அமிதாப் படத்தில் வாய்ப்பு பெற்ற கார்த்தி பட நாயகி!

ராஷ்மிகா மந்தனா…

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ராஷ்மிகா மந்தனா என்பது தெரிந்ததே. சமீபத்தில் மகேஷ்பாபுவுடன் இவர் நடித்த ’சரிலெரு நீகேவரு’ என்ற திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனது என்பதும்.

அதனை தொடர்ந்து அவர் தற்போது அல்லு அர்ஜுனுடன் ’புஷ்பா’ என்ற படத்திலும் சர்வானந்த் உடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தியுடன் தமிழில் இவர் நடித்த ‘சுல்தான்’ விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா பாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். சித்தார்த் மல்கோத்ரா ஜோடியாக ராஷ்மிகா நடிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து இந்தியா முழுவதும் வைரலானது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் அவரது மகளாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் என்பதும் அப்பா-மகள் பற்றிய சென்டிமென்ட் கதையம்சத்துடன் கூடிய இந்த படத்தில் நீனா குப்தா உள்பட பலர் நடிக்கவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கவுள்ள படத்தில் ராஷ்மிகா மந்தனா தான் கதாநாயகி என்றும் அதேபோல் தளபதி விஜய்யின் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க ராஷ்மிகாவுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக நடிக்கும் புதிய படத்திலிருந்து பிரபல நடிகர் திடீரென விலகி உள்ளாராம்.!

பாரதிராஜா…

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வருபவர் வெற்றிமாறன். இவர் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என இவர் எடுத்த படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

இவர் அடுத்ததாக சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். எல்ரெட் குமார் தயாரிக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராக உள்ளது. இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

இயக்குனர் பாரதிராஜாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். தற்போது அவர் படத்திலிருந்து விலகி உள்ளாராம். பாரதிராஜா நடிக்கும் காட்சிகளை சத்யமங்கலம் வனப்பகுதியில் படமாக்க திட்டமிட்டு இருந்தார்களாம்.

அங்கு கடும் குளிர் நிலவுவதாலும், அது அவரது உடலுக்கு ஒத்துழைக்காது என்பதாலும் பாரதிராஜா அப்படத்திலிருந்து விலகி உள்ளாராம்.

இதனால் பாரதிராஜாவுக்கு பதிலாக கிஷோர் அக்கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம்.

நடிகர் கிஷோர் ஏற்கனவே வெற்றிமாறனின் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை ஆகிய படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களின் அன்பு காட்டப்படவில்லை… நல்லா எடிட் பண்ணீருக்காங்க – அர்ச்சனா சூசகம்!

அர்ச்சனா…

பிக்பாஸ் 4-வது சீசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அர்ச்சனா, தனது டுவிட்டர் பக்கத்தில் தன்னுடைய ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் கடந்த அக்டோபர் 4-ந் தேதி தொடங்கியது. தற்போது 80 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் முதல் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்தவர் அர்ச்சனா. பிக்பாஸ் வீட்டுக்குள் அன்புதான் ஜெயிக்கும் என்று தொடர்ச்சியாக கூறி வந்த அர்ச்சனா,

தன்னுடைய தலைமையில் ஒரு குரூப்பை உருவாக்கி வைத்திருந்தார்.
ரியோ, நிஷா, ஜித்தன் ரமேஷ், கேபி, சோம் ஆகியோர் அதில் இடம்பெற்று இருந்தனர். அந்த குரூப்பிற்கு அன்பு கேங் என்றும் அழைத்து வந்தனர்.

இதைப்பார்த்த இதர போட்டியாளர்கள் அர்ச்சனா குரூப்பிஸம் செய்து வருவதாக குற்றம் சாட்டினர். ரசிகர்களும் அதே மனநிலையில் இருந்ததால் கடந்த வாரம் அர்ச்சனா வெளியேற்றப்பட்டார்.

இதனை தொடர்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் தன்னுடைய ரசிகர்களுடன் அர்ச்சனா கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், “அர்ச்சனா சமையல், டாஸ்க் மற்றும் என்டெர்டெய்ன்மெண்ட் ஆகிய விஷயங்களில் டாப்பராக இருந்தார்.

ஆனால் ஆரியிடம் அன்பை காட்டுவதில் மட்டும் தோற்று விட்டார்” என்று தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த அர்ச்சனா, “ஆரிக்கு அன்பு காட்டியது உங்களுக்கு காட்டப்படவில்லை. அதான் பிக்பாஸ்” என பதிவிட்டுள்ளார்.

