மூன்று சீசன் வெற்றியை தொடர்ந்து பிக் பாஸ் நான்காம் சீசனும் பிரமாண்டமான முறையில் நடைபெற்று முடிந்தது.
இதில் கலந்து கொண்ட 18 போட்டியாளர்களில் மக்கள் மனதில் இடம்பிடித்த ஒரு போட்டியாளர் சனம் ஷெட்டி.
சமீபத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் இவர் வந்தபோது வகுடு நெற்றியில் குங்குமம் வைத்திருத்தை பார்த்து, சனமிற்கு ரகசிய திருமணம் நடைபெற்றுவிட்டது என்று இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில் அதனை சனம் ஷெட்டியிடம் உங்களுக்கு திருமணமாகி விட்டதா என்று ரசிகர்கள் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த சனம் ” எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. ஆனால் உங்களின் ஆசிர்வாதத்தால் கூடிய விரைவில் நடக்கும்” என்று பதிலளித்துள்ளார்.
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் ஆஸ்கார் விருது விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆஸ்கார் விருதிற்கு ஒரு படத்தை அனுப்ப நிறைய செலவு செய்ய வேண்டும் என பிரபல நடிகர் தெரிவித்துள்ளார்.
சூர்யா நடிப்பில் யாருமே மறுக்க முடியாத திரைப்படமாக மாறியது சூரரைப் போற்று. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், பாடல்கள், இசை, நடிப்பு என அனைத்து துறைகளிலும் கோலோச்சியது. இந்நிலையில் சூரரைப் போற்று திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு தகுதி பெற்றதாக படக்குழுவினர் அறிவித்தனர்.
தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக OTT தளத்தில் வெளியான திரைப்படம் எப்படி ஆஸ்காருக்கு தகுதி பெற்றது என்பது ரசிகர்களின் முதல் கேள்வி. அடுத்ததாக ஆஸ்கார் விருதுக்கு ஒரு படத்தை எப்படி அனுப்புவது என்பதுதான்.
ஆஸ்கர் விருதில் பங்குபெற வேண்டும் என்றால் அமெரிக்காவில் உள்ள திரையரங்குகளில் ஒரு குறிப்பிட்ட நாட்கள் அந்த படம் ஓடியிருக்க வேண்டுமாம். ஆனால் கடந்த வருடம் பெரும்பாலான திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் OTTயில் வெளியான படங்களும் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
இதற்கு முன்னர் தமிழ் சினிமாவில் இருந்து நடிகர் பார்த்திபன் தன்னுடைய ஒத்த செருப்பு படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்பினார். அவரிடம் ரசிகர் ஒருவர் ஆஸ்கார் விருதுக்கு எப்படி அனுப்புவது போன்ற கேள்வியைக் கேட்டுள்ளார். அதற்கு பணம் கொடுக்காமல் ஒன்றும் வேலைக்கு ஆகாது எனும் அளவுக்கு ஒரு பதிலைக் கூறி உள்ளார் பார்த்திபன்.
அதாவது ஒரு படத்தை ஆஸ்கார் நாமினேசன் லிஸ்ட்க்கு அனுப்பவே கிட்டத்தட்ட 3.5 கோடி வரை செலவு செய்ய வேண்டுமாம். அப்போதுதான் நாமினேஷனில் இடம் பெறுமாம். அதன்பிறகு வெற்றி பெறுவதெல்லாம் லக் தான் என குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே ஆஸ்காருக்கு தன்னுடைய படத்தை அனுப்பியவர் என்ற முறையில் பார்த்திபன் கூறியதை வைத்து பார்த்தால், கண்டிப்பாக சூரரைப்போற்று படக்குழுவினர் பணம் கட்டி தான் ஆஸ்கார் விருதுக்கு அனுப்பியுள்ளனர் என தெரியவந்துள்ளது. இந்நிலையில் ஆஸ்கார் விருதும் பணம் வாங்கிக்கொண்டு செயல்படும் நிறுவனம் தான் என்பதும் தெள்ளத் தெளிவாக தெரிய வந்துள்ளது. இதுக்கு நம்ம விஜய் டிவி அவார்டு பரவாயில்லை என்கிறார்கள் ரசிகர்கள்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். எப்போதுமே தானுண்டு தன் வேலையுண்டு இருக்கும் நடிகர்களில் முக்கியமானவர். தேவையில்லாத எந்த ஒரு சண்டை சச்சரவும் இவரது பெயரில் இல்லை.
குறிப்பாக சமூக வலைத்தளத்தில் தல அஜித் இல்லவே இல்லை. அதுவே அவருக்கு ஒரு பெரிய நிம்மதியைக் கொடுத்துள்ளது. இருந்தாலும் சமூகவலைதளத்தில் ரசிகர்களின் ச ண் டை அவருக்கு வ ரு த்தத்தை கொடுக்கிறதாம்.
அடுத்ததாக தல அஜித் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் வலிமை. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தை சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களை இயக்கிய வினோத் இயக்கி வருகிறார்.
