வரலாற்று படத்தின் நாயகனும், நாயகியும் மீண்டும் காதலித்து வருவதாக தகவல் பரவுகிறதாம்.தமிழ், தெலுங்கு மொழிகளில் அதிக வசூல் ஈட்டிய வரலாற்று படத்தின் நாயகனும், நாயகியும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன.
இருவருக்கும் படப்பிடிப்பில் நெருக்கம் ஏற்பட்டதாகவும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் பேசப்பட்டதாம். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காதலை முறித்துக் கொண்டார்களாம்.
இதனிடையே வெளிநாட்டில் வசிக்கும் தொழில் அதிபர் மகளை மணக்க நடிகர் தயாரானதாக தகவல்கள் கசிந்ததாம். இந்த நிலையில் வரலாற்று பட நாயகனும், நாயகியும், அமெரிக்காவில் புதிதாக வீடு வாங்க இருப்பதாகவும், இதற்காக அங்கு வீடு பார்க்கும் வேலையை அவர்கள் தொடங்கி இருப்பதாகவும் செய்திகள் பரவுகிறதாம். இதன் மூலம் இருவருக்கும் மீண்டும் காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறதாம்.
நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் சீரியலில் கமிட் ஆகியுள்ளார் நடிகை விசித்ரா.நடிகை விசித்ராவை நினைவிருக்கிறதா? கவர்ச்சி, குத்துப்பாட்டு எனத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி ‘ரசிகன்’, ‘முத்து’, ‘வீரா’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர். தொடர்ந்து குணச்சித்திர நடிகையாகவும், ஒருகட்டத்தில் சீரியல்களிலும் நடித்தார். திருமணமாகி கணவருடன் மைசூரில் செட்டிலானவர், 18 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது தமிழ் சீரியலுக்கு வந்திருக்கிறார். இவர் நடிக்கும் சீரியல் சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீரியலில் வில்லியாக நடிக்க இருக்கிறார். முதல் கட்டமாகச் சென்னையிலும், தொடர்ந்து தேனி பகுதியிலும் ஷூட்டிங் நடைபெறுகிறதாம். சென்னைக்கு வந்திருந்தவரிடம் பேசினோம்.
“சினிமாவுக்கு வர்ற எல்லாருக்குமே ஹீரோயின் ஆகணும்கிற ஆசை இருக்கத்தான் செய்யும். நான் மட்டும் விதிவிலக்கா இருப்பேனா? ஆனா குத்துப்பாட்டுக்கு ஆடுறவங்க; கவர்ச்சி நடிகைங்கிற அடையாளம்தான் எனக்கு முதல்ல கிடைச்சது. அதுக்காகப் பெரிசா வருத்தப்படலை. ஏன்னா, அன்னைக்கு கவர்ச்சி நடிகைகளில் விஜய் படத்துல இருந்து ரஜினி படம் வரைக்கும் எல்லா நடிகர்களின் படங்களிலும் வந்தவங்களை விரல்விட்டு எண்ணிடலாம். அதுலேயும் என்னை ரஜினி சாரே தன்னோட ஒரு படத்துக்கு ரெகமெண்டு பண்ணினார். இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், கவுண்டமணினு பெரிய பெரிய ஆளுங்களோட வொர்க் பண்ணிட்டேன்.
நான் எடுத்துக்கிட்ட 18 வருஷம்கிறது பெரிய இடைவெளிதான். ’கல்யாணத்துக்குப் பிறகு நடிப்போமா இல்லையா’ங்கிற கேள்வி அன்னைக்கு எனக்குள்ளும் இருந்தது. அதுக்குப் பதில் கண்டுபிடிக்கறதுக்கு முன்னாடியே மும்பை, புனேனு பல இடங்களுக்கு மாறியிருந்தேன்; கணவரோட வேலை அப்படி. தொடர்ந்து குழந்தைகள். மூணு பேரையும் நல்லபடியா வளர்த்து ஆளாக்க வேண்டிய பொறுப்பும் சேர்ந்துகிடுச்சு.
