சுர்ஜித் பெற்றோருக்கு நடிகர் ராகவா லாரென்ஸ் உருக்கமான வேண்டுகோள்!!

நடிகர்  உருக்கமான வேண்டுகோள்!

சுர்ஜித்தின் மரணத்தால் தற்போது தமிழ்நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது. வீட்டுக்கு அருகில் இருந்த மூடப்படாத ஆழ்துளைகிணற்றில் விழுந்த அவரை காப்பாற்ற பல்வேறு வித முயற்சிகள் நடந்தாலும் அவை பலனளிக்கவில்லை.

அவர் இறந்த நிலையில் உடல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பிறகு அடக்கம் செய்யப்பட்டது உடல்.

இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் சுர்ஜித்தின் பெற்றோருக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். “சுர்ஜித் இன்று நம் தேசத்தின் பிள்ளையாகிவிட்டான். அதுபோல் இந்த தேசமெங்கும் எத்தனையோ பிள்ளைகள் பெற்றோரின்றி இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பிள்ளையை எடுத்து அந்த பிள்ளைக்கு சுர்ஜித் என பெயரிட்டு வளருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.”

“அப்படி நீங்கள் குழந்தையை தத்தெடுக்க நினைத்தால் நானே குழந்தையை தத்தெடுத்து கொடுக்கிறேன். அவன் படிப்பு செலவு முழுவதையும் நானே ஏற்றுக்கொள்கிறேன்” என கூறியுள்ளார் ராகவா லாரன்ஸ்.

பிரபல நடிகை குஷ்பூவின் மகளை தகாத வார்த்தையால் தவறாக பேசிய நபர்! மோசமாக திட்டிய நடிகை!!

மோசமாக திட்டிய நடிகை

சினிமாவில் அக்காலத்தில் கனவுக்கன்னியாக இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை குஷ்பூ. இவருக்கு கோவில் கட்டும் தீவிர ரசிகர்களும் உண்டு.

தற்போது டிவி, சீரியல் என நடித்து வருகிறார். அவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். ஒரு அவந்திகா, மற்றொருவர் ஆனந்திதா.

அண்மையில் தன் மகள் ஆனந்தித்தாவுடன் தீபாவளி கொண்டாட்டத்தில் புகைப்படம் எடுத்து பதிவிட அதில் அவரின் மகளின் தோற்றதை ரசிகர் ஒருவர் தவறாக வார்த்தையால் திட்டியுள்ளார்.

இதை கவனித்த குஷ்பூ அந்த நபரை மோசமாக திட்டி தீர்த்துள்ளார்.

பிரபல நடிகர் மனோ விபத்தில் சிக்கி மரணம் : பிரபலங்கள் இரங்கல்!!

பிரபல நடிகர் விபத்தில் சிக்கி மரணம்

பல சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று மிக பிரபலமானவர் நடிகர் மனோ. மானாட மயிலாட நிகழ்ச்சியில் காமெடி, மிமிக்ரி, நடனம் என கலக்கிவந்த அவர், அதன்பிறகு சன் டிவியின் லொள்ளு பா நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார்.

அவருக்கு லிவியா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். நேற்று அவர் தன் மனைவியுடன் வெளியில் சென்று திரும்பியபோது அவரது கார் சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. அதில் மனோ உயிரிழந்தார். மனைவி லிவியா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்தின் சிசிடிவி காட்சியும் தற்போது வெளிவந்துள்ளது.நடிகர் மனோவின் மரணம் அதிர்ச்சியளிப்பதாக பல சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சிங்கம் 2 படத்தில் வில்லனாக நடித்த பிரபல நடிகர் கைது : போலிஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

பிரபல நடிகர் கைது

சூர்யா நடித்த சிங்கம் 2 படத்தின் வில்லனாக நடித்து பிரபலமானவர் நடிகர் ஓஜரா என்ற ஜேசன். நைஜீரியாவை சேர்ந்த இவர் கிங் ஆஃப் மை வில்லேஜ், சூப்பர் ஸ்டோரி என நைஜீரிய படங்களிலும் நடித்துள்ளார்.