இந்நிலையில் தல அஜித் தன்னுடைய அறையில் பா தி கு.டி.த்.து வி ட்டு இருக்கும் ச.ர.க்.கு கி ளாஸ் இருப்பதை பார்க்காமல் போஸ் கொடுத்துள்ளார். அதில் அந்த ச.ர.க்.கு கி.ளா.ஸ் ம ட்டும் ரசிகர்களுக்கு து.ண்.டாக தெரிந்துள்ளது.
இதனை பார்த்த அஜித்தின் நல விரும்பிகள் உடனடியாக சமூக வலைதளங்களில் பரப்பி விட்டனர். அஜித் என்ற பெயரைக் கேட்டாலே சமூக வளைதளம் மி ரண்டு விடும். இதில் ச.ர.க்.கு கிளாஸ் உடன் அஜித் என்றால் வைரல் ஆகாமல் இருக்குமா.
இணைய தளமே அ தி ர்ந்து போகும் அளவுக்கு காட்டுத்தனமாக வைரலாகி வருகிறது. மேலும் அந்த புகைப்படத்தை பார்க்கும் போது தல அஜித் என்னை அறிந்தால் படப்பிடிப்பில் கலந்து கொ ண் ட போது எடுத்த புகைப்படம் போல் தெரிகிறது. எப்பவோ எடுத்ததை இப்போது கிளப்பி விட்டுள்ளனர் சிலர்.
செய்தி வாசிப்பாளராக தனது திரை வாழ்க்கையை தொடங்கி தற்போது கதாநாயகியாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் பிரியா பவானி சங்கர். இவர் ஆரம்ப காலத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிவிட்டு அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் மூலம் சின்னத்திரை நடிகையாக பிரபலமானார்.
பல வருடங்கள் கழித்து மேயாதமான் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு இவர் நடித்த கடைக்குட்டி சிங்கம் மற்றும் மாபியா. மான்ஸ்டர் போன்ற படங்கள் ரசிகர்களை கவர்ந்தது.
தற்போது இவர் கைவசம் ஆக இந்தியன் 2 மற்றும் ஓமன பெண்ணே, குருதி ஆட்டம் போன்ற படங்கள் உள்ளன. சமீபத்தில் கூட இவரது 10 வருட காதலை வெளிப்படுத்தும் வகையில் தன் காதலருடன் ஜூஸ் குடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மாடல் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வந்த பிரியா பவானி சங்கர். தற்போது இவர் அவரது சமூகவலைத்தள பக்கத்தில் சேலை அணிந்தபடி புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் வாவ் செம க்யூட், செம அழகு, அழகோ அழகு என பிரியா பவானி ஷங்கரை பிடிக்கும் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.
ஆனால் ஒரு சில ரசிகர்கள் நீங்கள் மாடல் உடையில் புகைப்படத்தை வெளியிட்டால் அழகாகத்தான் இருப்பீர்கள் ஏன் புடவைக்கு மாறிவிட்டீர்கள் எனவும் தங்கள் ஆதங்கங்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஐஸ்வர்யா மேனன். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றன. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் நான் சிரித்தாள்.
அதன் பிறகு இவருக்கு எந்த ஒரு திரைப்படத்திலும் கமிட்டாகவில்லை என்றுதான் கூறவேண்டும். இதனால் தற்போது ஐஸ்வர்யா வித்தியாசமான வித்தைகளை கையாண்டு வருகிறார்.
தற்போது பிரபல நடிகர்களுடன் நடிப்பதற்கான பட வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் தொடர்ந்து அவரது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பாராட்டை பெறுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
அவரது சமூக வலைதளப் பக்கத்தில் தற்போது 2 மில்லியன் பேர் பின்தொடர்பவர்கள் உருவாகியுள்ளதாகவும். அதற்கு நன்றி தெரிவித்தது மட்டுமில்லாமல் அதனை கொண்டாடும் விதமாக ரோஸ் உடையில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதனை பார்த்த ரசிகர்கள் லுக்கிங் சோ க்யூட் மற்றும் க்யூட் மேடம், ஐ பஞ்சுமிட்டாய் போன்று பதிவு செய்து வருகின்றனர். தற்போது இவருக்கு 2 மில்லியன் பேர் பாலோ செய்வதால் சில பிரபலங்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களின் பேராதரவை பெற்று முடிவடைந்தது, மேலும் அனைவரும் எதிர்பார்த்தது போலவே ஆரி அதிக வாக்குகளை பெற்று பிக்பாஸ் டைட்டிலை வென்றார்.
மேலும் அவருக்கு அடுத்தபடியாக பாலாஜி முருகதாஸ் மற்றும் ரியோ ராஜ் இரண்டாவது, மூன்றாவது இடத்தை பிடித்தனர். ஆரிக்கு பரிசு தொகையாக ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரியோ தான் காட்டிற்கு சென்று தனது அமைதியான பொழுதை கழிக்க விரும்புவதாக கூறியிருந்தார், பின்னர் பைனல்ஸில் கமல் அவருக்கு காட்டில் ட்ரிப் செல்ல உதவும் பொருட்களை வழங்கினார்.
மேலும் தற்போது ரியோ முன் கூறியது போல தனது காரில் காட்டிற்கு சென்றுள்ளார், அதற்கு “To Another World” என கேப்ஷன் போட்டுள்ளார்.