சாண்டி விசயத்தில் பிக்பாஸ் காஜலை துரத்தும் அந்த ஒரு கேள்வி : மிகவும் வருத்தப்பட வைத்த விஷயம்!!

காஜலை துரத்தும் அந்த ஒரு கேள்வி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் 3 ல் தற்போது போட்டியாளராக இருப்பவர் சாண்டி மாஸ்டர். அண்மையில் அவரை சந்திக்க வந்த அவரின் மனைவி சில்வியாவையும் மகள் லாலாவையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

அவருக்கு முன்பே நடிகை காஜல் பசுபதியுடன் திருமணமாகி பரஸ்பர விவாகரத்து ஆனதை பலரும் அறிந்திருப்பார்கள். அண்மைகாலமாக காஜல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொருவரின் நடவடிக்கைகள் குறித்தும் கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

ரசிகர்களோடும் டிவிட்டரில் பேசி வருகிறார். இந்நிலையில் அவரை, சாண்டிக்கும் உங்களுக்கு என்ன? குழந்தைகள் இருக்கிறதா? இது உண்மையா பொய்யா என பலரும் தொடர்ந்து கேள்வி கேட்டு வருகிறார்களாம்.

இதனால் காஜல் கடுப்பாகியுள்ளார். மேலும் அவர் இந்த கேள்விக்கு நான் அவரை திருமணம் செய்துகொண்டேன், விவாகரத்தும் பெற்றுவிட்டேன். குழந்தைகள் இருப்பதாக வரும் தகவல் பொய்யானது. அவர்கள் என்னுடை உறவுக்கார குழந்தைகள். எனக்கு குழந்தை இல்லை என்பதை பலமுறை சொல்லிவிட்டேன். நான் அந்த வாய்ப்பை தவற விட்டுவிட்டேன். நான் எப்போதும் வருத்தப்படுவது இந்த ஒரு விசயத்தில் தான் என கூறியுள்ளார்.

பிக்பாஸ் கவின் முகத்திரையை கிழித்த தர்ஷன் : சேரப்பா ரியாக்‌ஷன் – லாஸ்லியா ஷாக்கிங்!!

பிக்பாஸ் கவின் முகத்திரையை கிழித்த தர்ஷன்

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 85 நாட்களை கடந்துவிட்டது. தற்போது உள்ளே ஷெரின், சாண்டி, சேரன், கவின், லாஸ்லியா, முகென், தர்ஷண் ஆகியோர் உள்ளார்கள்.

இனி தான் நிஜமான போட்டியே ஆரம்பம் என்பது போல உள்ளிருக்கும் போட்டியாளர்களின் நடவடிக்கைகள் மாறிவருகிறது. டிகெட் டு ஃபினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது.

சுயசிந்தனையும், தனித்தன்மையும் இல்லாமல் கூட்டத்தில் ஒளிந்து வாழ்பவர்கள் என கவினையும், மக்களின் அனுதாப அலைக்காக நடிக்கும் பரிதாபங்கள் என சேரனையும் சொல்லி காட்டுகிறார். லாஸ்லியாவும், மற்ற போட்டியாளர்களும் இதனை அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள்.

இணையதளத்தில் பிரச்சாரம் ஆரம்பித்த பிக்பாஸ் புகழ் அபிராமி வெங்கடாச்சலம்!!

அபிராமி

பிக் பாஸ் 3 பல சர்ச்சைகள் சண்டைகள் எல்லாம் தாண்டி இறுதி கட்ட போட்டியில் இருக்கிறது.

கடைசி வாரம் போட்டியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் குடும்பத்தினர் வீட்டுக்குள் வந்து சென்றனர். இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் லொஸ்லியா மற்றும் ஷெரின் இருக்கிறார்கள்.

லொஸ்லியாவும் ஷெரினும் அபிராமிக்கு தோழிகளாக இருந்த நிலையில் அபிராமி போட்டியில் இப்போது இல்லை.

ஆனால் அபிராமி பிக்பாஸ் ரசிகர்களிடம் ஓட்டு போடுவது உங்கள் விருப்பம் ஆனால் எனது தோழியும் தங்கையும் நாமினேஷனில் உள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக இருக்க விரும்புகிறேன் ஷெரின் கடைசி வரைக்கும் போட்டியை தொடர்வதற்கு தகுதியானவர் எனவே அவர்களுக்கு ஓட்டு போடுமாறு ரசிகர்களிடம் பிரச்சாரம் செய்துவருகிறார்.

பிக்பாஸ் 3 தர்ஷன் காதலி சனம் ஷெட்டிக்கு அடித்த லக் : சூப்பர் அப்டேட்!!

