நடிகர் ரித்தீஷ் திடீர் மரணம் : அதிர்ச்சியில் திரையுலகம்!!

பிரபல நடிகரும், முன்னாள் எம்.பியுமான ஜே.கே ரித்தீஷ் மாரடைப்பால் தனது 46வது வயதில் காலமானார். கானல் நீர், நாயகன், பெண் சிங்கம், எல்கேஜி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளவர் ஜே.கே ரித்தீஷ். இவர் இலங்கையின் கண்டியில் பிறந்தவராவார்.

திமுக சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் கடந்த 2009 மக்களவை தொகுதியில் போட்டியிட்டு ரித்தீஷ் வெற்றி பெற்றார். பின்னர் அதிமுகவில் இணைந்த ரித்தீஷ் கட்சி பணியாற்றி வந்தார்.

மக்களவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அதற்கான பணியில் ஈடுபட்டு வந்த ரித்தீஷுக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அவரின் மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பாக நடிகர் சங்க தலைவர் நாசர் கூறுகையில், ஒரு நல்ல தம்பியை நான் இழந்துவிட்டேன், ஜே.கே.ரித்திஷின் திடீர் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது என கூறியுள்ளார்.

நடிகர் விஷால் கூறுகையில், ஜே.கே ரித்திஷ் மரணச் செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது, ஒரு நல்ல நண்பரை இழந்துவிட்டேன் என கூறியுள்ளார்.

அனைவரையும் அடேங்கப்பா… என வாய் பிளக்க வைத்த ஆண்ட்ரியா!!

நேற்று நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ள மாளிகை படத்தின் டீஸ்ர் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஆண்ட்ரியாவை பார்த்து அனைவரும் ஷாக் ஆகினர்.

ஆம், சமீப காலமாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆண்ட்ரியா, இந்த நிகழ்ச்சியும் கவர்ச்சி உடையில் வந்து கிறங்கடிப்பார் என பலர் எதிர்பார்த்த்னார்.

ஆனால், அவரோ காஞ்சி பட்டு, தலை நிறைய பூ, நெக்லஸ், வளையல், மோதிரம் என அடக்கமாக வந்திருந்தார். இது பலருக்கும், ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இந்த மாதிரி ஹோம்லி லுக்கிலும் ஆண்ட்ரியா ஆழகாக உள்ளார் என பேசிக்கொண்டனர்.

மேலும், ஆண்ட்ரியாவின் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இளைஞரின் கன்னத்தில் ஓங்கி அறைந்த குஷ்பு!!

கர்நாடக மாநிலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நடிகை குஷ்பு, இளைஞர் ஒருவரின் கன்னத்தில் அறைந்த வீடியோ வைரலாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் மத்திய பெங்களூரு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடிகை குஷ்பு பிரச்சாரம் செய்தார்.

பிரச்சாரம் முடிந்தவுடன் தனது காரை நோக்கி குஷ்பு சென்றபோது, அவரை பின்தொடர்ந்து வந்த இளைஞர் அவரிடம் தவறாக நடக்க முயன்றதால் இளைஞரின் கன்னத்தில் அறைந்துள்ளார்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அதன்பின்னர் குஷ்பு காரில் ஏறி சென்றுவிட்டார். இந்தியாவின் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ள நிலையில், இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு 91 தொகுதிகளில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

பெற்ற தாயை வீட்டை விட்டு துரத்திய அவலம் : பிரபல நடிகை மீது தாய் பரபரப்பு புகார்!!

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளவர் நடிகை சங்கீதா. குறிப்பாக பாலாவின் பிதாமகன் படம் இவரை மிகவும் பிரபலமடைய செய்தது.

பிறகு பாடகர் க்ரிஷை திருமணம் செய்து கொண்ட இவர் மீது இவரது தாய் பானுமதி தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அப்புகாரில், வயதான என்னை வெளியேற்றிவிட்டு நான் வசித்துவரும் வீட்டை அபகரிக்க முயல்கிறார் என் மகள் சங்கீதா என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த புகார் தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு சங்கீதாவுக்கு ஆணையம் சம்மன் அனுப்ப, இரு தினங்களுக்கு முன் கணவர் க்ரிஷுடன் ஆணையத்தில் ஆஜரானார் சங்கீதா.

