நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் கடந்த 12ம் தேதி கோவாவில் நடந்து முடிந்தது. 15 வருடமாக தான் காதலித்து வந்த ஆண்டனி தட்டில் என்பவரை அவர் கரம்பிடித்தார்.
முதலில் ஹிந்து முறைப்படி திருமணம், அதனை தொடர்ந்து கிறிஸ்தவர் முறைப்படி திருமணம் நடந்தது. திருமணத்தில் கீர்த்தி சுரேஷுக்கு நெருக்கமான பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் இன்று பேபி ஜான் பட விழாவுக்கு வந்திருக்கிறார். அவர் கழுத்தில் தாலி உடன் மாடர்ன் லுக்கில் வந்திருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. வைரலாகும் வீடியோ இதோ..
பாலிவுட் சினிமாவில் 18 வயதில் நடிகையாக அறிமுகமாகி பெங்காளி, மராத்தி, தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப் படங்களில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை ராதிகா ஆப்தே.
தமிழில் 2012ல் வெளியான தோனி படத்தின் மூலம் அறிமுகமாகிய ராதிகா ஆப்தே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானார்.
கடந்த 2012ல் பெனடிக் டெய்லர் என்ற இசைக் கலைஞரை திருமணம் செய்தார். தற்போது 12 ஆண்டுகள் கழித்து கர்ப்பமாகி குழந்தையை பெற்றெடுத்த ராதிகா ஆப்தே, கர்ப்பகாலத்தில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளார் ராதிகா ஆப்தே.
தெலுங்கு சினிமாவில் தன்னுடைய 17 வயதில் சித்ரங்கடா என்ற படத்தில் சிறுமி ரோலில் நடித்து கன்னட சினிமாவில் கிஸ் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஸ்ரீலீலா.
இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வந்த ஸ்ரீலீலா, ஸ்கண்டா, பகவதி கேசரி, ஆதிகேசவா, குண்டூர் காரம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
நடத்திற்கே பேர் போன நடிகையாக இளம் வயதிலேயே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் ஸ்ரீலீலா சமீபத்தில் புஷ்பா 2 படத்தில் கிஸ்க் என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார். தற்போது ஒரு சில படங்களில் நடித்து வரும் ஸ்ரீலீலா, சிவகார்த்திகேயன் – சுதா கொங்கரா கூட்டணியில்
உருவாகவுள்ள SK25 படத்தில் முக்கிய ரோலில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீலீலா, கருப்பு நிற ட்ரெண்ட்டிங் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
தமிழில் எதிரி மற்றும் வரலாறு உள்ளிட்ட படங்களில் நடித்த கனிகா, அதன் பிறகு காணாமல் போனார். ஆனால் மலையாள சினிமாவில் அவர் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். மலையாள நடிகையான கனிகா தமிழ் சினிமாவில் மணிரத்னம் தயாரித்த பைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.
அதன் பின்னர் பல படங்களில் நடித்த கனிகாவுக்கு நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியானவரலாறு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை கனிகா. இந்த திரைப்படத்தில் அவர் மையக் கதாபாத்திரமாக நடிக்கவில்லை என்றாலும், அவரது கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன.
ஒரு கட்டத்தில் திருமணம் ஆகி செட்டில் ஆன கனிகா ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து ஒதுங்கிய அவர் இப்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். தமிழில் குரல்,விக்ரம் நடித்த கோப்ரா, விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஒரே யாவரும் கேளீர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.இதை தவிர பாப்பன், இடைரி போன்ற மலையாள படங்களில் நடித்து வருகிறார். தமிழில் எதிர்நீச்சல் என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்து வருகிறார்.
தற்போது எதிர்நீச்சல் சீரியல் மூலமாக தமிழ் பெண் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். இந்த சீரியல் கடந்த சில மாதங்களாக அதிகளவில் பார்க்கப்படும் சீரியலாக மாறியுள்ளது. மேலும் பல சர்ச்சைகளையும் உருவாக்கியுள்ளது. இந்த தொடர் மூலம் தமிழக பெண் ரசிகர்களைக் கவர்ந்துள்ள கனிகா,
இன்ஸ்டாகிராமில் வெளியிடும் அவரது புகைப்படத்துக்காக தனியாக ஒரு ரசிகர் பட்டாளததையே உருவாக்கி வைத்துள்ளார். தற்போதைய இளம் நடிகைகளுக்கு போட்டியாக அவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன. அந்த வகையில் இப்போது சேலையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
மீரா ஜாஸ்மின் ஒரு காலத்தில் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். கேரளாவில் பிறந்த மீரா ஜாஸ்மின் இவருக்கு 2 சகோதரி 2 சகோதரர்கள். தனது பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்த மூன்று மாதத்தில் இவருக்கு மலையாளத்தில் ஒரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அப்போது இவருக்கு வயது 16 தான்.
அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட மீரா ஜாஸ்மின் . அந்த படத்தில் நடித்தார் பின்னர் தொடருந்து பல பட வாய்ப்புகள் வர துவங்கியது. இவர் ரன் திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து வாய்ப்புகள் வந்து குவிய துவங்கிய நிலையில் தமிழ், தெலுங்கு , மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்தார். இன்று வரை 60+ திரைப்படங்களில் நடித்துள்ளார் மீரா ஜாஸ்மின்.
கிட்ட தட்ட 15 ஆண்டுகள் மிகவும் பிஸியாக நடித்துவந்த மீரா ஜாஸ்மின் 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்தது. இந்த சூழலில் 2014 ஆம் ஆண்டு திருமணமும் செய்துகொண்டார்.
2004 ஆம் ஆண்டு தேசிய விருது வாங்கிய இவர் 2006,2007,2008 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளில் தென்னிந்திய பிலிம்பேர் விருதையும் பெற்றார். 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கியது.
இந்த வயதிலும் சற்றே கில் மாவன புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை தன் பக்கம் ஈர்துளார் மீரா ஜாஸ்மின். இவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில்.
யாஷிகா, துருவங்கள் பதினாறு படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.பின்னர் நோட்டா, ஜோம்பி போன்ற படங்களில் நடித்து வந்தார்.பின்னர் இவர் தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.
2016 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான கவலை வேண்டாம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்தில் அவர் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். இவர் 1991 ஆம் ஆண்டு புதுடெல்லியில் பிறந்தார். பிறகு இவரின் குடும்பம் சென்னைக்கு வந்தனர்.யாஷிகா ஆனந்த் இதுவரை நடித்திருப்பது வெகுசில படங்கள்தான்.
அவருக்கு இளைஞர்கள் மத்தியில் அடையாளத்தை ஏற்படுத்தித் தந்த படமாக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்தார். இந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக இரட்டை அர்த்தம் உள்ள வசனங்கள் பேசி இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார். இதையடுத்து அவர் தொடர்ந்து அவர் கிளாமரான புகைப்படங்களாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து
அதன் மூலம் ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார். அந்த கூட்டம் எப்போது அவரிடம் இருந்து அடுத்த புகைப்படங்கள் வரும் என்று காத்துக்கொண்டிருக்கிறது. அந்தவகையில் இப்போது யாஷிகா மினி கௌன் ட்ரஸ் அணிந்து ஹாட்டாக வெளியிட்டுள்ள போட்டோஷூட் ஆல்பம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.