இந்த வார பிக்பாஸில் இவர் தான் வெளியேறுவாரா? ரசிகர்கள் கருத்துக்கணிப்பு கிடைத்த அதிர்ச்சி!!

பிக்பாஸில் இவர் தான் வெளியேறுவாரா?

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தற்போது சேரன், கவின், லொஸ்லியா, ஷெரின், முகேன் ஆகியோர் உள்ளனர்.

இதில் இந்த வாரம் யார் எலிமினேட் ஆவார்கள் என்று ரசிகர்கள் தரப்பில் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

அதில் இந்த வாரம் லொஸ்லியா தான் குறைந்த வாக்குகள் பெற்றுள்ளதாக தெரிகின்றது, இவை அதிகாரப்பூர்வம் இல்லையென்றால், லட்சக்கணக்கில் வாக்குகள் பதிவான ஒரு டெமோவாக பார்க்கலாம்.

3 பிரிவுகளில் வழக்கு: கைதாகுகிறாரா பானுப்ரியா?

கைதாகுகிறாரா பானுப்ரியா?

பானுப்ரியா வீட்டில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் ஒரு வருடமாக வேலை செய்து வந்துள்ளார்.அந்த சிறுமியின் தாயார் பிரபாவதி கடந்த ஆண்டு தன்னுடைய மகளை பானுப்ரியா மற்றும் அவரது சகோதரர் கோபால கிருஷ்ணன் கொடுமைப்படுத்துவதாக ஆந்திர மாநிலம் சமல்கோட் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதற்கிடையே பானுப்ரியா அந்த சிறுமி மற்றும் தாய், தன் வீட்டில் இருந்து 15 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கப்பணம், விலை உயர்ந்த கை கடிகாரம் போன்றவற்றைத் திருடிவிட்டதாகக் குற்றம் சாட்டினார். இதையடுத்து அந்த சிறுமியின் தாய் புழல் சிறையிலும், சிறுமி சென்னை சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அந்த சிறுமியின் தாயார் ஏற்கனவே ஆந்திர மாநிலத்தில் கொடுத்த புகார் தகவலை அம்மாநில போலீசார் சென்னை போலீசுக்கு அனுப்பி வைத்திருந்தனர். இதையடுத்து பானுப்ரியா மீது பாண்டி பஜார் போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிறுமியை வேலைக்கு சேர்த்தது, அவரை காயப்படுத்தியது, மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பானுப்ரியா கைது செய்யப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.

சும்மாவே TREND பண்ணுவோம்.. தளபதி சொன்னா விடுவோமா? TREND ஆகும் மரண ஹேஷ் டேக்!!

TREND ஆகும் ம ரண ஹேஷ் டேக்!!

தளபதி விஜய்க்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டே போவது அனைவரும் அறிந்த ஒன்றே. தளபதி சொல்வதை அப்படியே கேட்டு அதைப் பின்பற்றுவது தளபதி ரசிகர்கள் வழக்கம். தளபதி எதை செய்யச் சொன்னாலும் அதை அப்படியே செய்வதில் அவரைப்போலவே தளபதி ரசிகர்களும் கில்லி தான்.

தளபதி விஜய் ”பிகில்” ஆடியோ வெளியீட்டு விழாவில் ”பேனர் விழுந்து இ றந்த சுபஸ்ரீ பற்றி பேசினார். இதில் ஆன்லைனில் தேவையில்லாத விஷயங்களை ட்ரெண்ட் பண்ணுவதற்கு பதிலாக சுபஸ்ரீ இ றந்ததைத் பற்றி ட்ரெண்ட் பண்ணலாமே,. ஒரு நியாயம் கிடைக்குமே”என்று தனது ரசிகர்களுக்கு அறிவுரை செய்தார். சுபஸ்ரீ விவகாரத்தில் அரசு தரப்பு நடந்துகொண்ட விதம் கேவலமாக இருந்தது அனைவரும் அறிந்ததே.

இதைப்பற்றி தளபதி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். ஏனெனில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் போது கூட அனைவரது வீட்டிற்கும் சென்று ஆறுதல் கூறி வந்தவர், விஜய். பொதுவாக சமூக பிரச்சனைகள் அனைத்திற்கும் குரல் கொடுப்பவர், பேனர் விஷயத்தில் ஏன் மௌனம் காக்கிறார்? என்ற கேள்வி அனைவரிடமும் இருந்தது. அதனை நேற்றைய மேடையில் பொதுமக்களின் முன்னிலையில் அவர் பேசியது அனைவரிடமும் வரவேற்பை பெற்றது.

இதனை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் தளபதி ரசிகர்கள் இன்று,#JusticeforSubhashree என்ற hashtag உருவாக்கினார். மற்ற நடிகர்களின் ரசிகர்களும் சுபஸ்ரீக்கு ஆதரவாக இந்த hashtag பதிவிட்டு இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் கொண்டு வந்தனர்

ரீ எண்ட்ரி கொடுக்கும் அசின் : வரவேற்பது கோலிவுட்டா? பாலிவுட்டா?