சனம் ஷெட்டிக்கு அடித்த லக்

பிக் பாஸ் 3 தர்ஷனுக்கு நிறைய பெண் ரசிகர்கள் இருக்கிறார்கள்.அவரது ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் சனம் ஷெட்டியும் தர்ஷனும் காதலிக்கிறார்கள் என்ற தகவலும் வர, ஒரு கட்டத்தில் சனம் நான் இனி தர்ஷன் காதலி இடையாது என வீடியோவே வெளியிட்டுவிட்டார்.

தற்போது யு ஆர் ஜமீல் இயக்கி வரும் மஹா படத்தில் நடிகை ஹன்சிகாவுடன் சனம் ஷெட்டி இப்படத்தில் இணைய உள்ளராம்.

எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் மஹா படத்தில் ஹன்சிகாவும் கேமியோ கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார்கள்.

திரில்லர் படமான இந்த பட போஸ்டர் வெளிவர படத்தின் மீது ஆர்வமும் எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இப்போது சனம் ஷெட்டியும் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கவர்ச்சி நடிகை ஸ்ரீரெட்டியின் சமீபத்திய புகைப்படங்கள்!!

ஸ்ரீரெட்டி

பிக் பாஸ் தர்ஷனின் நண்பரை திடீர் திருமணம் செய்து கொண்ட பிக் பாஸ் புகழ் ரம்யா!!

பிக் பாஸ் புகழ் ரம்யா

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்குபற்றி மக்களுக்கு பரீட்சியமான பாடகி ரம்யா பிரபல டிவி சீரியல் நடிகரை திடீர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. திருமண நிகழ்வில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற மும்தாஜ், ஜனனி ஐயர் உள்ளிட்ட பிக் பாஸ் பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை, ரம்யா தனது திருமண அறிவிப்பை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். ரம்யாவின் இந்த திடீர் திருமணத்தால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், ரம்யா திருமணம் செய்துகொண்டுள்ள நடிகர் சத்யா தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று வரும் இலங்கை தர்ஷனின் நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அது மட்டும் அல்லாமல் அவருக்கு பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களையும் சமூகவலைத்தளத்தில் கூறி வருகின்றனர்.

ஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்ட ஆல்யா, சஞ்சீவ் : எங்க போயிருக்காங்கனு தெரியுமா?

ஆல்யா – சஞ்சீவ்

பிரபல ரிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி நாடகத்தில் நடித்த ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரகசிய திருமணம் செய்துள்ளனர்.

ராஜா ராணி சீரியலில் இருவரும் செம்பா, கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் கணவன், மனைவியாக சேர்ந்து நடித்திருந்தனர். அவர்களது கெமிஸ்டரி மக்களிடம் மிக அதிகமாக ரசிக்கப்பட்டது.

இந்த ஜோடிகளுக்கிடையே நிஜத்தில் காதல் மலர்ந்தது. இவர்களுக்கு பிரபல ரிவி திருமண நிச்சயதார்த்தமும் செய்து வைத்தது. அத்தருணத்தில் மோதிரம் மாற்றிக்கொண்டதுடன் தற்போது ரகசிய திருமணம் செய்துள்ளனர்.

இந்நிலையில் தங்களது ஹனிமூன் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர். குறித்த புகைப்படத்தில் புதுமணத்தம்பதிகள் கொடுத்திருக்கும் ஸ்டில்லைப் பாருங்க…

அதுமட்டுமின்றி அவர்களைப் போலவே அவர்கள் ஹனிமூன் சென்ற மாலத்தீவும் அனைவரையும் சொக்க வைத்துள்ளது.

பிக்பாஸ் வீட்டிலிருந்து அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட வனிதா : பிக் பாஸின் மிகப்பெரிய பிளான்!!

பிக் பாஸின் மிகப்பெரிய பிளான்

பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதாவை வெளியேற்றியதன் பின்னணியில் பிக் பாஸின் மிகப்பெரிய பிளான் உள்ளது. பிக் பாஸ் வீடா இல்லை வனிதா வீடா என மக்களே ஆச்சர்யப்படும் அளவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்தவர் வனிதா.

ஆனால் மூன்றாம் வாரமே அவர் அதிரடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் மீண்டும் அவரை வைல்ட் கார்ட் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் அழைத்து வரப்பட்டார்.

எதிர்பார்த்தபடியே கண்டெண்டுகளை வாரிக் கொடுத்த வனிதா, நேற்று மீண்டும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை யார் எது பேசினாலும், அதை வைத்து குட்டி கலாட்டாக்கள் பண்ணுவதில் வல்லவராக இருந்தார் வனிதா.

