கணவருடன் விவாகரத்து.. இனி இவர்தான் என் மகனுக்கு அப்பா.. எமோஷனல் ஆன நடிகை கிருத்திகா!!

கிருத்திகா..

பிரபல சீரியல் நடிகை கிருத்திகா, மெட்டி ஒலி மூலம் தனது நடிப்பு பிரவேசத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு இவர் கால்வைத்த இடமெல்லாம் அட மழைதான்.

பல மெகா சீரியல்களில் நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இவர் முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்து உள்ளார்.

இவர் நடித்து விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் ‘சின்னதம்பி’. இந்த சீரியல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. வழக்கம்போல் இந்த சீரியலில் வில்லியாக நடிகை கிருத்திகா நடித்து இருந்தார்.

இவர் சீரியல் மட்டுமில்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றுள்ளார். இவர், அடிக்கடி இணையத்தில் கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்தும் வருகிறார்.

சமீபத்தில் அடுத்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கிருத்திகா தனது விவாகரத்து குறித்தும் மகன் குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் அவர், தனக்கு எட்டு வருடங்களுக்கு முன்பே விவாகரத்து ஆகிவிட்டதாக கூறியுள்ளார்.

மேலும், சன் டிவியில் ஒளிபரப்பான ஒரு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் 83 கிலோ எடை இருந்தேன். அந்த சீரியலில் அக்கா கதாபாத்திரம் என்பதால் தோற்றம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டார்கள்.

ஆனால், என் கணவர் என்னுடைய உடம்பை பார்த்து எப்படி இருக்க பெருசா இருக்க என்று உடல் எடையை வைத்து சண்டை போட ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் சண்டை அதிகமாக இருவரும் சேர்ந்து பரஸ்பர முடிவை எடுத்து பிரிந்து விட்டோம் என்று கிருத்திகா பகிர்ந்திருந்தார். மேலும், தனக்கு ஒரு மகன் இருப்பதால் யாராவது தந்தை பற்றிய விவரமும் கேட்டால் அவன் மனம் கஷ்டப்படும்.

ஆனால், தற்போது அந்த கவலை இல்லை என்றும், தனது அண்ணன் இவனுக்கு அப்பா ஸ்தானத்திலிருந்து வழிநடத்தி வருவது வருவதாகவும், தன்னுடைய அண்ணனுக்கு தன் மகனை தத்து கொடுத்து இருப்பதாகும். அதனால், தனக்கு எந்த கவலையும் தற்போது இல்லை என்று கிருத்திகா தெரிவித்துள்ளார்.

இடையை காட்டி இளசுகளை சொக்க வைத்த காவ்யா அறிவுமணி!!

காவ்யா அறிவுமணி..

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று டி.ஆர்.பி-யில் எகிறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்தவர் காவ்யா அறிவுமணி. சென்னையில் பிறந்து வளர்ந்த காவ்யாவுக்கு கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது.

கல்லூரி படிப்பிற்கு பின் அவரும் சில முயற்சிகள் செய்தார். ஆனால், ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை. எனவே, விஜய் டிவி பக்கம் சென்று வாய்ப்பு கேட்டார். அப்போதுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்த சித்ரா இறந்துவிட அவருக்கு பதில் நடிக்க போனவர்தான் இந்த காவ்யா.

சில வருடங்கள் அதில் நடித்த காவ்யா இப்படியே சீரியலில் நடித்து வந்தால் நமக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது என நினைத்து அந்த சீரியலில் இருந்து விலகினார். ஆனால், அவர் எதிர்பார்த்தது போல் ஒன்றும் கிடைக்கவில்லை.

மிரள் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். ஒருபக்கம் கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், படுகவர்ச்சியான உடையில் தரலோக்கலா காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.

எனவே, கவர்ச்சி உடைகளை அணிந்தும் புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார். அந்த வகையில், குட்டி பாப்பா போல உடையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

திருமணமாகி 3 ஆண்டில் வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு.. கையும்களவுமாக சிக்கிய நடிகர்!!

ராகுல் ரவி..

சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான நந்தினி, கண்ணான கண்ணே போன்ற சீரியல்களில் கதாநாயகனாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் நடிகை ராகுல் ரவி. இளம் பெண்களை தன் நடிப்பால் கவர்ந்து வந்த ராகுல் ரவி, 2020ல் லக்ஷ்மி நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பிரம்மாண்ட முறையில் திருமணம் நடைபெற்றப் பின் மனைவியுடன் எடுத்த ரொமாண்டிக் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். கடந்த ஆண்டு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக கிசுகிசுக்கப்பட்டது.

