இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை தீபா- அழகிய ஜோடியை பாருங்க…!

திருமணம் செய்துகொண்ட நடிகை தீபா…

வடிவேலு இடம்பெறும் வாம்மா மின்னல் காமெடி காட்சியை நாம் மறந்திருக்க மாட்டோம்.

அந்த படம் மூலம் பிரபலமான இவர் மின்னல் தீபா என்றே அழைக்கப்பட்டார். இதன் பிறகு சினிமாவில் நடித்த வந்த அவர் பின் சீரியல் பக்கம் களமிறங்கினார்.

இவருக்கு கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி சுப்பிரமணி என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.

கொரோனா நேரம் என்பதால் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் இவர்கள் திருமணம் நடந்துள்ளது. சின்னத்திரை நடிகை தீபாவிற்கு இது இரண்டாவது திருமணம். தீபாவிற்கு கடந்த 2013ம் ஆண்டு ரமேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பின் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட விவாகரத்து பெற்றனர். தற்போது மறுமணம் செய்திருக்கும் தீபாவிற்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

😍😀😀😀😀😀😀💞 please I need all my friends and fans blessing thank u💞

A post shared by deepa (@minnaldeepa) on

பிக்பாஸ் புகழ் சித்தப்பு சரவணனா இது, புதிய லுக்- வைரலாகும் புகைப்படங்கள் !

சரவணன்…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்துகொண்டவர் சித்தப்பு சரவணன்.

இந்த சீசனில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் பல விஷயங்கள் நடந்தது. அதிலும் சரவணன் அவர்கள் வீட்டில் உள்ளே இருந்த போட்டியாளர்களுக்கே தெரியாமல் வெளியேறியது தான் மிகவும் ஷாக்கிங்காக இருந்தது.

இதுவரையிலும் அவர் எதற்காக வெளியேற்றப்பட்டார் என்பது சரியாக தெரியவில்லை.

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சித்தப்பு படங்களில் கமிட்டாகி நடிக்க பிஸியாகி விட்டார். இருந்தாலும் அந்த நிகழ்ச்சியால் தனக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிட்டது என்று வருத்தமாக அப்போதே கூறியிருந்தார்.

கொரோனாவால் படப்பிடிப்புகள் செல்லாத சித்தப்பு அண்மையில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளது. அந்த புகைப்படங்கள் வெளியாக என்னது சரவணன் அவர்களா இது என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

இதோ அந்த புகைப்படம்,

ஆசை ப்ரீமியர் ஷோவில் நடுரோட்டில் தல எடுத்த சபதம், செய்தும் காட்டினார்..!

அஜித் எடுத்த சபதம்..!

தமிழ் சினிமாவின் தல என்று தலையில் தூக்கி கொண்டாடப்படுபவர் அஜித். இவர் இதுவரை 50ம் அதிகமான படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

தல என்ற ஒரு சொல் ஒட்டு மொத்த இளைஞர்களையும் தன் பக்கம் கட்டிப்போட்டுள்ளது, அவர் இந்த உயரத்தை அடைய பலவிதமான கஷ்டங்களையும் தோல்விகளையும் கடந்து வந்துள்ளார்.

அவர் கடந்து வந்த பாதையில் எப்போதும் மலர்கள் கொட்டவில்லை, பல இடங்களில் முற்கள் தான் இருந்துள்ளது.

அப்படி அஜித் கஷ்டப்பட்ட காலத்தில் அவருடைய திரைப்பயணத்தையே திருப்பி போட்ட படம் ஆசை, அஜித்தின் முதல் ப்ளாக் பஸ்டர் படம்.

இப்படத்திற்கு டப்பிங் தன் சொந்த குரலில் பேச வேண்டும் என அஜித் எவ்வளவோ முயன்றும் கடைசியில் சுரேஷ் தான் பேசினார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அஜித் எப்போதும் பிரகாஷ்ராஜிடம், நா நல்லா வருவேனா சார் என்று கேட்டுக்கொண்டே இருப்பாராம்.

அதற்கு பிரகாஷ்ராஜும், ஏன் அஜித் பார்க்க நல்லா இருக்கீங்க கண்டிப்பா நல்ல வருவீங்க என்றாராம். அதை தொடர்ந்து படப்பிடிப்பு முடிய ஆசை படத்தின் ப்ரீமியர் காட்சி நடந்தது. அஜித் மிகவும் நம்பிக்கையாக அங்கு சென்றார்.

ஆனால், பேர் புகழ் எல்லாம் பிரகாஷ்ராஜ் பக்கம் செல்ல அஜித்திற்கு கொஞ்சம் ஏமாற்றம், அங்கிருந்து எல்லோரும் கிளம்ப அஜித் உடனே நடுரோட்டில் ஓடி சென்று பிரகாஷ்ராஜிடம் நீங்கள் சூப்பராக நடித்துவிட்டீர்கள்.