இந்த புகார்க்கான காரணம் என்னவென்றால், சங்கீதா பேரில் ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டை தன் அண்ணன் தம்பிங்க அபகரிச்சுடுவாங்களோனு சங்கீதாவுக்கு சந்தேகம். அதுக்கு தன் அம்மாவும் துணைபோயிடுவாங்களோனு பயப்படுறாங்க. இந்தச் சூழல்ல வீட்டைவிட்டு வெளியேறச் சொன்னா அவங்க எங்கப்போவாங்க? அதனாலதான் மகளிர் ஆணையத்துல புகார் தந்திருக்காங்க.

உங்க யாருக்கும் பேட்டி தரமாட்டேன், கொந்தளித்த ஆண்ட்ரியா : காரணத்தை கேட்டால் ஷாக் ஆவீர்கள்!!

ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடிப்பில் வெளிவந்த தரமணி படம் இவருக்கு பெரும் பாராட்டுக்களை பெற்று தந்தது.

இந்நிலையில் ஆண்ட்ரியா நடிப்பில் ஒரு டப்பிங் படம் ஒன்று தமிழில் வரவுள்ளது, இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது.

அப்போது பல பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்க, புகைப்படம் எடுக்க காத்திருக்க, ஆண்ட்ரியா வந்து ‘உங்களுக்கு யாருக்கும் பேட்டி தரமாட்டேன்’ என கோபமாக சொல்லி நகர்ந்தாராம்.

என்ன என்று விசாரித்தால், அவரிடம் ‘நீங்கள் சிகரெட் பிடிப்பீர்களா, சரக்கு அடிப்பீர்களா?’ போன்ற கேள்வியை கேட்கிறார்களாம், இதனால் கோபமான ஆண்டரியா பேட்டி கொடுக்க மாட்டேன் என்று சொன்னாராம்.

இதை பார்த்த பலருக்கும் ஷாக் தான், என்ன இவராகவே ஏதோ சொல்லி நம்மிடம் கோபித்துக்கொள்கிறாரே என்று.

இதயம் நொறுங்கியது.. கங்குலியை பிரிந்தது ஏன்? 18 ஆண்டுகள் கழித்து மனம் திறந்த நடிகை நக்மா!!

2003 ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக கங்குலி இருந்தபோது, அவரும் நடிகை நக்மாவும் காதலிப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது.

கங்குலி விளையாடும் போட்டிகளை பார்ப்பதற்கு நக்மா தவறாமல் வந்துவிடுவார். இருவரும் அவ்வப்போது பொது இடங்களுக்கு ஒன்றாக சென்றனர். இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியான நிலையில் இருவரும் பிரிந்தனர்.

இந்நிலையில் 18 ஆண்டுகள் கழித்து இதுகுறித்து மனம் திறந்துள்ள நடிகை நக்மா. கங்குலிக்கும் எனக்கும் இடையேயான நட்பு மிகவும் அழகானது. எங்கள் இருவருக்குமான நட்பும் நெருக்கத்தில் இருந்த சமயத்தில் அவரது விளையாட்டு பாதிக்கப்பட்டுவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால், எங்களுடைய நட்புதான், கங்குலியின் ஆட்டத்தைப் பாதித்தது என்று பத்திரிகைகளில் எழுதப்பட்டது. இதனால் இதயம் நொறுங்கிப்போனது. மற்றவர்களின் பார்வை எங்களை புண்படுத்தியதால், இருவரும் சேர்ந்து பேசி பிரிவது என்று முடிவெடுத்து பிரிந்துவிட்டோம் என கூறியுள்ளார்.

இவர்களுடன் சண்டை போட என்னால் முடியாது.. நான் வரல : நேர்கொண்ட பார்வை ஹீரோயின் வித்யா பாலன்!!

தற்போது தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார் நடிகை வித்யா பாலன். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் இன்ஸ்டாகிராமில் இருக்கிறேன். அது பலருக்கும் தெரியாது. பேஸ்புக்கிலும் இருக்கிறேன்.