இதற்கு காரணம் ராகுல் ரவி வேறொரு பெண்ணோடு கள்ளத்தொடர்பில் இருப்பதாகவும் மனைவி லக்ஷ்மி நாயரிடம் கையும் களவுமாக சிக்கி, போலிஸ் புகார் அளித்ததாகவும் கூறப்பட்டது.

இதனால் ராகுல் ரவி தலைமறைவாகிவிட்டார். தற்போது இந்த விசயம் உறுதியாகி இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கூறுவது போல் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை அளித்துள்ளது.

கவர்ச்சி உடம்ப காட்டி ரசிகர்களை திகைக்க வைத்த மீனாக்‌ஷி சவுத்ரி!!

மீனாக்‌ஷி சவுத்ரி..

ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் மினாக்‌ஷி சவுத்ரி. இவர் ஒரு நீச்சல் மற்றும் பேட்மிட்டன் வீராங்கணையும் கூட. பல் மருத்துவம் படித்தவர் இவர். அதன்பின் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டதால் அதற்கு தாவினார். பல அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார்.

சில போட்டிகளில் சிறந்த அழகியாக தேர்வும் பெற்றிருக்கிறார். முதலில் நடிக்க துவங்கியது ஒரு ஹிந்தி படத்தில்தான். ஆனால், அது ஒரு சிறிய வேடம். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்று கில்லாடி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளிவந்த கொலை படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமாகியுள்ளார்.

இந்த படம் ஓடவில்லை என்றாலும் இவரின் நடிப்பு கவனிக்க வைத்தது. அதனால்தான் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. விஜயுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒருபக்கம் தெலுங்கில் ‘குண்டூர் காரம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். அதேபோல், ஆர்.ஜே.பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ரவுண்டி கட்டி அடிக்கும் மீனாக்‌ஷி சாவித்ரி திரையுலகில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படியாவது நல்ல வாய்ப்புகளை பெறுவதற்காக கட்டழகை கும்முன்னு காட்டி தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சற்று கவர்ச்சியான உடையில் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

முன்னழகை காட்டி கவர்ச்சியை வாரி இறைக்கும் மாளவிகா மோகனனின் ஹாட் கிளிக்ஸ்!!

மாளவிகா மோகனன்..

ஈரானிய இயக்குனர் மஜித் மஜிது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் மாளவிகா மோகனன்.

அதன் பின்னர் மாஸ்டர், பேட்ட போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பாப்புலர் ஆனார். கடைசியாக அவர் நடித்த மாறன் திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது.

தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மாளவிகா மோகனன் தற்போது படு கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

அட்ஜெட்மென்டுக்கு OK’ன்னா அடுத்த வேலைய பார்க்கலாம்… இதெல்லாம் சினிமா தொழிலில் சகஜமப்பா!!

ரெஜினா..

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ரெஜினா 16 வயதிலேயே “கண்ட நாள் முதல்” என்னும் தமிழ் படத்தில் அறிமுகமாகி பிரபலமானார். அதை தொடர்ந்து, தமிழில் அழகிய அசுரா, பஞ்சாமிருதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், மாநகரம், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், மிஸ்டர் சந்திரமௌலி, போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் இவருக்கு செம்ம டிமாண்ட்.

அதன் பின்னர் மோகன்லால் நடிக்கும் பிக் ப்ரதர் என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் கவனம் செலுத்தி நடித்து வரும் ரெஜினா தற்போது தனக்கு நடந்த அட்ஜெஸ்ட்மென்ட் அனுபவத்தை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

நான் படவாய்ப்பிற்காக காத்துக்கொண்டிருந்த நேரம் அது. சிலபேரிடம் வாய்ப்பு கேட்டு தொடர்பு கொண்டேன். அதன் மூலம் ஒரு நபர் எனக்கு போன் செய்து, சான்ஸ் தரோம், ஆனால் அட்ஜெஸ்ட்மெண்டிற்கு ஓகே சொன்னால் அடுத்த வேலையை பார்க்கலாம் என சொன்னார். இது சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் நடந்தது. அப்போது எனக்கு சரியான புரிதல் இல்லை. அட்ஜெஸ்ட்மெண்ட்டிற்கான அர்த்தம் கூட என்னவென்று தெரியாது.

நான் நினைத்தேன்… சம்பள விஷயத்தில் தான் அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொல்கிறார்கள் என்று, அதனால், சரி ஓகே இதை பற்றி என் மேனேஜர் உங்களிடம் பேசுவார் என சொல்லிவிட்டு போன் கட் பண்ணிட்டேன். அதன் பின்னர் தான் அவர்கள் என்னை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்பது தெரிய வந்தது. நான் முடியாது என சொல்லுவேன்.