அர்ச்சனாவின் அந்த பதிவை பார்த்த மற்றொரு நெட்டிசன், மோசமான எடிட்டிங் என்று சொல்லப்போகிறீர்களா என கேட்டிருந்தார். அதற்கு பதில் கூறிய அர்ச்சனா, தவறான எடிட்டிங்னு நானா சொன்னேன், நீங்க தான் சொல்றீங்க. அது நல்ல எடிட்டிங் தான், ஆரிக்காக மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார். நல்ல எடிட்டிங் என்று சூசகமாக ஆரியை கிண்டல் செய்துள்ளார் அர்ச்சனா.

சித்ரா த ற் கொ லை யி ல் ச ம் பந்தப்பட்டு இ ருக்கும் மூன்றாவது நபர் யார்? ஹேமந்த் ம றைப்பது இது தானா!

சித்ரா…

சின்னத்திரை சீரியல் நடிகை சித்ரா கடந்த டிசம்பர் 9ல் ஹேட்டலில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டா.ர். இச்செய்தி சினிமா வட்டாரத்தில் பெரும் அ.தி.ர் ச்சியை ஏ ற் படுத்தி வ ருகிறது.

த.ற்.கொ.லை ச.ம்.ப.ந்தமாக பலரிடமிருந்து போ.லி.சார் வி.சா.ரித்து வருகிறார்கள். சித்ராவின் கணவர் ஹேமந்த், வி.சா.ர.ணை.யின் போது ஹேமந்த் தெளிவான பதில் எதையும் கொடுக்கவில்லை என்கின்றனர் கா.வ.ல்து.றையினர்.

ஏனென்றால் முதலில் சித்ரா குளிக்க சென்றதால் நான் வெளியே சென்றேன் என்று கூறிய ஹேமந்த் பிறகு, ஒரு டாக்குமென்ட் எடுப்பதற்காக வெளியே சென்றேன் என்று கூறியிருப்பது வினோதமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

சித்ராவை எதற்காக ஹேமந்த், ரூமில் விட்டுவிட்டு வெளியே சென்றார் என்பது இன்று வரை தெரியவில்லை.

மேலும் ஹேமந்த் வெளியே சென்றிருந்த போது, வேறு யாராவது ஒருவர் சி த்ராவை கொ.லை செ.ய்.தி.ருக்க வாய்ப்பு இருப்பதாகவும் காவல்துறையினர் ச.ந்.தேகிக்கின்றனர்.

அந்த நபர் சித்ராவிற்கு மிகவும் தெரிந்த நண்பராகவோ, அ.ர..சிய.ல் புள்ளிகளில் யாராவதாகவோ இருக்கலாம் என்று பல கோ ணங்களில் போலீசார் வி.சா.ரித்து வருகின்றனர்.

எனவே, இந்த தகவல் மூலம் சித்ராவின் கொ.லை வ.ழ.க்.கில் மூன்றாவது நபர் சம்பந்தப்பட்டிருப்பதாக ச ந் தேகம் எழுந்துள்ளது.

ரசிகருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வில்லன் நடிகர் சோனு சூட்!

சோனு சூட்…

சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ள உணவகத்திற்கு சென்று சாப்பிட்ட வில்லன் நடிகர் சோனு சூட் தனது ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

நாட்டையே உலுக்கிய கொரோனா லாக்டவுனில் தவித்த ஏழை, எளியவர்களுக்கும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து ரியல் ஹீரோவாக மாறியுள்ளார் நடிகர் சோனு சூட்.

விஜயகாந்த் நடித்த கள்ளழகர் என்ற படத்தின் மூலம் தமிழி சினிமாவில் அறிமுகமானவர் சோனு சூட். இந்தப் படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் நடித்த நெஞ்சினிலே படத்தில் நடித்தார். மேலும், சந்தித்த வேலை, மஜுனு, ராஜா, கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி, சாகசம், தேவி, தேவி 2, அருந்ததி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது தமிழில், தமிழரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்தமிழைத் தவிர தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். ஒரு நடிகராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும், சிறந்த மனித நேயமிக்கவராகவும் திகழ்கிறார். உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா இந்தியாவிலும் தாக்கைத்தை ஏற்படுத்தியது. கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது.

கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை சோனு சூட் செய்து வந்தார். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்த ஊர் செல்வதற்கு பேருந்து வசதி செய்து கொடுத்தார்.