ரீ எண்ட்ரி கொடுக்கும் அசின்!

‘உள்ளம் கேட்குமே’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் அசின். கேரளாவைச் சேர்ந்த இவர் விஜய், அஜித்,கமல், சூர்யா, விக்ரம், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல வெற்றி படங்களைக் கொடுத்துள்ளார்.

கோலிவுட்டில் முன்னணி நாயகியாக வலம் வந்த இவர், கஜினி படத்தின் இந்தி ரீமேக்கில் அமீர்கானுடன் இணைந்து நடித்துள்ளார். அதன் பிறகு மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் ஷர்மாவை கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி.19ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டு அசினுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

அதிலிருந்து அசின் இனிமே படத்தில் நடிக்கமாட்டார் என்று வதந்தி பரவியது. ஆனால் வடிவேலு பாணியில் எனக்கு எண்டே கிடையாது என்று மீண்டும் திரைத்துறையில் ரீ எண்ட்ரி கொடுக்கவுள்ளார். இதை உறுதிசெய்யும் வகையில் அவர் மிகவும் கவர்ச்சியாக உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் பாலிவுட்டா? அல்ல கோலிவுட்டா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

ரகசிய திருமணம் செய்த ஆல்யா-சஞ்சீவ் திருமண வரவேற்பு புகைப்படங்கள்!!

ஆல்யா-சஞ்சீவ் திருமண வரவேற்பு..

ஆல்யா-சஞ்சீவ் திருமண வரவேற்பு

ஆல்யா-சஞ்சீவ் திருமண வரவேற்பு

ஆல்யா-சஞ்சீவ் திருமண வரவேற்பு

ஆல்யா-சஞ்சீவ் திருமண வரவேற்பு

ஆல்யா-சஞ்சீவ் திருமண வரவேற்பு

ஆல்யா-சஞ்சீவ் திருமண வரவேற்பு

கிடப்பில் போடப்பட்ட படத்தை மீண்டும் தொடங்கும் முடிவில் சிவகார்த்திகேயன்- இவரது படம் தானா?

சிவகார்த்திகேயன்..

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் உழைப்பின் மூலம் ஜொலித்து வருபவர். ஆனால் கடைசியாக இவர் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை என கூறப்படுகிறது.

அவரது நடிப்பில் அடுத்த வாரம் செப்டம்பர் 27ம் தேதி நம்ம வீட்டுப் பிள்ளை வெளியாக இருக்கிறது. சிவகார்த்திகேயன் நேற்று இன்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் படம் கமிட்டானார்.

புதிய படத்திற்கு ராகுல் ப்ரீத் சிங் நாயகி என்றும் கூறப்பட்டது. இடையில் பண பிரச்சனையால் கிடப்பில் போடப்பட்ட இப்படம் சிவகார்த்திகேயனின் தலையீட்டிற்கு பிறகு மீண்டும் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இவங்க கூட நடிக்குறது ரொம்ப கஷ்டம்.. பிகில் மேடையில் விஜய் குறிப்பிட்ட இரண்டு நடிகர்கள்!!

பிகில் மேடையில் விஜய்..

நேற்றைய பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது பற்றித்தான் அவரது ரசிகர்கள் பேசிக்கொண்டிருப்பார்கள். அந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்தது அவரது பேச்சு.

விழாவில் ஒரு மீம் விஜய்க்கு போட்டு காட்டப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு ட்ரெண்ட் ஆன பிரெண்ட்ஸ் நேசமணி பற்றிய மீம் தான் அது. இதை பார்க்கும்போது என்ன தோணுது சார் உங்களுக்கு என தொகுப்பாளர் ரம்யா கேட்டார்.

“இதை பார்க்கும்போது என்ன தோணுதுன்னா, ஒரு ஆணியும்…(ரசிகர்கள் ஆரவாரம்). அந்த சீன் எடுக்கும்போது நான் சிரித்துக்கொண்டே தான் இருந்தேன். சூர்யா வந்து சிரிப்பை கண்ட்ரோல் பண்ணிகிட்டார். என்னால முடியல. வடிவேலு சார் கூட, விவேக் சார் கூடலாம் நடிக்குறது ரொம்ப கஷ்டம்ங்க. என்னோட பேவரட் படங்கள்ல பிரெண்ட்ஸ் படமும் ஒன்னு” என விஜய் பதில் அளித்துள்ளார்.

பிரபல காமெடி நடிகர் சதீஷிற்கு பொண்ணு கிடைத்துவிட்டது, சமூக வலைத்தளத்தில் வெளிவந்த நிச்சயத்தார்த்த போட்டோஸ்!!

காமெடி நடிகர் சதீஷ்

காமெடி நடிகர் சதீஷ் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வருபவர். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ஆம்பள, ரெமோ, கத்தி ஆகிய படங்களில் இவர் நடித்தவர்.