இது போன்று எனக்கு மட்டும் இல்லை. சினிமாவில் பல பெண்களுக்கு இதே போல் நடக்கிறது. சில பேர் சும்மாவே கதை விடுகிறார்கள். உண்மையில் நடந்திருக்கலாம்… நடக்காமல் கூட பொய் சொல்லலாம். உண்மை என்னவென்று சம்மந்தப்பட்டவர்களுக்கு தான் தெரியும் என ரெஜினா வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

பிறப்புறுப்பில் சோதனை… நைட் பார்ட்டியில் நடக்கும் கொடுமை குறித்து இலக்கியா வேதனை!!

இலக்கியா..

டிக்டாக் செயலி மூலம் குறுகிய காதலத்திலே மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனவர் இலக்கியா. இவர் பெரிய மார்பகங்களைக்கொண்டு குட்டையான ஆடைகளை அணிந்து படுகவர்ச்சியாக ஆட்டம் போட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் என சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ஏடாகூடமான ரசனைக்கு ஆளாகினார்.

இவரின் கவர்ச்சியை பார்த்து திரைப்பட வாய்ப்புகள் தேடிவந்தது. ஆனால், பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. இதனிடையே இரவு பார்ட்டிகளில் நடனமாடும் தொழில் செய்து வரும் இலக்கியா அதுகுறித்த பல ரகசியங்களை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

துபாயில் நைட் பார்ட்டியில் ஆட்டம் போட அட்வான்ஸ் தொகையாக ரூ. 2 லட்சம் கொடுப்பார்கள். அங்கு சென்றதும் பெர்பார்மென்ஸ் பார்த்து ரூ. 3 லட்சம், ரூ. 5 லட்சம் என தொகையை ஏற்றி கொடுப்பார்கள். ஆனால், அந்த இரவு விருந்திற்கு தேர்வாக மிகவும் மோசமான விஷயங்களை எதிர்க்கொள்ளவேண்டியிருக்கும்.

முதலில் நம் உடலை முழுமையாக பரிசோதனை செய்து பார்ப்பார்கள். குறிப்பாக பாலியல் நோய் இருக்கிறதா என சோதனை செய்வார்கள். முழு மருத்துவ அறிக்கை கொடுத்தால் தான் நடனம் ஆட சம்மதிப்பார்கள். அப்படி செலக்ட் ஆன பிறகு எந்த தொந்தரவும் இருக்காது. நம்ம பாட்டுக்கு நடனமாடினால் அவர்களும் அமைதியாக நடனமாடுவார்கள் என இலக்கியா கூறினார்.

உண்மையிலே நான் உங்களுக்கு தான் பிறந்தேனா? பெற்றோர்களுடன் சண்டையிட்ட சாய்பல்லவி!!

சாய் பல்லவி..

நடன கலைஞராக டிவி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. பின்னர், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக இந்திய திரையுலக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து, நிறைய பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.

தமிழில் NGK, மாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஹீரோயினுக்கு ஏத்த எந்த வரையறையும் இல்லாமல் வித்தவுட் மேக்கப்பில் நேச்சுரலாக வலம் வருவது தான் இவரின் தனி அழகு .

இவர் சமீப காலமாக, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து தனது நடிப்பு திறமையை காட்டி வருகிறார் நடிகை சாய் பல்லவி.  அழகான தோற்றம் கொண்டு ரசிகர்களை கவர்ந்த இவர், கிளாமரான காட்சிகளில் நடிக்க தடை போட்டு இருக்கிறார். படுக்கை அறை காட்சிகள், முத்த காட்சிகள் இருந்தால் அந்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிடுகிறார்.

இந்நிலையில் சாய்பல்லவி மிகவும் வெள்ளை நிறத்தில் இருப்பதால் அவரது தாய் தந்தையிடம் சண்டையிட்டாராம். காரணம் அவர்கள் இருவரும் மாநிறம் என்பதால் ” உண்மையிலே நான் உங்களுக்கு தான் பிறந்தேனா? அல்லது என்னை தத்தெடுத்து வளர்த்தீர்களா? என கேட்டு வாக்குவாதம் செய்தாராம். பின்னர் நீயும் தங்கையும் ஒரே முகஜாடையில் தானே இருக்கிறீர்கள் என எடுத்து சொல்லி சமாளிப்பார்களாம்.

என்னை அவமானப்படுத்தனும்னு நினைக்காதீங்க… Troll’களுக்கு ஸ்ருதி ஹாசன் பதிலடி!!

ஸ்ருதி ஹாசன்..

கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் 7ம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு அஜித் , தனுஷ், விஷால், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார்.

