‘விக்ரம் வேதா’ ஹிந்தி ரீமேக்: மாதவன் – விஜய்சேதுபதி வேடத்தில் நடிப்பது யார் யார்?

விக்ரம் வேதா…….

இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி நடித்த ’விக்ரம் வேதா’ என்ற திரைப்படம் 2017 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதியின் திரையுலக வாழ்வில் பெற்ற மிகப்பெரிய வெற்றி இந்த படம்தான் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இந்த படம் கடந்த சில வாரங்களாக ஹிந்தியில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்தன. ஹிந்தியில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த தேர்வுகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாதவன் நடித்த போலீஸ் கேரக்டரில் சயிப் அலிகான் நடிக்க இருப்பதாகவும், விஜய் சேதுபதி நடித்த கேங்க்ஸ்டர் கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் ஷ்ராதா ஸ்ரீநாத், கதிர், வரலட்சுமி உள்பட மற்ற கேரக்டர்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் தமிழில் இந்த படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி தான் ஹிந்தியில் இயக்க உள்ளனர் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

 

அய்யயோ.. வேண்டாம் சாமி: ரசிகரின் கேள்விக்கு அதிர்ச்சி பதிலளித்த அர்ச்சனா!!

பிக்பாஸ்…….

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடுமையான போட்டியாளர்களில் ஒருவராக இருந்த அர்ச்சனா கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே. டாஸ்குகள் உள்பட அனைத்திலும் ஈடுபாட்டுடன் அவர் இருந்தாலும் அவர் பைனல் வரை செல்லாததற்கு முக்கிய காரணம் அன்பு குரூப் ஆரம்பித்ததே என்றும் அன்பு என்ற ஸ்டாட்டர்ஜியை வைத்து அவர் மற்ற போட்டியாளர்களை டார்கெட் செய்ததாகவும், ஒருசில போட்டியாளர்களின் தனித்தன்மை வெளியே தெரியாமல் இருப்பதற்கு காரணமாக இருந்தார் என்பதும் பலரது குற்றச்சாட்டாக உள்ளது

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியை முதலில் இருந்து அனைத்து எபிசோடுகளையும் பார்த்த அர்ச்சனா அதில் ரசிகர்களின் ஒரு சில கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

அவ்வாறு ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும்போது ’ஐயோ வேண்டாம் சாமி.. நான் இப்போது எனது வீடு என்ற சொர்க்கத்தில் இருக்கிறேன்’ என்று பதில் சொல்கிறார். இந்த பதிலுக்கு ரசிகரின் கேள்வி என்னவெனில், ‘நீங்கள் எப்போது மீண்டும் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக செல்வீர்கள்? என்பது தான்.

மேலும் இன்னொரு ரசிகர் ’ஆரி தான் டைட்டில் வின்னர்’ என்று கூறியபோது ’நன்றி நானும் அதையே விரும்புகிறேன்’ என்று கூறியுள்ளார். மேலும் தந்தை இறந்தது குறித்த வாக்குவாதத்தில் அர்ச்சனா மற்றும் நிஷா இருவரும் ’சாரி அப்பா’ என்று அப்பாவிடம் விண்ணை நோக்கிக் கூறிய புகைப்படத்தை பதிவு செய்து கிண்டலாக கமெண்ட் பதிவு செய்த ஒருவருக்கு, ‘என்னுடைய தந்தையின் இழப்பு உங்களுக்கு கிண்டலா? என் தந்தை மேலே இருந்து உங்களுக்கு ஆசிர்வாதம் செய்வார்’ என்று கூறினார்.

மேலும் வெளியில் வந்தும் அன்பு குரூப் மீண்டும் இணைந்துள்ளது என்றும், அர்ச்சனா என்பவர் மீது நான் தனிப்பட்ட மதிப்பு வைத்திருந்தேன் என்றும் ஆனால் பிக்பாஸ் வீட்டில் அவரது விளையாட்டை பார்த்து நான் அவரை ரொம்ப வெறுக்கிறேன் என்றும் ஒரு ரசிகர் கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த அர்ச்சனா ’உங்கள் கருத்துக்கு நன்றி, ஆனால் அதே நேரத்தில் வெறும் 67 மணி நேரத்தில் என்னுடைய கேரக்டரை நீங்கள் எப்படி முடிவு செய்யலாம்? என்று கூறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் ஜீ டிவியிலேயே அர்ச்சனா இருந்திருக்கலாம் என்று கூறிய ரசிகர் ஒருவருக்கு பதிலளித்த அர்ச்சனா ’எப்போதும் நான் எடுத்த முடிவில் இருந்து பின் வாங்கியது இல்லை என்றும் நான் இப்போதும் சரியான முடிவைத்தான் எடுத்து இருக்கின்றேன் என்று கூறியுள்ளார்.