உங்களுக்கு தான் இந்த படத்தில் பேர் புகழ் எல்லாம், ஆனால் கண்டிப்பாக நான் இது போலவே ஒரு நெகட்டிவ் ரோல் செய்வேன் என்றாராம். அந்த சபதம் தான் அஜித்தை வாலி படத்தில் நடிக்க வைத்ததாம், அதை தொடர்ந்து மங்காத்தா படத்திலும் அவர் வில்லனாக மிரட்டியது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் புகழ் ஆரவ்விற்கு திருமணம்- பெண் இந்த நடிகைதானாம், புகைப்படம் இதோ..!

ஆரவ்விற்கு திருமணம்…

தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன் வந்த ஒரு பெரிய நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு வராத பிரச்சனைகளே இல்லை.

மக்களாலும் நிகழ்ச்சி பரபரப்பாக பார்க்கப்பட்டது. ஓவியா-ஆரவ் காதல், பரணி செய்த விஷயம், ஜுலியின் அட்ராசிட்டி என நிகழ்ச்சி முழுவதும் ஒரே பரபரப்பு தான்.

முதல் சீசனை தொடர்ந்து 3 சீசன்கள் ஒளிபரப்பானது, 4வது சீசன் எப்போது என்று தெரியவில்லை.

இந்த நிலையில் முதல் சீசன் வெற்றியாளர் ஆரவ்வின் திருமணம் பற்றி ஒரு தகவல் வந்துள்ளது.

அதாவது ஆரவ்விற்கும், நடிகை ராஹே என்பவருக்கும் செப்டம்பர் 6ம் தேதி சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் திருமணம் நடக்க இருக்கிறதாம்.

ராஹே கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் ஜோஷ்வா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.

Loose Hair – இல் செம்ம கவர்ச்சியாக இருக்கும் VJ மகேஸ்வரி…!

மகேஸ்வரி…

தற்போது மார்க்கெட் இல்லாமல் இருக்கும் நடிகைகள் ஸ்ட்ரெயிட்டாக தங்கள் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி டைரக்டர்களுக்கு அப்ளிகேஷன் போடத் துவங்கிவிட்டார்கள்.

முன்னாடி எல்லாம் தன்னுடைய மேனேஜர்கள் மூலம் நடிகைகள் இயக்குனர்களை தொடர்பு கொண்டு சான்ஸ் தேடுவார்கள். ஆனால், இப்போது விஷயமே வேற என்று கிசு கிசுகிறார்கள் சினிமா வட்டாரம்.

அந்த வகையில், சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்,

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இந்நிலையில் தன்னுடைய முடியை லூசாக விட்டபடி படு ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Charming #maheswari For more pics click…. link in bio (https://t.me/ckweb)

A post shared by cinemakaaran (@cinemakaaran_ck) on

புரட்சித்தலைவர் MGR-ஆக, விஜய், புரட்சித்தலைவி அம்மாவாக சங்கீதா…! மதுரை விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் !

விஜய் ரசிகர்கள் செய்த செயல்…

பொதுவாகவே ரசிகர்கள் ஓட்டும் போஸ்டர்களால் சிலநேரம் நடிகர்களை வியப்படையச் செய்யும். சில சமயம் நம்மளையே கோமாளி ஆக்கி ஊரே சந்தி சிரிக்கும் வகையில் தலைகுனியச் செய்யும்.

இது எல்லா ஹீரோக்களுக்கும் நடக்கும் அதுவும் ரஜினி விஜய் அஜித் இந்த மூவருக்கும் அடிக்கடி நடக்கும்.

அந்த வகையில் இன்று இருபத்தியோராம் ஆண்டு திருமண நாள் கொண்டாடும் விஜய் மற்றும் சங்கீதா அவர்களை வாழ்த்தி மதுரை ரசிகர்கள் என்ன செய்தார்கள் என்றால்,

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆக விஜயும் புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதாவாக அவரது மனைவி சங்கீதாவையும் சித்தரித்து மதுரை முழுக்க போஸ்டர்களை ஒட்டி தள்ளியுள்ளார்கள் விஜய் ரசிகர்கள்.

இதைப் பார்த்த பல விஜய் ரசிகர்கள், சட்டை காலரை வைத்து முகத்தை மறைத்து அங்குமிங்குமாக ஓடி ஒளிகிறார்கள்.

இதை பார்த்த அஜித் ரசிகர்கள் இந்த வாரம் இது போதும் என்று வெச்சு செய்கிறார்கள்.

“OTT Release வேண்டாம்” சூர்யாவுக்கு இயக்குனர் ஹரி வேண்டுகோள் ! கேட்பாரா சூர்யா ?

