பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ஓவியா? போட்டியாளராக இல்லை, எப்படி நுழையவுள்ளார் பாருங்கள்!!

பிக்பாஸின் முதல் சீசனின் மூலம் மிக பிரபலமானவர் நடிகை ஓவியா. பிக்பாஸ் வீட்டில் ஆரவ்வுடன் காதல் என இவரது ட்ராக் மாறினாலும் மக்கள் இவர் மேல் வைத்திருந்த அன்பு குறையவில்லை.

பிறகு இரண்டாவது சீசனின் துவக்கத்தில் கெஸ்ட்டாக நுழைந்தவர் அதன் பின் சில படங்களிலும் நடித்துவிட்டார். இந்நிலையில் ஓவியா கதாநாயகியாக விமலுடன் நடித்துள்ள களவாணி-2 படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளதால் இதற்கு ப்ரமோஷன் தேடி கொள்வதற்காக ஓவியா பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்தில் ஒரு நாள் செல்ல வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

ஓவியா பிக்பாஸ் வீட்டில் வந்தால் அன்று டிஆர்பி எகிறும் என்பதால் பிக்பாஸும் இதற்கு அனுமதிப்பார் என்றே தெரிகிறது. கடந்த சீசனில் கூட கார்த்தி கடைக்குட்டி சிங்கம் படத்திற்காகவும் ஹரிஷ் கல்யான் பியார் ப்ரேமா காதல் படத்திற்காகவும் சென்றது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸின் 17வது போட்டியாளர் இந்த பிரபலம் தானா? பவர் ஸ்டார் கிடையாது, யாரென்று பாருங்க!!

பிக்பாஸ் மூன்றாவது சீசனில் 16 போட்டியாளர்கள் இதுவரை கலந்து கொண்டுள்ளனர். ஆனால் மொத்தம் 17 போட்டியாளர்கள் என்று பிக்பாஸ் ஆரம்பத்திலேயே கூறியிருந்தார். அந்த 17வது போட்டியாளர் யார் என்று ரசிகர்கள் குழம்பி போக சிலரோ அது பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் தான் என கூறி வந்தனர்.

ஆனால் பிக்பாஸ் மூன்றாவது சீசனின் 17வது போட்டியாளராக பிரபல செய்தி வாசிப்பாளர் பனிமலர் பிக்பாஸ் வீட்டினுள் செல்லவுள்ளதாக மிகவும் நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. 17வது போட்டியாளர் யாராக இருந்தாலும் இன்று (ஞாயிறு) உள்ளே செல்வார் என்று தெரிகிறது.

 

கண்ணீர் விட்டு கதறி அழுத இலங்கைப் பெண் லொஸ்லியா : காரணம் இதுதான்!!

பிக்பாஸ் மூன்றாவது சீசனில் இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்கள் அனைவரும் தாங்கள் வாழ்க்கையில் நடந்த சோகத்தை கண்ணீருடன் தெரிவித்துவருகின்றனர்.

இன்று இலங்கை பெண் லொஸ்லியா தன் கதையை பேசியுள்ளார். தன்னுடைய அக்கா குடும்ப சண்டையில் விபரீத முடிவு எடுத்ததுடன் தற்போது உயிருடன் இல்லாதது பற்றி கண்ணீருடன் பேசியுள்ளார்.

மேலும் தன்னுடைய அப்பா கனடாவில் இருபதாகவும், அவரை பார்த்தே 10 வருடம் ஆகிறது என அவர் கண்ணீருடன் பேசியுள்ளார்.

மீராவுடன் என்ன தான் பிரச்சனை? உண்மையை உடைத்த பிக்பாஸ் அபிராமியின் அம்மா!!

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் தனது மகள் அபிராமியை மீரா வம்புக்கிழுப்பது போல இருப்பதாக கூறியுள்ள அவர் தாய் அதற்கான காரணம் குறித்து பேசியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் புதிதாக இரு தினங்களுக்கு முன்னர் மீரா மிதுன் நுழைந்தார். இதன்பின்னர் அபிராமிக்கும் ,மீராவுக்கும் பிரச்சனை இருப்பது போல ப்ரோமோ காட்டப்பட்டது.

இது குறித்து பேசிய அபிராமியின் தாய், அபிராமியும், மீராவும் மாடலிங் என்ற ஒரே துறையை சேர்ந்தவர்கள். ஒருவரும் மிஸ் தமிழ்நாடு அழகி போட்டியில் ஒன்றாக சந்தித்துள்ளனர், இருவருக்கும் சிறிய நட்பு இருந்தது.