இதுக்கிடையில பொருளாதார ரீதியா உதவும்னு தொடங்கின ஹோட்டல் பிசினஸ் ஒருபுறம். இவ்வளவுக்கு மத்தியிலும் ‘சினிமாவிலோ, சீரியலிலோ மறுபடியும் நடிப்பேன்’னு மட்டும் ஒரு உள்ளுணர்வு சொல்லிட்டே இருந்தது. நான் சைக்காலஜி படிச்சவள். அதை வச்சு சொல்றேன், நம்முடைய ஆழ் மனசு ஒரு விஷயத்தை நடக்கற மாதிரியே நினைக்குதுன்னா, ஒருநாள் அந்த விஷயம் நிச்சயம் நடந்திடும். இதோ இப்ப கமிட் ஆகிட்டேனே! இனி தினமும் எல்லாரையும் சந்திக்கப் போறேன்’’ – உற்சாகமாகச் சொன்னவரிடம், இந்த நீண்ட இடைவெளிக்குப் பிறகான ஷூட்டிங் அனுபவம் குறித்துக் கேட்டோம்.
‘’சினிமாவுல அறிமுகமானப்போ 18 வயசுகூட ஆகலை. பெரிசா சினிமா பின்னணி இல்லாத, அப்பா கவர்மென்ட்ல வேலை பார்த்த குடும்பம் எங்களோடது. அதனால இயல்பாவே ஒரு பயம் இருந்தது. ஒருவழியா அதையெல்லாம் கடந்து ரஜினி சார் படம் வரைக்கும் நடிச்சுட்டேன்.
ஆனா இன்னைக்கு சீரியலுக்கு கிடைக்கிற வரவேற்பு உண்மையிலேயே வியக்க வைக்குது. சீரியல் நடிகர் நடிகைகளைக் கேரக்டர் பெயர்லயே கூப்பிடறதும், அவங்களை தங்களோட வீட்டுல ஒருவராவே பார்க்கறதுமா, ஆச்சர்யமா இருக்கு. அந்த வகையில கவர்ச்சி நடிகை விசித்ராங்கிறது என்னோட பழைய அடையாளமா இருக்கலாம்.
ஆனா நானும் இனி உங்க வீட்டுல ஒருத்தியா இருக்கப் போறேன்னு நினைக்கிறப்ப சந்தோஷமா இருக்கு. இப்போ, உடன் நடிக்கிறவங்களில் சிலர் என்னோட படங்கள் வெளியான நாள்கள்ல ஸ்கூல்ல படிச்சவங்களாம். அவங்களுக்கெல்லாம் எங்கிட்ட வந்து பேச ஆசை. ஆனா ஏனோ தயங்கவும் செய்றாங்க. ஷூட்டிங் இப்பதானே தொடங்கியிருக்கு, போகப்போக கூச்சம், தயக்கமெல்லாம் சரியாகி தெளிவாகிடுவாங்கன்னு நம்பறேன்’’ எனச் சிரிக்கிறார் விசித்ரா.
நடிகர் திலகம் சிவாஜியுடன் அவருடைய மகனான பிரபல நடிகர் பிரபு இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
சில நினைவுகளை ரீவைன்ட் செய்து பார்க்கும் பொது மிகவும் மகிழ்ச்சியாய் தான் இருக்கும்.செல்பி எடுக்க முடியாத காலகட்டங்களில் பொக்கிஷமான புகைப்படங்கள் நமது முந்தைய தலைமுறையினர் எத்தனையோ சேகரித்து வைத்து உள்ளனர்.
அந்த வகையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்தாலும், அவர் விட்டு சென்ற பொக்கிஷமாக இந்த ஃபோட்டோ பார்க்கப்படுகிறது இது போன்ற போட்டோக்கள். அதுவும் பிரபு என்றால் சொல்லவா வேண்டும்.
ஏராளமான ரசிகர்களுக்கு இந்த போட்டோ ஒரு நல்ல சுவாரஸ்யமான விஷயமாக தான் இருக்கும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது.
இளைய திலகம் பிரபு இன்னும் நிறைய புகைப்படங்களை வெளியிட்டு ஒரு ஆர்ட் எக்சிபிஷன் வைக்க போவதாகவும் ஒரு தகவல் கசிந்து வருகிறது.
