ஆசிட் வீசி எரித்து விடுவதாக மிரட்டுகிறார் : காதலன் மீது பிக்பாஸ் பிரபலம் பரபரப்பு புகார்!!

அஞ்சலி அமீர்…

ஆசிட் வீசி எரித்து விடுவேன் என காதலன் தன்னை மிரட்டுவதாக பிக்பாஸ் பிரபலம் ஒருவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.ஆசிட் வீசி எரித்து விடுவதாக மிரட்டுகிறார் – காதலன் மீது பிக்பாஸ் பிரபலம் பரபரப்பு புகார்

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருபவர் அஞ்சலி அமீர். தமிழில் பேரன்பு படத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக நடித்துள்ளார். திருநங்கையான இவர் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு பங்கேற்றார். இந்நிலையில் அவர் தனது முகநூலில் நேரடியாக கண்ணீருடன் பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:- என்னை காதலன் டார்ச்சர் செய்து வந்தார். இதனால் அவருடன் உறவை முறித்துக் கொள்ள முடிவு செய்தேன். அதனால் அவர் என்னை, ஆசிட் ஊற்றி எரிக்க போவதாக மிரட்டுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். கண்ணீர்விட்டு கதறி அழுதபடி பேசிய அஞ்சலி அமீர் காதலன் மீது பல குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

தன்னுடைய சேமிப்பில் இருந்து இரண்டு ஆண்டு களில் சுமார் 4 லட்சம் வரை அவர் பறித்துகொண்ட தாகவும் கூறியிருக்கிறார். அந்த வீடியோ முடிவில் அஞ்சலி தனக்கு ஏற்பட்ட கொடுமைகளை தாங்க முடியவில்லை என்றும், தற்கொலை செய்யும் மன நிலையில் இருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். இந்த பேஸ்புக் லைவ் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தனக்கு ஆதரவளிக்க யாரும் இல்லை, பெற்றோரும் உடன் இல்லை என்பதால், இந்த பிரச்சினையை தீர்க்க போலீஸ் அதிகாரிகளை அணுக திட்டமிட்டுள்ளார். நாட்டின் முதல் திருநங்கை நடிகையான அஞ்சலி அமீர் தனது பயோகிராபி படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார். 2020-ம் ஆண்டு மே மாதம் இதற்கான வேலைகளை செய்ய திட்டமிட்டுள்ளார். தன்னை சித்ரவதை செய்த காதலனின் பெயரை அவர் கடைசி வரை சொல்லவில்லை.

அருண் விஜய்யின் கதாபாத்திரம் இதுதான் : அக்னி சிறகுகள் படக்குழு அறிவிப்பு!!

அருண் விஜய்….

நவீன் இயக்கத்தில் உருவாகி வரும் அக்னி சிறகுகள் படத்தில் அருண் விஜய்யின் கதாபாத்திரம் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘அக்னி சிறகுகள்’. ஆக்‌ஷன், திரில்லராக உருவாகும் இப்படத்தில் அக்‌ஷரா ஹாசன், ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கே.எஸ்.பாச்சா ஒளிப்பதிவு செய்ய, நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார்.

டி.சிவா அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறார். மூடர்கூடம் நவீன் இயக்கி வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடந்தது. தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு கஜகஸ்தானில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்களை படக்குழு அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், விஜய் ஆண்டனி சீனு எனும் கதாபாத்திரத்திலும், அக்‌ஷரா ஹாசன் விஜி எனும் கதாபாத்திரத்திலும், சென்ராயன் டாக்ஸி தல எனும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், அருண் விஜய்யின் கதாபாத்திரத்தையும் அவரது நியூ லுக்கையும் படக்குழு நேற்று வெளியிட்டது. அதன்படி இப்படத்தில் அருண் விஜய் ரஞ்ஜித் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்!!

ரஜினி..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தில் பிரபல நடிகர் நடிக்க மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

மூன்றுமுகம், பாண்டியன் படங்களை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிப்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படம் அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையில் ரிலீசாக உள்ளது.இந்நிலையில், தர்பார் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தது குறித்து பிரபல தெலுங்கு நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அவனே ஸ்ரீமன் நாராயணா படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் தர்பார் படத்தில் நடிக்க மறுத்ததாக அவர் கூறியுள்ளார்.கன்னட படமான அவனே ஸ்ரீமன் நாராயணா அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டுள்ளது. வருகிற டிசம்பர் 27-ந் தேதி இப்படம் ரிலீசாக உள்ளது.

ரித்திக் ரோஷனின் சம்பளத்தை கேட்டு மயங்கி விழும் தயாரிப்பாளர்கள்!!