அதன்பின்னர் இருவருக்கும் ஏதோ பிரச்சனை இருந்திருக்கலாம், அது குறித்து நாம் ஆராயக்கூடாது. ஏனென்றால் இருவருக்கும் வெவ்வேறு குணம் இருக்கலாம். எனக்கு என் மகளை பற்றி தெரியும், ஆனால் மீராவை பற்றி அதிகம் தெரியாது.

கடைசியாக பார்த்த பிக்பாஸ் புரோமோவி, அபிராமியை மீரா வேண்டுமென்றே வம்புக்கு இழுப்பது போல உள்ளது. மீரா முதல் நாள் வரும் போதே அவரை பிடிக்காதது போல பலரும் முகபாவனையை காட்டினார்கள். அப்படியென்றால் மீராவிடம் எதோ பிரச்சனை இருப்பதாகவே கருதுகிறேன் என கூறியுள்ளார்.

மேனேஜருடன் படுத்ததால் தான் இப்படி இருக்கேன் என்றார்கள்.. இலங்கை மாடலை கஷ்டப்படுத்திய அந்த நிகழ்வு!!

பிக்பாஸ் வீட்டில் நேற்றிலிருந்து லக்சரி பட்ஜெட்டுக்காக போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த கசப்பான நிகழ்வுகளை கூறி வருகின்றனர்.

அந்த வகையில், நான்காவது நாளான இன்று இலங்கையைச் சேர்ந்த மாடலான தர்ஷன் தனது வாழ்க்கையில் நிகழ்ந்த கஷ்டங்கள் குறித்து கூறிக் கொண்டிருந்தார். அப்போது, மனதை புன்படுத்திய நபர் குறித்து கூறுங்கள் என்று பிக்பாஸ் டாஸ்க் கொடுத்திருந்தார்.

அது குறித்து பேசிய தர்ஷன், நான் மிஸ்டர் ஸ்ரீலங்கா பட்டம் வென்றதை பிடிக்காத பிரபல மாடலிங் மேனஜரான பிரைன் என்பவருடன் படுத்ததால் தான் இந்த நிலைமைக்கு வந்துள்ளான் என்று மிகவும் மோசமாக விமர்சித்ததாக கூறியுள்ளார்.

மேலும், பலர் என்னை விமர்சித்தனர். நான் இன்டர்நேஷனல் போட்டிக்கு செல்ல ஸ்பான்சர் இல்லாமல் போனதால் என் அம்மா தன்னுடைய நகையை விற்று தருகிறேன் நீ விமானத்திலாவது சென்று வந்துவிடு என கூறினார் என தர்ஷன் உருக்கமாக பேசியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் கதறி அழுத மதுமிதா!!

பிக்பாஸ் வீட்டில் நேற்று அனைவரையும் கண்கலங்க வைத்தவர் ஜாங்கிரி மதுமிதா தான், அவர் தன்னுடைய அம்மா மற்றும் அப்பாவின் காதல் கதை பற்றி கூறிய போது, என் அம்மாக்கு படிப்பு என்றால் அவ்வளவு பிடிக்கும், பார்க்க மிக அழகாக இருப்பார்.

அப்படி இருக்கையில் எங்க அப்பா வை ஒன் சைடாக காதலித்து, அம்மாவின் தாத்தா பாட்டியை ஐஸ் வைத்து திருமணம் செய்து கொண்டார். என் அப்பா குடி பழக்கத்திற்கு அடிமையானவர், இருப்பினும் அம்மா வாழ்ந்து வந்தாங்க, அப்புறம் அப்பா தொடர்ந்து குடித்து.. குடித்து.. சீக்கிரமே இறந்து போய்விட்டார்.

அப்பா இறந்த போது அம்மாவுக்கு வயது 30 கூட இருக்காது, அக்கா மூன்று பேர் மட்டும் தான், அண்ணன், தம்பி கிடையாது.
அப்பாவின் முகத்தை பார்த்தது கூட கிடையாது, ஒரு வயது இருக்கும் போதே இறந்துவிட்டார். எட்டாம் வகுப்பு படிக்கும் வரை என்னுடைய பிறந்தநாள் கூட தெரியாது, ஆனால் பள்ளி ஆண்டு விழாவின் போது குழந்தைகள் அவர்கள் அப்பா மற்றும் அம்மாவுடன் வருவார்கள்.

பிறந்தநாளுக்கு அப்பா அந்த கிப்ட் கொடுத்தார், இந்த கிப்ட் கொடுத்தார் என்று நண்பர்கள் கூறுவார்கள். இதனால் நான் என் அம்மாவிடம் நான் அப்பாவை பார்க்க வேண்டும் என்று கெஞ்சினேன், அப்பா ரெம்ப குடிப்பார் என்பதால், அவர் போட்டோவை கூட அவர் வைத்திருக்கவில்லை.