தங்கல், ஆக்சிரெண்டல் பிரைம் மினிஸ்டர், கேரி ஆன் கேசார் என சில் ஹிந்தி படத்திலும் நடித்திருக்கிறார். டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் ஜேசன் சுற்றிகொண்டு இருந்தாராம். இதனால் சந்தேகமடைந்த பாதுகாப்பு படையினர் அவரை பிடித்து விசாரித்துள்ளனர்.

இதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துடன், அவரின் விசா 2011ல் காலாவதியாகி ச ட்டவிரோ தமாக அவர் இங்கு தங்கியருந்ததால் அவரை உடனே போலிசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் உளவுத்துறை விசாரணையும் நடைபெற்று வருகிறது.

பிக்பாஸ் சேரன் வெளியிட்ட உருக்கமான பதிவு : ஒட்டு மொத்த தமிழக மக்களையும் துடிக்க வைத்த சம்பவம்!!

சேரன் வெளியிட்ட உருக்கமான பதிவு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் ஒழுக்கமான நபர் என டைட்டில் கொடுக்கப்பட்டவர் இயக்குனர் சேரன். அவருக்கு லாஸ்லியா மீது அவ்வளவு அன்பும், பாசமும் இருந்தது.

அனைவரும் ஓரு நல்ல சீனியர் போல குரல் வழிகாட்டி வந்தார். யாருமே செல்லாத நிலையில் பிக்பாஸ் மதுமிதாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

அண்மையில் சமூகவலைத்தளத்தில் யாரும் யாரை தரம் தாழ்த்தி பேச வேண்டாம் என கேட்டுகொண்டார். இந்நிலையில் ஒட்டு மொத்த தமிழகமும் துடித்துக்கொண்டிருக்கும் சம்பவமான சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணிகள் குறித்து அவர் உருக்கமான பதிவிட்டுள்ளார்.

இதில் அவர் சிறுவனை மீட்கும் முயற்சியில் 51 மணி நேரமாக தொடர்ந்து செயல்படும் அமைச்சர், அரசு அதிகாரிகள் மற்றும் அனைத்து முயற்சியாளர்களையும் பாராட்டுவோம்.

இவர்களின் நம்பிக்கையும் அனைத்து மக்களின் ப்ரார்த்தனையும் சிறுவனை மீட்கும் என கூறியுள்ளார்.

 

சுஜித் விசயத்தில் அறம் பட இயக்குனருக்கு வந்த கோபம் : முக்கிய பதிவு : கண்டுகொள்ளுமா அரசு!!

இயக்குனருக்கு வந்த கோபம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனி ஹீரோயினாக நடித்து கலக்கிய படங்களில் ஒன்று அறம். கலெக்டராக அவர் நடித்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கும்.

பலரையும் கவர்ந்த இப்படம் அரசு அதிகாரிகள் உட்பட பலரும் வாழ்த்தினர். ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க போ ராடும் கதையாக இயக்குனர் கோபி நயினார் இயக்கியிருந்தார்.

தற்போது திருச்சி மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சுஜித்தை மீட்க நீண்ட நேரமாக போராடி வருகிறார்கள்.

தற்போது இயக்குனர் கோபி நயினார் ராக்கெட்டுகள் மேல் இருக்கும் கவனம், சாதாரண மக்களுக்கும் பயன்படும் விஞ்ஞானத்திலும் இருக்க வேண்டும்,

ஆழ்துளை கிணறுகளில் சிக்கும் குழந்தைகளை மீட்க, புதிய இயந்திரங்களை கண்டுபிடித்து தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்கு வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

பிக் பாஸ் சேரனுடன் ஆட்டோகிராபில் நடித்த நடிகையா இது? அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

ஆட்டோகிராபில் நடித்த நடிகையா இது?