சீயான் விக்ரமின் ‘கோப்ரா’ லேட்டஸ்ட் அப்டேட்: வைரலாகும் போஸ்டர்!

கோப்ரா………..

சீயான் விக்ரம் நடித்து வரும் ‘கோப்ரா’ படத்தின் அப்டேட்களை விக்ரமின் ரசிகர்கள் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்கள் மூலம் கேட்டுக் கொண்டிருந்த நிலையில் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று சற்றுமுன் கிறிஸ்துமஸ் விருந்தாக ‘கோப்ரா’ படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது

ஏற்கனவே ‘கோப்ரா’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில் 8 கெட்டப்புகளில் வித்தியாசமான தோற்றங்களில் சீயான் விக்ரம் இருந்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள இரண்டாவது லுக்கில் உடலின் ஒரு பகுதி எழுத்துக்கள் போலவும் மற்றொரு பகுதி மனித உடல் போலவும் இருக்கும் வித்தியாசமான ஸ்டில் வெளியாகி உள்ளது. இந்த ஸ்டில் படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது

விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கும் இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மான் அவர்கள் இசையமைத்துள்ள இந்த படத்தை அஜய்ஞானமுத்து இயக்கியுள்ளார்

ரசிகர்களை கவர்ந்த பகவான் ஆரி!!

ஆரி………

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக இருக்கும் ஆரி, தமிழில் உருவாகும் முதல் இலுமினாட்டி படத்தில் நடிக்கிறார்.

கமல் தொகுத்து வழங்கி வரும் ‘பிக் பாஸ்’ 4-ல் போட்டியாளராக இருக்கிறார் நடிகர் ஆரி. அவருக்கு ஆதரவு, எதிர்ப்பு என ஒரே சேர சமூக வலைதளத்தில் எதிரொலித்து வருகிறது. இதனிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி நடித்து வரும் பகவான் படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அம்மன்யா மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் பகவான் படத்தில் ஆரி அர்ஜுனன், பூஜிதா பொன்னாடா, ஆடுகளம் நரேன், யோக் ஜேபி, ஜெகன், முருகதாஸ், டெல்லிகணேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர். காளிங்கன் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தின் 80% படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து ஆரி திரும்பியவுடன், இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. தமிழில் உருவாகும் முதல் இலுமினாட்டி படம் என்று படக்குழு தெரிவித்துள்ளது. தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

விஷாலை தொடர்ந்து பிரபல நடிகருக்கு வில்லனாகும் ஆர்யா?

புஷ்பா…

எனிமி படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்து வரும் ஆர்யா, அடுத்ததாக பிரபல நடிகரின் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளாராம்.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் வில்லனாக நடிக்க முதலில் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருந்தார். பின்னர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் விலகினார்.

இதையடுத்து அந்த கதாபாத்திரத்தில் மாதவன் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இதை அவர் திட்டவட்டமாக மறுத்தார்.

இந்நிலையில், புஷ்பா படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் ஆர்யா ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா படத்துக்காக கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற அருண் விஜய் மகன்!

ஆர்னவ் விஜய்…

சூர்யா தயாரிக்கும் குழந்தைகள் படத்தில் நடிக்க உள்ள அருண் விஜய் மகனுக்கு கூத்துப்பட்டறையில் ஒரு மாத காலம் பயிற்சி அளிக்கப்பட்டதாம்.

நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தரமான குடும்ப படங்களை தயாரித்து வருகிறது. இந்தப்பட நிறுவனம் அடுத்து குழந்தைகள் படத்தை தயாரிக்கிறது. இதில், நடிகர் விஜய குமாரின் பேரனும், நடிகர் அருண் விஜய்யின் மகனுமான ஆர்னவ் விஜய் கதை நாயகனாக நடிக்கிறான்.