கொரோனா காலத்தில் இரவு பகலாக பணியாற்றி வந்த மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோர் பலரும் தங்கி ஓய்வெடுப்பதற்கு தனது 6 மாடி ஹோட்டலை கொடுத்தார்.

வேலையிழந்த பலருக்கும் வேலை கொடுத்துள்ளார். டிராக்டர் வசதி செய்து கொடுத்துள்ளார். ஏழை மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையும் வழங்கியுள்ளார். இப்படி பல உதவிகளை செய்து மக்களிடத்தில் தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார்.

கொரோனா காலத்தில் சோனு சூட் செய்த இந்த மனிதாபிமானப் பணிகளுக்காக ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தின் சார்பில் அவர் எஸ்டிஜி சிறப்பு மனிதாபிமான செயல் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க்கது.

இப்படி தன்னால் முடிந்த உதவிகளை செய்த சோனு சூட், தனது ரசிகர் தொடங்கிய சாலையோர உணவகத்திற்கு சென்றுள்ளார். அந்த உணவகத்தில் சமைத்தும், அங்கு சாப்பிடவும் செய்துள்ளார். மேலும், அவர் வருவதை அறிந்த ஏராளமான ரசிகர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளார்.

இது குறித்து சோனு சூட் கூறுகையில், அனில் என்பவரது உணவகத்தை நான் சமூக வலைதளங்கள் மூலமாகவே அறிந்தேன். இந்த உணவகத்தில் சாப்பிட வேண்டும் என்று விரும்பினேன். இன்று தான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த உணவகத்தில் ஃப்ரைடு ரைஸ் மற்றும் கோபி மஞ்சூரியன் சாப்பிட்டேன் என்றார்.

Salute வைத்த Security-க்கு கைகுலுக்கிய தல அஜித் – வைரல் வீடியோ!

அஜித்…

தமிழ் திரையுலகில் தனது புகழுக்காக போட்டோவைப் ஒரு வீடியோவை போடுவது என்று நடிகைகள் ஆரம்பித்தாலும், பேரை சொன்னாலே அரங்கம் அதிரும் அளவுக்கு மக்கள் ஆர்ப்பரித்தது தல அஜித்திற்கு தான்.

பல அவமானங்கள் இடையிலும் புறக்கணிப்பு இடையிலும் தளராமல் உயர்ந்து என்று வேற லெவல் உயரத்தில் நிற்கிறார். நடிப்பு மட்டுமின்றி ஆளில்லா விமானம் ஓட்டுவது பைக் ரேஸ் சமையல் என அட்டகாசமாக இருக்கிறார்.

வில்லனாக கூட நடிக்க தயங்காதவர் தனது 50வது படமான மங்காத்தாவில் சால்ட் அண்ட் பெப்பர் என்ற புதிய லுக்கை அறிமுகம் செய்து ட்ரண்ட் செட் ஆக்கினார். வழக்கமாக தனது படங்களில் கலந்து கொள்ளாதவர் அஜித் குமார்.

ஆனால் தற்போது அவர் எங்கு சென்றாலும் அல்லது அவர் தனிப்பட்ட புகைப்படம் வெளியிடப்ட்டாலும் அது படத்தின் புரமோஷனை விட வேற லெவல் ரீச்சாகிறது. ஏற்கனவே தான் நடித்து வரும் வலிமை படத்தைப் பற்றி எந்த அப்டேட்டும் வெளிவராத நிலையில் அவரது ரசிகர்கள் படத்தின் தயாரிப்பாளரான போனி கபூரை வறுத்தெடுக்க தொடங்கினர்.

அதன் பொருட்டு அவன் சங்கர் ராஜா தனது ஸ்டூடியோவில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை வலிமை என்று கேப்ஷன் போட்டு வெளியிட்ட பின் கொஞ்சம் அமைதி ஆனார்கள். இன்று அஜித் கோவை விமான நிலையத்தில் இருந்து வெளிவரும் காட்சி ஒன்று வைரலாகி வருகிறது.

அதில் அவரைப்பார்த்து சல்யூட் அடித்த செக்யூரிட்டி கைகொடுத்து நல்லா இருக்கிறேன் என்று கூறிவிட்டு செல்லும் இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் கையெடுத்துக் கும்பிட்டு ஆனந்தத்தில் கண்ணீர் விட்டு பார்க்கின்றனர்.