அதன் பின் தொடர்ந்து கெஞ்சிய போது அவர் அப்பாவின் பழைய வரைந்த புகைப்படத்தை காட்டினார், அதன் ஒரு பகுதி வழியாக சென்ற போது அது தான் அப்பாவின் கல்லறை என்று கூறினார். நான் என் அப்பாவை பார்க்க வேண்டும், அவர் இருந்தால் நான் இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கமாட்டேன் என்று கண்கலங்க, போட்டியாளர்கள் அவரை கட்டியணைத்து ஆறுதல் கூறினர்.

இறந்த நடிகையின் ஆசையை நிறைவேற்றிய கடவுள் : நெஞ்சை உருக்கும் உண்மை சம்பவம்!!

பிரபல திரைப்பட நடிகையான விஜய நிர்மலா தமிழகத்தில் கடந்த 1946-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ஆம் தேதி பிறந்தார். அதன் பின் தன்னுடைய 7 வயதில் திரைத்துரையில் அடியெடுத்துவைத்த விஜய் நிர்மலா தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய 3 மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி இவர் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 44 திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஒரு பெண் இயக்குநர் அதிகபட்சமாக 44 திரைப்படங்களை இயக்கி கின்னஸ் சாதனை படைத்தார். இதைத் தொடர்ந்து தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவை திருமணம் செய்தார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். திடீரென உடல்நிலை மோசமானததால், சிகிச்சைக்காக ஹைதராபாத் நகரில் கச்சிபோலி பகுதியில் உள்ள கான்டினென்டல் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி இன்று தன்னுடைய 73 வயதில் இறந்தார்.

விஜய நிர்மலா தீவிரமான சாய்பாபா பக்தையாம். இதனால் அவர் கோவிலுக்கு வரும் தனக்கு தெரிந்த பக்தர்களிடம், நான் இறப்பது முக்கியமல்ல. தான் இறந்தால் வியாழக்கிழமை தான் இறக்க வேண்டும் என கூறி வந்துள்ளார். அதன்படியே மரணத்தில் அவரின் ஆசையை ஆண்டவன் நிறைவேற்றிவிற்றார் என்று பக்தர்கள் உருக்கமாக கூறியுள்ளனர்.

விஜய்சேதுபதி படத்திலிருந்து அதிரடியாக நீக்கம் : தயாரிப்பு நிறுவனத்தை விளாசி தள்ளிய அமலாபால்!!

நடிகை அமலாபால் விஜய் சேதுபதியின் 33வது படத்தில் ஹீரோயினாக பணியாற்றவுள்ளார் என சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் சில தினங்களுக்கு முன்பு கால்ஷீட் பிரச்சனையால் அமலா பால் இப்படத்தில் இருந்து விலகுகிறார், அவருக்கு பதிலாக மேகா ஆகாஷ் நடிக்கவுள்ளார் என படத்தை தயாரிக்கும் சந்திரா ப்ரோடக்‌ஷன்ஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

இதுக்குறித்து அமலா பால் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், இதில் என்னை தயாரிப்பாளர் கால்ஷீட் பிரச்சனையால் தான் படத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக கூறியுள்ளார்.

ஆனால், அதில் உண்மையில்லை, நான் தயாரிப்பாளர் கஷ்டம் உணர்ந்து நடிப்பவள், பாஸ்கர் தி ராஸ்கல் படத்தில் கூட என் பணத்தை விட்டு தான் படத்தை ரிலிஸ் செய்தோம்.

மேலும், ஆடை டீசர் வந்த பிறகு தான் இப்படி ஒரு அறிவிப்பு வந்துள்ளது, தயாரிப்பாளர் ஒரு ஆணாதிக்க குணம் உள்ளவராக தான் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

கைதாகிறார் மீரா மிதுன்? பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் போலீஸ்!!

மீரா மிதுனை பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து போலீசார் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16வது போட்டியாளராக நுழைந்தவர் மீரா மிதுன்.

அவர் வந்தது அபிராமி மற்றும் சாக்ஷி அகர்வால்க்கு பிடிக்காத காரணத்தினால், இருவரும் சேர்ந்து அவரை ஒதுக்க ஆரம்பித்தனர். அவர்களுடன் இணைந்து ஷெரின் மற்றும் வனிதாவும் அவரை டார்கெட் செய்ய ஆரம்பித்ததால், வேதனை தாங்க முடியாமல் மீரா நேற்று கதறி அழுதார்.

