குழந்தை பிறக்கும் என அவர் தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமணத்திற்கு முன்பே குழந்தை பெறுவது பற்றி அவர் பதிலளிக்கையில், திருமணச் சான்றிதழ் என்பது ஒரு பேப்பரைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்று

தங்களை அசிங்கமாக சொன்ன புஷ்பவனம் குப்புசாமிக்கு பதிலடி கொடுத்த சூப்பர் சிங்கர் புகழ் செந்தில்!!

கிராமிய பாடல்கள் பாட இப்போது நிறைய கலைஞர்கள் வந்துவிட்டார்கள். ஆனால் முன்பெல்லாம் அதுபோன்ற பாடல்கள் என்றால் நமக்கு முதலில் நியாபகம் வருவது புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் தான்.

சமீபத்தில் அவர் சூப்பர் சிங்கரில் கலக்கும் செந்தில்-ராஜலட்சுமி தம்பதியினர் இரட்டை அர்த்த பாடல்களை மேடையில் பாடுவதாகவும் குறிப்பாக செந்தில் மனைவியை பக்கத்தில் வைத்துக் கொண்டு ஆபாச செய்கை செய்கிறார் என்றார்.

இதற்கு செந்தில், பாடல்களில் இரட்டை அர்த்தம் இல்லாத பாடல்களே இல்லை என்றும் எங்கள் மூத்த கலைஞர்கள் பாடிய பாடல்களை தான் பாடி வருகிறோம். ஒருவேளை அதில் ஆபாச வார்த்தைகள் இருந்தால் அந்த வார்த்தைகளை நீக்கிவிட்டு வேறொரு வார்த்தை போட்டு தான் பாடி வருகிறோம் என்று கூறியுள்ளார்.

அமித் பார்கவ்-சிவரஞ்சனி தம்பதிக்கு குழந்தை பிறந்தது : சிசுவின் புகைப்படத்தை வெளியிட்ட தம்பதியினர்!!

கல்யாணம் முதல் காதல் வரை, நெஞ்சம் மறப்பதில்லை போன்ற சீரியல்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் ஆதரவை பெற்றவர் அமித் பார்கவ்.

சீரியலில் இனி நடிக்க போவதில்லை, புதுவித வேலைகள் செய்ய இருக்கிறேன் என்று கூறியிருந்தார். இப்போது படங்கள் நடித்து வருகிறாரா அல்லது வெப் சீரியஸ் நடிக்கிறாரா என்பது தெரியவில்லை.

ஆனால் சமீபத்தில் ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷ செய்தி கூறியிருந்தார், அதாவது அவரது மனைவி சிவரஞ்சனி கர்ப்பமாக இருப்பதாக கூறியிருந்தார். இந்த நிலையில் இந்த ஜோடிக்கு கடந்த மே 7ம் தேதி அக்ஷய திருதியை அன்று பெண் குழந்தை பிறந்துள்ளதாம்.

இதனை அமித் பார்கவே டுவிட்டரில் கூறியுள்ளார்.

கொஞ்சம் கூட பயம் இல்லாமல் மலையின் உச்சியில் இருந்து குதித்து இறங்கிய நடிகை!!

பெரும்பாலும் நடிகைகளுக்கு சினிமாவில் அதிகம் ஸ்டண்ட் காட்சிகள் இருக்காது. அப்படியே இயக்குனர் வைத்தாலும் பெரும்பாலான நடிகைகள் அதை செய்யமாட்டார்கள். டூப் பயன்படுத்தி தான் செய்வார்கள்.

ஆனால் பாலிவுட் நடிகை ஜாக்க்குலின் பெர்னாண்டஸ் அப்படி இல்லை. அவர் தற்போது மலையேற்ற பயிற்சி பெற்று வருகிறார்.

பெரிய மலையின் உச்சியில் இருந்து ஒரு கயிறு உதவியுடன் மட்டும் அவர் கிழே குதித்து இறங்கும் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார் அவர். இதை பார்த்த ரசிகர்கள் சற்று ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

நடிகர் பார்த்திபன் மீது கொலை முயற்சி புகார் : அதிர்ச்சித் தகவல்!!