இந்த வீடியோ வெளி வந்ததால் போனி கபூரை கொஞ்சம் விட்டு வைப்பார்கள் என்று நம்புகிறோம். நாளை போனி கபூரை காப்பாற்றிய தல என்று அவரது ரசிகர்கள் கூறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

சிகப்பு நிற உடையில் மின்னும் நடிகை ப்ரியா பவானி ஷங்கர், இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

பிரியா பவானி ஷங்கர்…

மேயாத மான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ப்ரியா பவானி ஷங்கர், அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்து வந்தார்.

சின்னத்திரை சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகை ப்ரியா, இப்போது திரைப்படங்களின் மூலமாகவும் ரசிகர்களிடையே பிரபலமாகி வருகிறார்.

மேலும் தற்போது இவர் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார், ஆம் ஓ மண பெண்ணே, குருதி ஆட்டம், களத்தில் சந்திப்போம் என இவர் நடித்து முடித்துள்ள திரைப்படங்கள் அடுத்த வருடம் வரிசையாக வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தற்போது சிகப்பு நிற உடையில் மின்னும் நடிகை ப்ரியா பவானி ஷங்கர் தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது.

ராகவா லாரன்ஸ் படத்தை இயக்கும் பிரபல தயாரிப்பாளர்!

ராகவா லாரன்ஸ்..

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்சயகுமார் நடிப்பில் உருவாகிய ‘லட்சுமி’ என்ற திரைப்படம் கடந்த தீபாவளி அன்று ஓடிடியில் வெளியாகியது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் லாரன்ஸ் தற்போது 5 ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு ராகவா லாரன்ஸின் பிறந்த நாளன்று வெளியாகி ‘ருத்ரன்’ என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திகில் கதையம்சம் கொண்ட படமாக இந்த படம் உருவாகவிருக்கும் நிலையில் இந்த படத்தை அறிமுக இயக்குனர் செல்வா என்பவர் இயக்கவுள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது அதில் ஒரு திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த படத்தை தயாரிப்பாளர் கதிரேசனே இயக்கவுள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

பொல்லாதவன், ஆடுகளம், ஜிகிர்தண்டா ஆகிய வெற்றி படங்களை தயாரித்த கதிரேசன், தான் இயக்கும் முதல் படத்தை வெற்றிபடமாக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

முக்கிய இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கவுள்ள மாஸ்டர் பட நடிகர், வெளியான சூப்பர் தகவல் இதோ..!

அர்ஜுன் தாஸ்…

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சென்ற வருடம் வெளியான திரைப்படம் கைதி, இப்படம் வெளியாகி 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

மேலும் இப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் அர்ஜுன் தாஸ், தனது முதல் திரைப்படத்திலே ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார்.

அதுமட்டுமின்றி சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அந்தகாரம் திரைப்படம் மிக சிறந்த விமர்சங்களை பெற்று வெற்றியடைந்தது.

அடுத்ததாக தளபதி விஜய்யுடன் இவர் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தற்போது நடிகர் அர்ஜுன் தாஸ் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெயில், அங்காடி தெரு உள்ளிட்ட மிக சிறந்த திரைப்படங்களை இயக்கிய இயக்குனருடன் நடிகர் அர்ஜுன் தாஸ் இணைத்துள்ளதால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

17ஆம் நூற்றாண்டின் வீரமங்கை கேரக்டரில் நயன்தாரா? வைரலாகும் தகவல்!

நயன்தாரா…

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில ஆண்டுகளாக நாயகிக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களில் அதிகம் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் வீர மங்கை ஒருவரின் கேரக்டரில் அவர் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய திரையுலகில் சரித்திர படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது தெரிந்ததே. அந்தவகையில் ஆங்கிலேயருக்கு எதிராக சுதந்திரத்திற்காக போராடிய முதல் தமிழ் வீரமங்கை என்ற பெருமை பெற்ற வேலுநாச்சியார் கேரக்டரில் நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை பிரபல இயக்குனர் சுசி கணேசன் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் வேலுநாச்சியர் கேரக்டரில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

17ஆம் நூற்றாண்டில் சிவகங்கை சீமையை ஆண்ட வேலுநாச்சியார் கல்வி, விளையாட்டு, சிலம்பம், வாள் வீச்சு, ஈட்டி எறிதல், அம்பு எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் ஆகியவற்றில் சிறந்து விளங்கியவர் என்பதால் இது குறித்த பயிற்சிகளிலும் நயன்தாரா விரைவில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீரமங்கை வேலுநாச்சியார் கேரக்டரில் நயன்தாரா நடிப்பது உறுதி செய்யப்பட்டால் அவருக்கு இந்த படம் மிகப் பெரிய மைல் கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.