இந்த நிலையில் இவரிடம் இருந்து மிஸ் சவுத் இந்தியா என்ற பட்டம் சமீபத்தில் பறிக்கப்பட்டது. மேலும் இவர் மிஸ் தமிழ்நாடு திவா என்ற தலைப்பில் அழகி போட்டி நடத்த முயன்று பிரச்சனையில் சிக்கினார். அப்போது அவர் மீது கமிஷனர் அலுவலகத்தில் சிலர் புகாரும் கூறியிருந்தனர். இந்நிலையில் இவர் அழகி போட்டி நடத்த முயன்ற சமயத்தில் அதை தடுத்த ஜோ மைக்கேல் என்பவர் தற்போது சில யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, ‘மீரா மீது 3 காவல் நிலையத்தில் நாங்கள் புகார் கொடுத்துள்ளோம். அதற்காக சிஎஸ்ஆர் போடப்பட்டுள்ளது. அவரை பிடித்து விசாரிக்க போலீஸ் தேடிக்கொண்டு இருக்கும் நிலையில் அவர் தலைமறைவாகியிருந்தார்.

ஆனால் திடீரென அவர் விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்து விட்டார். ஒருவர் மீது வழக்கு இருக்கும் நிலையில் அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் எப்படி அனுமதி கிடைத்தது என்பது தெரியவில்லை. இதுவரை அவர் எங்கிருக்கிறார் என்பது கூட தெரியாமல் தேடி வந்தோம்.

ஆனால் இப்போதும் அவர் இருக்கும் இடம் தெரிந்துவிட்டது. இனி அடுத்தகட்டமாக நாங்கள் போலீசில் சொல்லி அவர் மீது நடவடிக்கை எடுக்க சொல்லப்போகிறோம். அதனால் அவர் பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே போலீசாரால் கைது செய்யப்படலாம்.

இவர் என்னை மட்டுமல்ல மொத்தம் 4 பேரை ஏமாற்றியுள்ளார். ஏற்கனவே அபிராமிக்கும், சாக்ஷிக்கும், மீராவை தெரியும். மேலும் மீராவிடம் இருந்து பறிக்கப்பட்ட அழகி பட்டம் வேறு பெண்ணிற்கு வழங்கப்பட்டது.

அந்த பெண்ணின் காதலர் தான் பீக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் இலங்கையைச் சேர்ந்த மாடல் தர்ஷன்’ என்று பூகம்பத்தைக் கிளப்பியுள்ளார். இவரின் இந்த பேட்டி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமான மதுமிதாவிடம் லவ் புரோபஸ் : பிக் பாஸில் தொடங்கிய சர்ச்சை!!

மக்கள் ஆவலோடு எதிர்ப்பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நேறு முன் தினம் தொடங்கியது. இயக்குநர் சேரன், நடிகர்கள் சரவணன், கவின், நடிகைகள் பாத்திமா பாபு, ஜாங்கிரி மதுமிதா, ரேஷ்மா, அபிராமி, வனிதா விஜயகுமார் உள்ளிட்ட 17 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கிறார்கள்.

நேற்று நிகழ்ச்சியின் முதல் எப்பிசோட் தொடங்கிய நிலையில், போட்டியாளர்களுக்கு டாஸ் ஒன்று கொடுக்கப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு போட்டியாளர்களும் சக போட்டியாளர்கள் சொல்லும் டாஸ்க்கை செய்ய வேண்டும் என்று பிக் பாஸ் கூறினார்.

அதன்பை, மலேசிய மாடல் முகனிடம் போட்டியாளர்கள் யாரிடமாவது லவ் புரோபோஸ் செய்ய வேண்டும், என்று கூறினார்கள். உடனே அவர், திருமணமான ஜாங்கிரி மதுமிதாவிடம் தனது காதலை சொல்ல, அனைவரும் ஷாக்காகிவிட்டார்கள்.

ஆனால், இங்கு தான் முகிலின் சாமர்த்தியம் இருக்கிறது. திருமணமான மதுமிதாவிடம் காதலை சொன்னால் அது பெரிய சர்ச்சையாகாது, அதே பிற பெண் போட்டியாளர்களிடம் காதலை சொல்லியிருந்தால், ஓவியா – ஆரவ் ஜோடி போன்ற ஒரு காதல் ஜோடியை உருவாக்கிவிட்டிருப்பார்கள். அதில் சிக்காமல் இருக்கவே அவர் மதுமிதாவிடம் காதலை சொல்லியிருக்கிறார். அதுக்கு, பாத்திமா பாபுவிடம் சொல்லியிருக்கலாமே.