இவர் தற்போது காதலன் சாந்தனு ஹசாரிகா என்ற பாப் பாடகரை காதலித்து அவருடன் மும்பையில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது காதலுடன் கட்டியணைப்பது, லிப்லாக் போன்ற புகைப்படங்களை வெளியிட்டு முகம் சுளிக்க வைப்பார். ஸ்ருதி ஹசன் தற்போது பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் – பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் உருவாகியுள்ள சலார் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இப்படம் வருகிற 22 -ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் ப்ரோமோஷன் ஒன்றில் பேசிய அவர், 8 ஆண்டுகளாக தனக்கு வாழ்க்கையில் இருந்து மதுவை தவிர்த்து விட்டேன் என்றும், எட்டு ஆண்டுகளாக தனது வாழ்க்கையில் இருந்து மதுவை தவிர்த்து விட்டேன் என்றும், தன்னுடைய வாழ்க்கையில் மது ஒரு பெரிய பகுதியாக இருந்தது.

குறிப்பிட்ட நேரத்திற்கு பின் மது அருந்துவதால், எனக்கு ஒரு நன்மையும் இல்லை என்பதை புரிந்து கொண்டேன். குடிப்பழக்கம் உடையவர்களுடன் நான் தொடர்பில் இருக்க மாட்டேன். அவர்களை தவிர்த்து விடுவேன் என்று தெரிவித்தார். இதனால் ஸ்ருதி ஹாசனை விமர்சித்து பலர் ட்ரோல் செய்தனர்.

அதை பார்த்து கடுப்பில் உச்சத்துக்கே சென்ற ஸ்ருதி ஹாசன், தனது எக்ஸ் தளத்தில், “எனது நிதானம் பற்றி பேசும் விமர்சனங்களால் என்னை அவமானப்படுத்த முயற்சிப்பது பலன் அளிக்காது. வாழ்க்கை நன்றாக இருக்கிறது. கடவுள் கனிவானவர் என்று ஸ்ருதி ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

அந்த இடத்தில் கை வைத்து அத்துமீறல்.. கசப்பான அனுபவத்தை வெளியிட்ட கீர்த்தி பாண்டியன்!!

கீர்த்தி பாண்டியன்..

நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் என போன்ற நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து பிரபலமான நடிகராக அறியப்பட்டார். இவரது சினிமா கெரியர் பில்லா 2 படத்தில் தான் ஆரம்பித்தது. அதன் பிறகு தெகிடி திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144 , கூட்டத்தில் ஒருத்தன் , முப்பரிமாணம் , உள்ளிட்ட படங்களில் நடித்து பெரிதாக வரவேற்புகள் கிடைக்காமல் மார்க்கெட் இழந்தார். அதன் பிறகு ஓ மை கடவுளே திரைப்படம் அவருக்கு மாபெரும் ஹிட் கொடுத்தது. அந்த படத்தில் நடித்த நடிகை ரித்திகா சிங்குடன் அவர் கிசுகிசுக்கப்பட்டார். இருவரது கெமிஸ்ட்ரியும் படத்தில் நன்றாக ஒர்கவுட் ஆகியிருந்தது.

இவர்கள் நிஜத்தில் காதலித்தால் கூட சிறந்த ஜோடியாக இருப்பார்கள் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தனர். ஆனால், அசோக் செல்வனுக்கு பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துக்கொண்டார். கீர்த்தி பாண்டியனின் சொந்த ஊரான திருநெல்வேலியில் இயற்கை சார்ந்த முறையில் நடைபெற்ற இத்திருமணம் பலரது கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னெவன்றால், கீர்த்தி பாண்டியன் நடிப்பில் கண்ணகி திரைப்படம் கடந்த 15ஆம் தேதி வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அம்மு அபிராமி, ஷாலின் சோயா, வித்யா பிரதீப் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் இந்த படத்திற்கு கலைவையான விமர்சனமே கொடுத்து வருகின்றனர். இதனிடையே, சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட கீர்த்தி பாண்டியனிடம் நீங்கள் பஸ்ஸில் செல்லும்போது உங்கள் மீது அத்துமீறி கை வைத்த சம்பவங்கள் நடந்துள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், பெண்கள் என்றாலே அந்த மாதிரியான விஷயங்களை கடந்து தான் வந்திருப்பார்கள் எனக்கும் இப்படியான விஷயங்கள் நடந்து இருக்கிறது. நான் சினிமாவில் இருந்தாலும் அதற்கு முன்பாக இருந்தாலும் எனக்கு தெரியாத ஊருக்கு சென்றாலும் தப்பான விஷயங்கள் நடந்திருக்கிறது என்று மூடி மறைத்து கீர்த்தி பாண்டியன் சில விஷயங்களை பேசி உள்ளார்.