இதனால் அவர் வெளியேற்றப்பட்டதும் இனி கண்டெண்ட்டுகள் கிடைக்காதோ என்ற தவிப்பு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. வனிதாவின் வெளியேற்றத்திற்கு பின்னணியிலும் சரி, இனி வரும் எபிசோட்களுக்கான பிளானிலும் சரி, பிக் பாஸ் வேறொரு திட்டம் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இன்னமும், வீட்டுக்குள் சண்டை சச்சரவுகளை வைத்து மட்டும் ஓட்ட முடியாது. ஏற்கனவே இது பிக் பாஸா இல்லை சீரியலா எனக் கேட்கும் அளவிற்கு அழுகாச்சி காவியமாக நிகழ்ச்சி நகர்ந்து வருகிறது.

காதல், நட்பு, குடும்ப செண்டிமெண்ட் என போர் அடிப்பதாக நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர். எனவே, போட்டியாளர்களை ஆக்சனில் இறக்க வேண்டிய கட்டாயம் பிக் பாஸிற்கு வந்துவிட்டது.

இனியும் வனிதா பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தால், அவர் மூலம் ஏதாவது பிரச்சினை வந்து கொண்டே தான் இருக்கும். எனவே தான் அவரை வெளியில் அனுப்பி விட்டார்கள் என்கிறார்கள்.

பிரச்சினை செய்யாமல் உள்ளே இருந்தால் அவரது கெத்தே போய் விடும் என்பதால் வனிதாவும் இந்த காண்ட்ராக்ட்டிற்கு ஓகே சொல்லி விட்டார் போல.

பிரபுவுடன் எனக்கு அழகான உறவு இருந்தது உண்மை தான் : மனம் திறந்து பேசிய குஷ்பு!!

மனம் திறந்து பேசிய குஷ்பு

கடந்த 1990 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் பிரபுவும் குஷ்புவும் காதலிப்பதாகவும் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வருவதாகவும் கிசுகிசுக்கள் எழுந்தன.

ஆனால் சிவாஜி குடும்பத்தினர்களின் முயற்சியால் இந்த ஜோடி பிரிக்கப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் குஷ்பு, இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டது தெரிந்ததே.

இந்த நிலையில் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்த குஷ்பு, பிரபுவுடனான உறவு குறித்து கூறியதாவது, சுந்தர் என்னை புரபோஸ் செய்யும் போதே திருமணத்தை மனதில் வைத்து தான் புரப்போஸ் செய்தார். அது எனக்குப் பிடித்திருந்ததால் நான் உடனே சம்மதித்தேன்.

ஆனாலும் எங்களது திருமணம் உடனே நடந்து விடவில்லை. ‘ஒரு நடிகையான உனக்கு செளகர்யமான வாழ்க்கைமுறை அமைத்துத் தரும் அளவுக்கு நான் எப்போது பொருளாதார வசதி அடைவேனோ அப்போது நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என சுந்தர் கூறியிருந்தார்.

அதன்படி 1999 ல் அவர் சொந்த வீடு கட்டினார். அவர் எதிர்பார்த்த பொருளாதார வசதிகளை எனக்கு ஏற்படுத்தித் தந்தார். உடனே அடுத்த வருடமே 2000 ல் எங்களது திருமணம் நடந்தது.’ இவ்வாறு குஷ்பு அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

பிரபுவும் குஷ்புவும் இணைந்து தர்மத்தின் தலைவன், வெற்றி விழா, சின்னத்தம்பி, பாண்டித்துரை, மை டியர் மார்த்தாண்டன், கிழக்குக்கரை, சின்ன வாத்தியார் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தனர் என்பதும் இதில் சின்னத்தம்பி திரைப்படம் சூப்பர் ஹிட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கமல் சாரிடம் ஏன் அந்த வார்த்தையை சொன்ன… கவின் லொஸ்லியா இடையே மீண்டும் வாக்குவாதம்!!

கவின் – லொஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் மற்றும் லாஸ்லியா காதலித்து வருகின்றனர். ஆனால் லாஸ்லியாவின் பெற்றோர் வீட்டுக்குள் வந்தபோது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் லாஸ்லியா இனி கேமில் மட்டுமே கவனம் செலுத்துவேன் என முடிவெடுத்தார்.

இந்நிலையில் கமலிடம் லாஸ்லியா சொன்ன ஒரு விஷயம் பற்றி கவின் நேற்று கோபத்துடன் பேசினார். “நேத்து நீயும் அதைத்தானே சொன்ன. கமல் சார் கிட்ட பேசும்போது. பிக்பாஸ் வந்ததில் இருந்து சில பழக்கங்கள் ஏற்பட்டது. அது உண்மையா பொய்யா தெரியல இன்னும் அப்டினு” என கவின் கேட்டார்.

அதற்கு லாஸ்லியா “நான் உன்னைப்பற்றி சொல்லவில்லை. சேரன் பற்றி இதற்குமுன் கூறியதை தான் மீண்டும் கூறினேன். உண்மையை பொய்யா என்கிற கேள்வி ஆரம்பத்தில் இருந்தே இருப்பது பற்றித்தான் பேசினேன்” என பதில் அளித்தார்.