அவனுக்கு 9 வயது ஆகிறது. 3-ம் வகுப்பு படிக்கிறான். சூர்யா தயாரிக்க, சரோவ் சண்முகம் இயக்குகிறார். படத்தை பற்றி அவர் கூறியதாவது: “தமிழ் சினிமாவை பொறுத்தவரை குழந்தைகள் படம் மிக அரிதாகவே தயாரிக்கப்படுகின்றன.

சூர்யாவின் 2டி நிறுவனம் அழகான கருத்துள்ள படங்களையே தயாரித்து வருகிறது. அந்த வகையில், இது குடும்பங்கள் ரசிக்கும் படமாக இருக்கும். ஆர்னவ் விஜய்யை திரையுலகுக்கு அறிமுகம் செய்வதில், மகிழ்ச்சி அடைகிறேன். இது, என் மனதுக்கு நெருக்கமான படம்.

ஒரு சிறுவனுக்கும், அவனது நாய்க்குட்டிக்கும் இடையே உள்ள அழகான உறவை வெளிப்படுத்தும் படமாக இருக்கும்.மொத்த கதையும் ஊட்டி பின்னணியில் நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. படத்தில் நடிப்பதற்காக ஆர்னவ் விஜய்க்கு கூத்துப்பட்டறையில், ஒரு மாத காலம் பயிற்சி அளிக்கப்பட்டது”. இவ்வாறு அவர் கூறினார்.

விக்ரம் பிரபு படத்தில் திடீர் மாற்றம்!

விக்ரம் பிரபு….

முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்து வரும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டு தேதி மாற்றம் செய்திருக்கிறார்கள்.

‘தேவராட்டம்’ படத்துக்குப் பிறகு முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர்.

இதன் படப்பிடிப்பு மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் மும்முரமாக நடைபெற்று வந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிகிறார்.

முதலில் ‘பேச்சி’ எனத் தலைப்பிட்டு இருந்த இந்தப் படத்தைப் பொங்கல் பண்டிகை அன்று சன் டிவியில் ஒளிபரப்பவும், அடுத்த நாள் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியிடவும் திட்டமிட்டார்கள்.

ஆனால், தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் ‘பேச்சி’ என்ற பெயர் பொருத்தமாக இல்லை என்றும், அதனால் ‘புலிக்குட்டிப் பாண்டி’ என்று படத்தின் பெயரை மாற்றியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

என் தங்கைக்கு ஊர்க்காரர்கள் இப்படி செய்வார்கள் என்று நினைக்கவில்லை- மனம் திறக்கும் சாய் பல்லவி!

சாய்பல்லவி…

ரவுடி பேபி, மலர் டீச்சர் என எத்தனை அடையாளங்கள் தான் சாய்பல்லவிக்கு. பிரேமம் படத்தில் மலர் டீச்சராக அறிமுகமாகி எல்லோருடைய ட்ரீம் காதலராக வலம் வந்தார்.

இவர் வருகைக்குப் பின்னால் டீச்சரை ரூட்டு விடும் பழக்கத்தை பசங்க பழகி கொண்டார்கள். அதன் பிறகு என்ஜிகே, மாரி 2 படங்களில் நடித்தார். ஆனால் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.

இவர் முதன்முதலில் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மலையாளத்தில் பிரேமம், கழி போன்ற படங்களிலும் சில தெலுங்கு படங்களிலும் நடித்தார். இவர் நடித்த ரவுடி பேபி பாடல் பெரும் சாதனை பெற்றது. சமீபத்தில் வெளிவந்த பாவக்கதைகள் ஆந்தாலஜி திரைப்படத்தில் சிறப்பான நடித்து பெரும் பாராட்டைப் பெற்றார்.

இவருக்கு ஒரு தங்கை இருக்கிறார், அவரின் பெயர் பூஜா. கிட்டத்தட்ட இவரைப் போல தோற்றம் கொண்ட பூஜா, காரா என்ற படத்தில் நடித்தார். அவரது தங்கை பற்றி ஒரு பேட்டியில் சாய் பல்லவி கூறியிருந்தார்.

அதில் “என் தங்கை, அவளை விட நான் தான் அழகாக இருப்பதாக கருதுகிறார், அவரை விட நான் கொஞ்சம் நிறமாக இருப்பதால் அவர் இவ்வாறு நினைக்கிறாள். தங்கையின் கலரை பற்றி மற்றவர்கள் பேசுவதால் அவர் வீட்டை விட்டு வெளியே வரக்கூட தயங்குவது உண்டு.