ரித்திக் ரோஷன்…

 

உலக அளவில் ஆணழகன் என்று கூறினால் அது ரித்திக் ரோஷன் தான். அந்த அளவு உடலை கட்டுக்கோப்பாக வைப்பதிலும் கைதேர்ந்தவர். அது மட்டுமல்லாது இந்திய சினிமாவை உலகத் தரத்திற்கு எடுத்துச் சென்ற சில ஹீரோக்களில் இவரும் ஒருவர்.

இவருடைய கிரிஷ் படம், ஹிந்தி ரசிகர்களுக்கு மட்டுமின்றி தமிழிலும் பல பேருக்கு ஃபேவரைட். குறிப்பாக 90kidsக்கு. இந்நிலையில் சமீபகாலமாக இவருடைய திரைப்படங்கள் படுதோல்வியை சந்தித்தது. இதனால் மிகவும் கவலையில் இருந்த ரித்திக் ரோஷனுக்கு சமீபத்தில் வெளியான வார் திரைப்படம் புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது.

வார் திரைப்படம் சுமார் 150 கோடி செலவில் உருவாகி உலகம் முழுவதும் ரூ. 400 கோடிக்கு மேல் வசூல் செய்த அசத்தியுள்ளது.

இதனால் மீண்டும் பார்முக்கு வந்த ரித்திக், தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் நடிக்க முடிவு எடுத்துள்ளார்.ஆனால் தயாரிப்பாளர்களுக்கு இவரை வைத்து படம் எடுப்பதில் உடன்பாடில்லை. காரணம் சமீபத்தில் வெளியான வார் திரைப்படத்திற்கு இவரின் சம்பளம் ரூ. 48 கோடி ஆகும்.

அந்த படம் ஹிட்டானதை தொடர்ந்து சம்பளத்தை அதிகரிக்கும் முடிவில் இருக்கிறாராம் ரித்திக் ரோஷன்.

அஜித் படத்தில் நடித்தது ஒரு குத்தமா.? ரசிகர்களிடம் கும்பிடு போடும் அனிகா!!

அனிகா….!

என்னை அறிந்தால் திரைப்படத்தில் தல அஜித்துடன் மகளாக நடித்தவர் அனிதா. மலையாள மண்ணிலிருந்து வந்த அந்தப் பெண்ணை இந்த படத்திற்கு பிறகு அனைவரும் தங்கள் வீட்டுக் குழந்தையைப்போல் ஏற்றுக்கொண்டனர்.

மீண்டும் கடந்த ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்திலும் தல அஜித்தின் மகளாக நடித்தார். அப்பொழுது பார்ப்பதற்கு சிறு பெண்ணை போலவே தெரிந்தார்.

இந்த இரண்டு படங்களுக்கும் கிட்டதட்ட 4 வருட இடைவெளி தான் உள்ளது. ஆனால் அதற்குள் தான் பெரிய பெண் ஆகி விட்டதாக நினைத்துக் கொண்ட அனிகா, சமூக வலைதளங்களில் அப்போது வயதுக்கு மீறிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்துள்ளார்.

இதனைக் கண்ட ரசிகர்கள் குழந்தை பருவத்திலேயே இது மாதிரி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது தவறு என்றும், மீண்டும் இது போன்ற காரியங்களில் ஈடு படாதீர்கள் எனவும் அறிவுரை செய்து வருகின்றனர்.

இதனால் தல அஜித் அவர்களுடன் நடித்ததால் தன்னை இன்னும் குழந்தை போலவே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என தன்னை சார்ந்தவர்களிடம் புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.

இந்தியாவின் மியாகலிபா எனக் கூறிய ரசிகர்.. ஓ*** என திட்டிய யாஷிகா ஆனந்த்!!

இந்தியாவின் மியாகலிபா..

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற காவிய திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் யாஷிகா ஆனந்த். அதன்பிறகு உலகநாயகன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் மகத் உடன் இவர் செய்த சேட்டைகள் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது.

பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே மகத் யாஷிகாவின் பின்னழகில் மசாஜ் செய்தது, அவரது கட்டிலில் ஒன்றாக உறங்கியது என அனைவரும் அறிந்ததுதான். அதன் பிறகு தொடர்ந்து கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார்.

அதே சமயத்தில் அளவுக்கு மீறிய கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் அவ்வப்போது வெளியிட்டும் வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை கழுவி ஊற்றுகின்றனர். ஒரு சிலரோ பிரபல ஆபாச பட நடிகை மியா கலிபா ஒப்பிட்டு பேசுகின்றனர்.

தமிழ்நாட்டின் மியா கலிபாவே வாழ்க என கோஷம் கூட போடுகின்றனர். இதனால் சங்கடத்திலிருந்த யாஷிகா, தான் சினிமா துறையில் கஷ்டப்பட்டு முன்னேறி வருவதாகவும், இந்த மாதிரி விஷயங்கள் தன்னம்பிக்கை இழக்கச் செய்வதாக இருப்பதாக கூறி வருத்தப்பட்டுள்ளார்.