இயக்குனர் ஹரி வேண்டுகோள்..

இயக்குனர் ஹரி அவர்கள் கதை திரைக்கதை வசனம் இயக்கம் என எல்லா ஏரியாக்களிலும் கில்லி. நடிகர் பிரஷாந்த் அவர்களை வைத்து ‘ தமிழ் ‘ என்கிற படத்தின் மூலம் இயக்குனர் ஆனவர் ஹரி.

இவர் இயக்கிய படங்கள் பெரும்பாலும் வெற்றியே ! ஆனால் சமீபகாலத்தில் தோல்வியை சந்தித்து வந்த இயக்குனர் ஹரி, சாமி 2 – க்கு பிறகு படங்கள் எதுவும் இல்லாமல் இருந்தார். மேலும், நடிகர் சூர்யாவுடன் மீண்டும் அருவா என்று ஒரு படம் செய்வதாக அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இறுதிச்சுற்று சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று வரும் October மாதம் 30 ஆம் தேதி அன்று Amazon-இல் ரிலீஸ் ஆக்வுள்ளது. இதை பல திரையரங்கு உரிமையாளர்கள் கண்டித்து வருகிறார்கள்.

இதை தொடர்ந்து, இயக்குனர் ஹரி அவர்கள் சூர்யா அவர்களுக்கு OTT வேண்டாம், உங்களின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த அறிக்கையில், “இதுவரை நாம் செய்த படங்கள் எல்லாம் திரையரங்கில் Release ஆனதால் மட்டுமே நாம் இந்த உயரத்தில் உள்ளோம். OTT முடிவில் மறுபரிசீலனை செய்தால்,சினிமா இருக்கும் வரை உங்கள் பேரும் புகழும் நிலைத்து நிற்கும்” என்று கூறியுள்ளார்.

நயன்தாராவை கல்யாணம் கட்டாமல் இருப்பதற்கு இதுதான் காரணம்..! ரகசியத்தை உடைத்த விக்னேஷ் சிவன்..!

கல்யாணம் கட்டாமல் இருப்பதற்கு இதுதான் காரணம்…

நயன்தாரா என்னதான் பிஸியாக இருந்தாலும் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் நேரத்தை செலவழிப்பதை மட்டும் மறக்காமல் இருந்து வருகிறார் நயன்.

அதே போல விக்னேஷ் சிவனும் அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் தனது காதலி நயன்தாராவுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

தனது காதலை குறித்து சமீபத்திய யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், நீங்கள் எப்போது நயன்தாராவை திருமணம் செய்யப் போகிறீர்கள் என்று கேட்டுள்ளார் அதற்கு,

“எங்கள் இருவருக்குமே எப்பொழுது காதல் சளிக்கிறதோ உடனடியாக நாங்கள் திருமணம் செய்துகொள்வோம் என்று அவர் கூறினார்.

அப்படி நாங்கள் திருமணம் செய்யும் முடிவுகள் எடுத்தால் உடனுக்குடன் உங்களுக்கு அந்தத் தகவலை தெரிவித்து விடுவோம்” என கூறியுள்ளார்.

செம்மையாக நடந்த தளபதி விஜய் வீட்டு திருமணம் – இதோ அழகிய புகைப்படங்கள் !

தளபதி விஜய் வீட்டு திருமணம்…

சிங்கப்பூரில் கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போது விஜயின் மாமா மகளான சினேகாவுக்கும், அதர்வாவின் தம்பியான ஆகாஷுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் முதலில் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்களாம்.

இருந்தாலும் இருவரும் தங்கள் காதலில் உறுதியாக இருப்பதை பார்த்து நேற்று முன்தினம் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

நிச்சயதார்த்தம் எப்போதோ நடந்து முடிந்த நிலையில் திருமணம் கடந்த 24ம் தேதி சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நடந்துள்ளது.

தற்போது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

நான் ஒன்னும் குழந்தை கிடையாது ! தனது வளர்ச்சியை தாறுமாறாக காட்டிய அனிகா !

நடிகை அனிகா..

சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவரை அஜித்தின் உண்மையான மகளுக்கு நிகராகவே பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களில் நடிக்கும் சிலர் மிகவும் பிரபலமாகி விடுவார்கள், அந்த வகையில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்த பேபி அனிகா, பலதரப்பட தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.

இதை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்த மிருதன் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல், மலையாளத்தில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 16 வயது சிறுமி தற்போது மடமடவென வளர்ந்து இளம் குமரியாக மாறி விட்டார்.

அந்த வகையில் தற்போது, பிங்க் நிற Tshirt இல் போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், ” நான் ஒன்னும் விரல் சுப்புற குழந்தை கிடையாது” என்று சொல்வது போலவே உள்ளது என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.