மணிரத்னம் இந்திய சினிமாவில் இன்றும் கொண்டாடப்படும் இயக்குனர். இவர் இயக்கத்தில் கடைசியாக வந்து மெகா ஹிட் ஆன படம் செக்கச்சிவந்த வானம்.
இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்திருந்தார், இவர் தற்போது பாக்ஸர், மாஃபியா ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.
இவரை மணிரத்னம் தற்போது இயக்கவிருக்கும் பொன்னியன் செல்வன் படத்தில் நடிக்க அனுகியுள்ளனர்.
ஆனால், அவர் ‘நான் தற்போது தான் ஒரு சில சோலோ ஹீரோ படங்களில் நடித்து வருகின்றேன், இந்த படத்திற்காக கால்ஷிட் ஒதுக்கினால், அதில் கவனம் சிதறும்’ என கூறி விலகிவிட்டாராம்.
பிக்பாஸ் வீட்டில் வழக்கம் போல காதல், சண்டை, போட்டி, பொறாமை என சச்சரவுகள் போய்க்கொண்டிருக்கிறது. இந்த வாரத்தோடு பிக்பாஸ் வீட்டை காலி செய்யப்போவது யார் என நாளை தெரிந்துவிடும்.
காப்பாற்றப்படுகிறவர்கள் யார் என்பது இன்று தெரிந்துவிடும். இதற்கிடையில் நிகழ்ச்சி கொஞ்சம் வித்தியாசப்பட்டு வருகிறது.
தற்போது இந்நிகழ்ச்சியின் கவின், லாஸ்லியா இருவரும் இருட்டில் தனியாக பேசுகிறார்கள். இதனை கமல் குறும்படமாக இல்லாமல் விளக்க படம் போட்டுக்காட்டு கிறார். இதில் கவின், லாஸ்லியா இருவரும் முகத்தில் திகில் கலந்தது போல வைத்துக்கொள்கிறார்கள்..
பிக்பாஸ் சீசன் 3 யின் போட்டியாளரும் நடன இயக்குனருமான சாண்டியின் முதல் மனைவி காஜல் பசுபதி. கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பரம் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
இந்நிலையில், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான காஜல் பசுபதி, தனது முன்னாள் கணவன் சாண்டிக்கு ஆதரவாக அடிக்கடி பதிவுகளை பகிர்ந்து வந்தார்.
இதனை பார்த்த ரசிகர் ஒருவர் “அந்த கேடு கெட்டவன் உன்ன குப்பை மாதிரி தூக்கி எறிஞ்சுட்டான்.. நீ அவனுக்கு கூஜா தூக்கிட்டு திரியுற ” என கருத்து கூறியிருந்தார்.
இதனால் கடுப்பான நடிகை காஜல் பசுபதி, அவரு என்னை தூக்கி எறிஞ்தை நீ பாத்தியா.. உன் அளவுக்கு கீழே இறங்கி பதில் சொல்ல நான் விரும்பல, பரஸ்பர சம்மதம் என்று ஒன்று உள்ளது.
மத்தவங்க லைஃப் பத்தி தெரியாமா எல்லாத்துக்கும் கதற வேண்டாம் என்று கோபமாக பதிவிட்டுள்ளார்.
சின்னத்திரை நடிகை சரண்யா விஜய் டிவியின் நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் பிரபலமமானவர். இவர் தனது சிறப்பான நடிப்பின் மூலம் பல்வேறு தரப்பு சின்னத்திரை ரசிகர்களையும் கவர்ந்துள்ளார் . இவர் தற்போது சன் டிவியின் ரன் சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் படப்பிடிப்புக்கு சென்ற நடிகை சரண்யா படப்பிடிப்பு தளத்தில் திடீரென மயங்கி விழுந்தார். இதனை அடுத்து நடிகை சரண்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் . இதனால் படப்பிடிப்பு தளத்தில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது .
மேலும் நடிகை சரண்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . இவரின் இந்த புகைப்படம் ஆனது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சென்னையில் திடீரெனெ பெய்த மழையால் ஏற்பட்ட கால நிலை மாற்றத்தினால் வைரல் பீவர் வந்துள்ளதாகவும் இதனால் சோர்வு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சரண்யா அந்த இன்ஸ்டாகிரம் பக்கத்தில் கூறியுள்ளார்.