சினிமாவைப் பொருத்தவரை நடிகர்களை விட பல்வேறு நடிகைகள்தான் விரைவில் காணாமல் போய் விடுகிறார்கள்.

அதுவும் திருமணத்திற்கு பின்னர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற விவரம் கூட தெரியாமல் போய்விடுகிறது.

அந்தவகையில் சேரன் நடித்து இயக்கிய “ஆட்டோகிராஃப்” படத்தின் மூலம் தமிழ் மக்களிடையே அதிகம் பேசப்பட்டவர் கோபிகா.

இந்த படத்திற்கு பிறகு தான் கோபிகா சினிமா திரை உலகில் பரவலாகப் பேசப்பட்டார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கிட்டத்தட்ட 40 படங்களுக்கும் மேல் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ் படங்களுக்கும் உலகில் ஆட்டோகிராப், கனா கண்டேன், தொட்டி ஜெயா, எம்டன் மகன், வீராப்பு உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

அதற்குப் பின்னர் அஜிலேஷ் சக்கோ என்பவரை 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அயர்லாந்தில் அஜிலேஷ் சக்கோ அவர்கள் மருத்துவராக பணிபுரிகிறார்.

திருமணத்திற்கு பிறகு கோபிகா அயர்லாந்திலே செட்டில் ஆகிவிட்டார். அதற்குப் பிறகு நடிகை கோபிகா சினிமா துறையில் எட்டிப் பார்க்கவே இல்லை.

அதுமட்டும் இல்லாமல் கோபிகா திருமணத்திற்கு பிறகு படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். தற்போது குடும்ப வாழ்க்கையிலேயே முழு கவனமும் செலுத்த தொடங்கினார்.

இவருக்கு இரண்டு அழகான குழந்தைகள் இருக்கின்றனர். சமீபத்தில் கோபிகா அவருடைய கணவர், குழந்தைகளோடு எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஆட்டோகிராப் கோபிகாவா இவர் என்று அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த அளவு அடையாளம் தெரியாமல்போய்விட்டார். அது மாத்திரம் அல்ல, அவருக்கு அழகிய குழந்தைகளும் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

க வர்ச்சியில் அக்காவையே மிஞ்சிய யாஷிகாவின் தங்கை : ரசிகர்கள் ஷாக் – புகைப்படம் உள்ளே!!

அக்காவையே மிஞ்சிய  தங்கை

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் படுகவ ர்ச்சியாக நடித்திருந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படம் அவரை மிக குறுகிய காலத்திலேயே மிக பெரிய ஸ்டார் ஆக்கியது. அதன்பின் பிக்பாஸ் சென்ற அவர் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.

யாஷிகா ஆனந்துக்கு ஓஷின் ஆனந்த் (Osheen Anand) என்று ஒரு தங்கை உள்ளாராம். அவரும் யாஷிகா போலவே பேஷன் மாடலிங் செய்து வருகிறார்.

அவரது புகைப்படங்கள் இதோ..

28 ஆண்டு காதல் வாழ்க்கை : தேவதைக் கதைகளை இப்போது நம்புகிறேன் : ஷாருக்கான்!!

ஷாருக்கான்

நேற்று முன்தினம் திருமண நாளைக் கொண்டாடிய பாலிவுட் நடிகர் ஷாருக்கான், தனது மனைவிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாலிவுட் திரைப்பட உலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் ஷாருக்கான், திரைப்படத்தில் அறிமுகமாவதற்கு முன்பே காதல் திருமணம் செய்தவர். தனது மனைவி கௌரியை 6 ஆண்டுகளாக காதலித்துக் கொண்டிருந்த காலத்தில் தான், ஷாருக்கான் சின்னத்திரையில் அறிமுகமானார்.