இந்நிலையில் நீண்ட நாட்களாக தனக்கு பொண்ணு கிடைக்கவில்லை என்று அவரே கூறி தன்னை தானே கலாய்த்துக்கொள்வார்.

சிவகார்த்திகேயனும் பல பேட்டிகளில் இவரை கலாய்த்துள்ளார், தற்போது இவருக்கு பொண்ணு கிடைத்துவிட்டது, அவர்களின் நிச்சயத்தார்த்த புகைப்படங்கள் வெளிவந்துள்ளது, இதோ…

கல்யாணம் வேண்டாம் மம்மி : அடம் பிடிக்கும் பிரபல நடிகை!!

அடம் பிடிக்கும் பிரபல நடிகை!!

நல்ல அழகும், நடிப்புத் திறமையும் உள்ளவர் அந்த நடிகை. நடிக்க வந்த புதிதில் இருந்தது போன்றே இன்றும் இருக்கிறார். இத்தனை ஆண்டுகளில் ஒரு முறை கூட வெயிட் போடவில்லை. உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அவ்வளவு அக்கறை.

நடிகைக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க அவரின் அம்மா ஆசைப்படுகிறார். ஆனால் எப்பொழுது கல்யாணப் பேச்சை எடுத்தாலும் வேண்டாம் மம்மி என்கிறாராம் நடிகை. கல்யாணம் என்றால் இந்த பெண் ஏன் இப்படி பயப்படுகிறது என்று வியக்கிறாராம் நடிகையின் அம்மா.

நடிகையின் வாழ்வில் வந்த காதல் நிலைக்கவில்லை. பல ஆண்டுகளாக காதலித்த அந்த நபர் பிரிந்துவிட்டார். அதன் பிறகு ஏற்பட்ட காதலும் துவங்கிய வேகத்தில் முடிந்துவிட்டது. இப்படி அடுத்தடுத்து மனவேதனை அடைந்ததால் நடிகை திருமணத்தை வெறுக்கிறாரோ என்னவோ.

என்னால் தனியாக வாழ முடியும் என்று நடிகை நம்பிக்கையுடன் சொன்னாலும் அவரை திருமதி ஆக்கிப் பார்க்கத் துடிக்கிறாராம் அம்மா. கொஞ்சம் டல்லடித்த நடிகையின் கெரியர் வெற்றி நாயகனின் படத்தில் நடித்த பிறகு சூப்பராக பிக்கப் ஆகிவிட்டது.

கெரியர் நல்ல நிலைக்கு வந்ததாலும் நடிகைக்கு திருமணம் மீது ஈடுபாடு இல்லாமல் உள்ளது. முன்பு போன்று இல்லாமல் தற்போது வெயிட்டான கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் நாகார்ஜூனாவின் பண்ணையில் வீசிய துர்நாற்றம் : ஆய்விற்கு சென்ற அதிகாரிகளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!!

நடிகர் நாகார்ஜூனாவின் பண்ணையில் வீசிய துர்நாற்றம்..

இந்தியா – ஹைதராபாத்தில், பிரபல நடிகர் நாகார்ஜூனாவுக்குச் சொந்தமான பண்ணை தோட்டத்தில் மனித எலு ம்புக் கூடு இருந்தது பற்றி தெலுங்கானா பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,நடிகர் நாகார்ஜூனா, தெலுங்கானா மாநிலம் மெகபூப்நகர் மாவட்டத்தில் சாத் நகர் அருகே பாப்பிரெட்டி குடா என்ற கிராமத்தில் 40 ஏக்கரில் விளை நிலம் ஒன்றை அண்மையில் வாங்கியிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அந்த விளைநிலம் இயற்கை விவசாயம் செய்வதற்கு ஏற்ற வகையில் உள்ளதா என மண்ணின் தன்மையை அறிவதற்காக நிபுணர் குழுவினை நாகர்ஜூனா கடந்த புதன்கிழமை அனுப்பி வைத்திருந்தார்.

அங்கு சென்ற அந்தக் குழு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியுள்ளது. எங்கிருந்து வருகிறது என்பதை அறியும் நோக்கோடு தேடிய போது களஞ்சிய அறையில் இருந்து இந்த துர்நாற்றம் வருவதை அறிந்து அந்த களஞ்சிய அறையை திறந்துள்ளனர்.

அங்கு மனித எ லும்புக் கூடு கிடந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பொலிஸிற்கு தகவல் வழங்கியதையடுத்து, எ லும்புக் கூட்டை மீட்ட பொலிஸார் விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், நிலத்தை இந்த மாதம் முதல் வாரத்தில் நாகார்ஜூனாவின் மனைவி நடிகை அமலா பார்வையிட்டு இருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அங்கிருந்து மீட்கப்பட்ட எ லும்புக் கூடு சுமார் 35 வயது மதிக்கத்தக்கவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் எனவும் அந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உ யிரிழந்த நபர் 6 மாதத்திற்கு முன் உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர் எனவும், அவர் டீ சேர்ட் மற்றும் காற்சட்டை அணிந்திருக்கலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.