பிரபல நடிகர் பார்த்திபன் வீட்டில் 10 வருடங்களுக்கும் மேலாக உதவியாளராக பணியாற்றியவர் ஜெயங்கொண்டான். வீட்டில் திருட்டு நடந்த நிலையில் பார்த்திபன் அவரை வேலையில் இருந்து நீக்கியுள்ளார்.

இந்நிலையில் ஜெயங்கொண்டான் தற்போது சென்னை நுங்கம்பாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் தன்னை பார்த்திபன் மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்ய முயற்சித்தார் என கூறியுள்ளார்.

பணியில் இருந்து நீக்கியதற்கான காரணத்தை கேட்டப்போது பார்த்திபன் தன்னை தாக்கி இப்படி செய்ததாக புகாரில் கூறியுள்ளார்.

தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்தும் கூட என்னை படுக்கைக்கு அழைத்தார்கள் : சமீரா ரெட்டி!!

தமிழில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் சமீரா ரெட்டி. இந்த படத்தின் மூலம் சமீரா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதன் பின்னர் வேட்டை, அசல். நடுநிசி நாய்கள் என சில படங்களில் நடித்தார்.

தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாகவே இந்தியில் பல படங்களில் நடித்து வந்தார் சமீரா ரெட்டி. இறுதியாக கன்னடத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘வரதநாயகா’ 2013 படத்தில் நடித்துவிட்டு சினிமாவிகற்கு முழுக்கு போட்டுவிட்டார்.

சமீரா ரெட்டி கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இருக்கிறார்.

திருமணம் செய்துகொள்ள கேட்டு சீரியல் நடிகையின் வீட்டில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர் : போலீசார் திடுக்கிடும் தகவல்!!

ராஜா ராணி என்ற சீரியலில் வினோதினி என்ற வேடத்தில் நடிப்பவர் ரித்திகா. இவர் படப்பிடிப்பிற்கான வெளியே இருந்துள்ளார், அந்த நேரத்தில் அவரது வீட்டில் பிரச்சனை எழுந்துள்ளது.

அதாவது நேற்று காலை அவரது வீட்டிற்கு சென்ற இளைஞர், நான் கோபி செட்டிபாளையத்தில் இருந்து வருகிறேன்.

எனக்கு ரித்திகாவை மிகவும் பிடிக்கும், சீரியலில் பார்த்து அவரை காதலிக்கிறேன், அவரை திருமணம் செய்து வையுங்கள் என்று ரித்திகாவின் தந்தையிடம் கூறியுள்ளார்.

உடனே நடிகையின் தந்தை போலீசில் புகார் அளிக்க அந்த இளைஞரை போலீசார் விசாரித்து அவரது வீட்டிற்கும் தகவல் அளித்துள்ளனர். போலீசாரை சந்தித்த அந்த இளைஞரின் பெற்றோர், மன அழுத்த நோயால் பரத் பாதிக்கப்பட்டுள்ளதால் அடிக்கடி இப்படி செய்துவிடுவதாக பரத்தின் பெற்றோர் போலீசாரிடம் கூறியுள்ளனர்.

சாய் பல்லவி, ராஷ்மிகா இவர்கள் இருவருக்குமிடையே ஒரு விஷயத்தில் கடும் போட்டி, என்ன தெரியுமா?

ஹீரோயின்கள் என்றாலே திடீரென்று சென்சேஷன் ஆவார்கள். அதை தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகிவருவார்கள்.

அந்த வகையில் சாய் பல்லவி ப்ரேமம் படத்தின் மூலம் செம்ம பேமஸ் ஆனார், அதே போல் ராஷ்மிகா கீதா கோவிந்தம் மூலம் பேமஸ் ஆனவர்.

இவர்கள் இருவருக்குமே உள்ள ஒற்றுமைகள், இவர்கள் நடித்த அனைத்து பாடல்களுமே இணையத்தில் செம்ம ஹிட் அடிக்கும்.

இதில் குறிப்பாக யு-டியூபில் சாய் பல்லவி, ராஷ்மிகா இருவருமே 2 முறை 100 மில்லியன் ஹிட்ஸ் கடந்த பாடலை கொண்டவர்கள், அதிலும் சாய் பல்லவி 200 மில்லியன், 450 மில்லியன் எல்லாம் கடந்து சென்றுவிட்டார்.