ஆனால் ட்விட்டருக்கு மட்டும் வரவே மாட்டேன். அங்கு வந்து இவர்களுடன் சண்டை போட நான் தயாராக இல்லை” என பேட்டி அளித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் குறிப்பாக ட்விட்டரில் சிலர் பேக் ஐடிக்கள் மூலம் பலரையும் தரக்குறைவாக பேசுவதை பற்றி தான் அவர் இப்படி கூறியுள்ளார்.

6 பேக் வைக்க போகும் சமந்தா, முதற்கட்டமாக வெளியிட்ட புகைப்படத்தை பாருங்க : செம்ம மாஸ்!!

சமந்தா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருபவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த சூப்பர் டீலக்ஸ், மஜிலி இரண்டு படமும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

இந்நிலையில் சமந்தா தற்போது தீவிர உடற்பயிற்சியில் இருந்து வருகின்றார், அவ்வபோது புகைப்படங்களையும் வெளியிடுவார்.

அந்த வகையில் முதன் முறையாக தன் 6 பேக் உடற்கட்டை இணையத்தில் வெளியிட்டு, செம்ம ட்ரெண்ட் ஆகியுள்ளார், இதோ அந்த புகைப்படம்…

நடிகை அனுபமாவுக்கு கண்டபடி திட்டிய கும்பல் : சமூகவலைதளத்தில் நேர்ந்த கொடுமை!!

பிரேமம் படத்தின் சுருண்ட கூந்தல் அழகில் பலரையும் மயக்கியவர் அனுபமா பரமேஸ்வரன். அதனால் பல இளைஞர்கள் அவருக்கு ரசிகர்கள் ஆனார்கள். பின் தமிழில் தனுஷ்க்கு ஜோடியாக கொடி படத்தில் நடித்திருந்தார்.

தமிழ், மலையாள படங்களில் அவர் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். சமூக வலைதளத்தில் அவருக்கு டிக் டிக் வீடியோக்கள் மீது ஆர்வம் அதிகம். ஆனால் அவர் எந்த டப்ஸ் மாஸ் செய்ததில்லை.

இந்நிலையில் BJP போட்டியாளர் ஒருவர் தேர்தல் விதிமுறையை மீறியதாக திருச்சூர் மாவட்ட கலெக்டர் TV அனுபமா என்பவரால் கடும் நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார்.

இதனால் அவரது ஆதரவாளர்கள் கலெக்டருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக நினைத்து தவறாக நடிகை அனுபமாவை டேக் செய்து தொல்லைகள் கொடுத்து வருகிறார்கள்.

யார் என தெரியாமல் கடுமையான வார்த்தைகளை உபயோகித்துள்ளார். இதனால் நடிகை அனுபமா சங்கடத்தில் ஆழ்ந்துள்ளார்.

தந்தை வயது ஹீரோவுக்கு ஜோடியாகும் இளம் நடிகை ஆலியா பட் : வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

பாலிவுட்டில் பிரமாண்ட படங்கள் எடுப்பதற்கு பெயர் போன சஞ்சய் லீலா பன்சாலி சல்மான் கான், ஆலியா பட்டை வைத்து இன்ஷா அல்லாஹ் என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் ஆலியா சல்மான் ஜோடியாக நடிக்கிறார் என்று தெரிந்ததும் பலரும் விமர்சிக்கத் துவங்கினர்.

53 வயதாகும் சல்மான் கானுக்கு 26 வயதாகும் ஆலியா பட் ஜோடியா?. அப்பாவும், மகளும் சேர்ந்து நடித்தது போன்று இருக்கும். பன்சாலி ஏன் இப்படி ஒரு ஜோடியை தேர்வு செய்துள்ளார் என்று விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து ஆலியா பட் விளக்கம் அளித்துள்ளார்.

எனக்கு எந்த விமர்சனமும் வரவில்லை. சொல்லப் போனால் நான் மகிழ்ச்சியாக உள்ளேன். யார் என்ன பேசுகிறார்கள் என்பதை பற்றி எனக்கு கவலை இல்லை. சல்மான் அல்லது பன்சாலி சாரும் அதை எல்லாம் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறேன் என்கிறார் ஆலியா.