சிறு வயது இருக்கும்போது அவள் விளையாட வெளியே செல்வாள், அப்போது, ஏற்கனவே நீ கருப்பு இதில் வெளியே விளையாட போறியா என ஊர்க்காரர்கள் பலமுறை கேட்டு இருக்கிறார்கள்.

இதைக் கேட்டு கேட்டு பலமுறை மனதால் பாதிக்கப்பட்டதாக அவள் கூறியிருக்கிறார்” என்று கூறினார். என்னது இது கலர் கம்மியா என நெட்டிசன்கள் தங்களை கண்ணாடியில் பார்த்து பெருமூச்சு விட்ட வண்ணம் உள்ளனர்.

4 மாசம் ஆச்சு: செத்தால் தான் ஆக்‌ஷன் எடுப்பீங்களா? பாயல் கோஷ் ஆவேசம்!

பாயல் கோஷ்…

இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது பா.லி.ய.ல் பு.கா.ர் கொ.டுத்து 4 மாதங்கள் ஆகியும், இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று நடிகை பாயல் கோஷ் கு.ற்.ற.ம் சா.ட்டியுள்ளார்.

நயன் தாரா, அதர்வா ஆகியோர் நடிப்பில் வந்த இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்தவர் பாலிவுட் நடிகர், இயக்குநர் அனுராக் காஷ்யப். பாலிவுட்டில் ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். பல படங்களில் நடிக்கவும் செய்துள்ளார்.

தற்போது கோஸ்ட் ஸ்டோரிஸ், ஜோக்குடு ஆகிய படங்களை இயக்கியுள்ளார். AK vs AK மற்றும் Bansuri: The Flute ஆகிய படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். இந்த நிலையில், அனுராக் காஷ்யப் மீது அண்மையில், நடிகை பாயல் கோஷ் பா.லி.ய.ல் பு.கா.ர் கொ.டு.த்திருந்தார்.

அதில், அனுராக் காஷ்யப் வீட்டிற்கு பட வாய்ப்பு கேட்டு சென்ற போது த.காத முறையில் ந.ட.ந்ததாக கு.ற்.ற.ம் சா.ட்.டியிருந்தார். மேலும், 200 க்கும் மேற்பட்ட பெ.ண்க.ளுடன் அவர் ப.டு.க்கையை ப.கி.ர்ந்துள்ளார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து அவர் மீது வ.ழக்கு ப.திவு செ.ய்.யப்பட்டது. இந்த நிலையில், பு.கா.ர் அளித்து 4 மாதங்கள் ஆகியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மே.ற்கொ.ள்.ள.ப்படவில்லை என்று கு.ற்.ற.ம்சா.ட்.டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: பு.கா.ர் கொடுத்து 4 மாதங்கள் ஆகிவிட்டன. அனுராக் காஷ்யப்பிற்கு எதிரான ஆதாரங்களையும் கொடுத்துவிட்டேன். ஆனால், இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. ஒருவேளை நான் செத்தால் தான் அவர் மீது நடவடிக்கை எடுப்பீர்களா என்று ஆதங்கத்துடன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர் படத்தின் சென்சார் Update ! U‌ – ஆ ?‌ U/A – ஆ ? A – ஆ ?

மாஸ்டர்..

மாநகரம், கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் நடித்துள்ள படம் மாஸ்டர். இந்த வருடம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருந்த இந்த படம் கரோனா பிரச்னையால் தேதி சொல்லாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அநேகமாக வரும் பொங்கலுக்கு மாஸ்டர் படம் வெளியாக வாய்ப்பு உள்ளது. இந்தநிலையில், மாஸ்டர் படத்தில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இருப்பதாகவும்,

போ .தை, ச.ர.க்.கு ச.ம்.மந்தப்பட்ட காட்சிகள் இருப்பதால் இதற்கு A சர்டிஃபிகட் கொடுக்கப்பட்டதாகவும்,

அதன் பிறகு சென்சார் குறிப்பிட்டு சொன்ன இடங்களை எல்லாம் வெட்டிவிட்டு U/A கொடுத்தார்கள் என்று தகவல்கள் வந்தது.

தற்போது மாஸ்டர் படக்குழு அதிகாரப்பூர்வமாக U/A கொடுத்துள்ளதாக Tweet போட்டு உறுதி செய்திருக்கிறார்கள்.