1991யில் இவர்களின் திருமணம் நடந்த பின்னர் தான், ஷாருக்கின் முதல் படமான ‘தீவானா’ வெளியானது. படம் வெற்றியடைந்ததும் காதல் நாயகனாக வலம் வரத் தொடங்கினார் ஷாருக். இந்நிலையில், ஷாருக்-கௌரி ஜோடி இன்றைய தினம் தங்களது 28வது திருமண நாளை கொண்டாடுகிறது. இதற்காக தனது மனைவிக்கு ட்விட்டரில் ஷாருக்கான் திருமண வாழ்த்து கூறியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ‘எனக்கென்னவோ, நம் திருமணம் நேற்று நடந்ததுபோலத் தான் இருக்கிறது. அதற்குள் நம் உறவுக்குக் கிட்டத்தட்ட 30 வயதாகப் போகிறது. நமக்கு மூன்று அருமையான குழந்தைகள் இருக்கிறார்கள். நானும் எத்தனையோ தேவதைக் கதைகளைக் கூறியிருக்கிறேன்.

அந்தக் கதைகளை நான் இப்போது நம்புகிறேன். ஏனென்றால், அப்படியொரு அழகான வாழ்க்கை எனக்கும் அமைந்திருக்கிறது’ என தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு திருமண வாழ்த்து கூறி வருகின்றனர்.

இதற்கிடையில், ஷாருக்கின் காதல் மனைவி கௌரி, தனது கணவர் குறித்து கூறுகையில், ‘ஷாருக் நல்ல கணவர், நல்ல அப்பா. அவர் குடும்பத்துக்காக யோசிப்பவர். என் business-யில் எனக்கு உதவி செய்பவர். எல்லா மனிதர்களையும் போல அவரிடமும் சில குறைகள் இருந்தாலும், அவருடைய மனைவியாக அவரைப்பற்றி நல்ல விடயங்களை மட்டுமே நான் வெளியில் கூறுவேன். No negative about Shahrukh’ என தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகை ராகவியின் கணவர் திடீர் தற்கொ லை!!

நடிகை ராகவி

பிரபல நடிகை ராகவியின் கணவர் திடீரென தூ க்கு போ ட்டு தற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள மரத்தில் ஆண் ச டலம் ஒன்று தூ க்கில் தொ ங்கிய நிலையில் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ச டலத்தை கைப்பற்றி பி ரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ச டலம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் நடிகை ராகவியின் கணவர் சசிகுமார் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து ராகவி பொலிஸாரிடம் அளித்துள்ள புகாரில், சசிகுமார், ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வந்தார். கடன்சுமை காரணமாக, அவர் பணிபுரிந்த ஸ்டூடியோவிற்கு சொந்தமான கேமராவை, அடகு வைத்து விட்டார்.

இந்நிலையில் கடந்த 9-ஆம் திகதி வீட்டை விட்டு வெளியேறிய அவர், இன்று அடர்த்தியான மரங்கள் நிறைந்த பகுதியில் தூ க்கில் தொ ங்கிய நிலையில் ச டலமாக மீட்கப்பட்டுள்ளார். அவருடன் பணிபுரியும் மகேஷ் என்பவருக்கும் சசிகுமாருக்கும் தொழில் ரீதியாக பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக மகேஷ், சில தினங்களுக்கு முன்பு சசிகுமாரை, ‘கேமரா திருடன்’ என வாட்ஸப்பில் பரப்பி வந்ததால் அவர் மனமுடைந்து தற்கொ லை செய்துகொண்டிருக்கலாம் என கூறியுள்ளார்.

முன்னதாக நடிகை ராகவி, தமிழ் சினிமாவில் ராஜா சின்ன ரோஜா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி, மருதுபாண்டி, ஒன்ஸ்மோர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

மேலும் சின்னத்திரையில் திருமதி செல்வம், மகாலட்சுமி போன்ற நாடகங்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.