பிக்பாஸ் வீட்டிற்க்குள் நாள் முழுக்க நடக்கும் விஷயங்களில் கண்காணித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை மட்டும் தான் அந்த 1 மணி நேர நிகழ்ச்சியில் ஒளிபரப்ப செய்வார்கள்.
அதில் ஒருப்பிரச்சனை உருவாகிறது என்றால் அதற்கு வாலும் இல்லாமல் தலையும் இல்லாமல் அவர்கள் ஹை லெவலில் சண்டை போட்டுக்கொள்வது மட்டும் தான் ஹைலைட் செய்யபடுகிறது.
இந்த நிலையில் கவின் சாக்ஷி நள்ளிரவுகளில் தனியாக அமர்ந்து பேசுவது போன்ற காட்சிகள் வெளிப்படையாக காண்பிக்கபட்டது, அதனை தொடர்ந்து லாஸ்லியா கவினும் அது போல செயல்பட்டார்கள்.
இதனால் பல அமளித்துமளிகள் ஆனதும் , சித்தப்பு உட்பட பலர் இதற்க்கு எதிர் கருத்து சொன்னதும் அனைவரும் அறிந்தது தான் இருந்தாலும் இதற்க்கு பெரிதாக எதிர் வினையை ஆற்றியவர், தர்ஷன் பல முறை இந்த கேள்வியை தர்ஷன் லாஸ்லியாவிடம் கேட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தர்ஷனும் – செரினும் தனிமையில் நள்ளிரவுகளில் அமர்ந்து பேசுவது போல காட்சிகள் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.
இதற்கு இடையில், தர்ஷன் என்ன கோச்சுகிட்டியா என கேட்பதும், அதற்கு செரின் செல்லமாக கோவபடுவதும் உடனே தர்ஷன் தாஜா பண்ணுவதும் என சில நிமிடங்கள் ஓடும் வீடியோ காட்சிகள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நீக்கபட்டதாக அதன் அதிகாரபூர்வ இண்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியது. இதனை அடுத்து சில மணி நேரத்திற்க்குள்ளாக வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் வீட்டில் மட்டும் இன்றி, வெளியே வந்ததும் கூட மதுமிதாவால் பெரும் ச ர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் த ற்கொ லை முயன்றதாக கூறி வெளியேற்றப்பட்ட மதுமிதா மீது விஜய் டிவி தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரில் மதுமிதா த ற்கொ லை செய்துக்கொள்வதாக மி ரட்டுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புகாரின் முழு பின்னணியும் தற்போது தெரிய வந்துள்ளது.
பிக் பாஸ் வீட்டில் இருந்து மதுமிதா வெளியே செல்லும் போது அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான பில் அனுப்பி வைக்கப்பட்டதாம். ஒப்பந்தத்தில் கூறியபடி மதுமிதா ஏற்கனவே ரூ.11.50 லட்சம் பெற்றுள்ளார். மீதமுள்ள ஒரு நாள் ரூ.80,000 வீதம் 42 நாட்களுக்கான பாக்கி பணத்தை திருப்பி தருவதாக விஜய் டிவி நிர்வாகம் கூறியிருக்கிறது.
அப்போது அதற்கு ஒப்புக்கொண்ட மதுமிதா, திடீரென்று கடந்த 19 ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டீனா என்பவருக்கு வாட்ஸ் அப் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி மி ரட்டல் விடுத்துள்ளார். அதில், இன்னும் இரண்டு நாட்களில் பாக்கி பணத்தை தரவில்லை என்றால் த ற்கொ லை செய்து கொள்வேன், என்று மிரட்டியுள்ளார்.
மேலும், இது குறித்து நடிகை மதுமிதாவிடம் கேட்டதற்கு, “விஜய் டிவியுடன் ஒப்பந்தம் செய்திருப்பதால் எதையும் தெரிவிக்க முடியாது. ஆனால், தனக்கு தர வேண்டிய நிலுவை தொகையை விஜய் டிவி தரவில்லை. இந்த புகாரை சட்ட ரீதியாக எதிர் கொள்வேன்” என்று தெரிவித்திருக்கிறார்.