அதுக்கு நீங்க காட்டாம இருக்கணும் என ரசிகர்கள் தொடர்ந்து தங்களது சேட்டைகளை கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

அமேசான் காட்டில் புகுந்த அனகோண்டா என குஷ்பு, விஷாலை கலாய்த்த ரசிகர்.. கடுப்பில் கெட்ட வார்த்தையில் திட்டிய குஷ்பு!!

குஷ்பு…!

தமிழ் சினிமாவில் 80, 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவரது பப்ளியான தோற்றத்திற்கு அன்றைய கால ரசிகர்கள் முதல் இந்த கால ரசிகர்கள் வரை அடிமைதான். அந்த அளவு அழகால் அனைவரையும் கவர்ந்தவர்.

எப்பொழுதுமே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் குஷ்பு, சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுவதற்காக தனது டுவிட்டர் பக்கத்தை நீக்கினார். இதனால் ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியும் அதற்கான ரிப்ளை குஷ்புவிடம் இருந்த வரவில்லையாம்.

இந்நிலையில் சமீபத்தில் குஷ்புவின் கணவர் சுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்சன் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெறத் தவறிவிட்டது. ஆனால் விஷாலும், குஷ்பு குடும்பத்தினரும் நல்ல நண்பர்களாக பழகி வருகின்றனர்.

அந்த வகையில் குஷ்பு, விஷாலுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். அதற்கு அவரது ரசிகர்களில் ஒருவர் அமேசான் என குஷ்புவையும் அனகோண்டா என விஷாலையும் குறிப்பிட்டு கிண்டல் அடித்தார். அதற்கு கடுப்பான குஷ்பு, உங்க அம்மா என்ன flipkart-ஆ என பதிலடி கொடுத்துள்ளார்.

சமீபத்தில் ஸ்ரீரெட்டி விஷாலை அனகோண்டா என ஒரு பேட்டியில் குறிப்பிட்டதால் அது சார்பில் பல மீம்ஸ்கள் வலம் வந்தன. ஆனால் அது நடிகர் விஷால் இல்லை என ஸ்ரீரெட்டி அந்த வீடியோவில் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சித்தார்த்தின் புதிய படம் – மாறுபட்ட கதையுடன் தயார்…!

கோலிவுட்டில் உருவாகி இருக்கும் `டக்கர்’ படத்தில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்க, திவ்யான்ஷா கவுசிக் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.இவர், `மஜிலி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து பிரபலமானவர்.

படத்தை பற்றி டைரக்டர் கார்த்தி ஜி.கிருஷ் கூறியதாவது, அகங்காரமும், கோபமும் கொண்ட 2 கதாபாத்திரங்கள், ஒருவரையொருவர் எதிர்கொள்ளும்போது, அவர்கள் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன? என்பதை கருவாக கொண்ட படம் தான் டக்கர்.

அடிதடி படங்களில் நடித்த சித்தார்த்துக்கு இது முற்றிலும் மாறுபட்ட படமாக இருக்கும்.

அவருடன் யோகி பாபு, முனீஷ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ் ஆகிய மூன்று பேரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சுதன், ஜெயராம் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள்.”

விஜய்யை இயக்கும் வாய்ப்பு முன்னணி இயக்குனருக்கு பறிப்போன கதை, ரசிகர்கள் சோகம்!!

விஜய்….!

தளபதி விஜய் இவரை இயக்க பல இயக்குனர்கள் காத்திருக்கின்றனர். அதிலும் இளம் இயக்குனர்கள் பலரும் போட்டிப்போட்டு வருகின்றனர்.

அந்த வகையில் விஜய் தன்னுடைய 64 வது படத்தை தடம் என்ற மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்த மகிழ் திருமேணியிடம் சொன்னாராம்.

அவரும் ஒரு கதை சொல்ல, விஜய்க்கு மிகவும் பிடித்திருந்ததாம், ஆனால், உதயநிதி ஏற்கனவே மகிழ் திருமேணியை கமிட் செய்துள்ளாராம்.

இதன் காரணமாக இந்த படத்தை அவரால் இயக்க முடியாமல் போனதாக, பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

மாற்றுத்திறனாளி பிரணவ்வின் வாழ்நாள் ஆசையை நிறைவேற்றிய ரஜினிகாந்த்!!

ரஜினிகாந்த்….

சில வாரங்களுக்கு முன்பு பிரணவ் என்ற மாற்றுத்திறனாளி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உடன் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அப்போது வைரலானது.

ரஜினியை சந்திப்பது தன் வாழ்நாள் கணவு என கூறியிருந்தார் அவர்.இந்நிலையில் தற்போது அந்த ஆசையை ரஜினி நிறைவேற்றியுள்ளார். அவர் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினியை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.ரஜினிக்கு ஓவியம் ஒன்றையும் பரிசாக கொடுத்துள்ளார் பிரணவ்.