கொழுகொழுவென்று இருந்த நடிகை நமீதாவா இது? – ரசிகர்கள் ஷாக் – வைரலாகும் புகைப்படம்!!

நடிகை நமீதா

2002ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் நமிதா. பின்னர் 2004-ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் மார்க்கெட்டைப் பிடித்த நமிதா விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், அஜித்துடன் பில்லா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழ் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட நமிதா, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.சமீபகாலமாக திரைப்படங்களில் தலைகாட்டாத நமீதா, தயாரிப்பாளர் வீரேந்திர சௌத்ரியை 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

உடல் எடை கூடி விட்டதாலும், திருமணம் ஆகிவிட்டதாலும் அம்மணிக்கு பட வாய்ப்புகள் அறவே இல்லாமல் போய் விட்டது. சிறு மற்றும் குறு பட்ஜெட் படங்களில் நடித்து வரும் இவர் தற்போது கடுமையாக உடல் எடை குறைக்கும் முயற்சியில் உள்ளார்.

உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என தீவிரமாக ஈடுபட்ட இவர் தற்போது கணிசமான எடையை குறைத்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கணவர் முன்பு பொதுவெளியில் இப்படியா உடையணிந்து ஆடுவது?

நடிகை ஷ்ரேயா

நடிகை ஷ்ரேயா சரண் தென்னிந்திய மொழிகளில் 10 வருடங்களுக்கு மேலாக பிரபலமான நடிகையாக திகழ்ந்தார். இவர் ரஜினி, விஜய் என பல முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.


தெலுங்கிலும் ஸ்ரேயாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பின் ரசியாவை சேர்ந்த விளையாட்டு வீரரை ஸ்ரேயா காதல் திருமணம் செய்துகொண்டார்.

அதன்பின் அவ்வபோது விருது வழங்கும் விழாக்களில் ஸ்ரேயா தலைகாட்டிவந்தார். இந்நிலையில் ஸ்ரேயா தனது கணவர் முன்னணியில் மோசமாக உடையணிந்து பொதுவெளியில் நடனமாடியுள்ளார். இதனை பார்த்த நெட்டீசன்கள் ஸ்ரேயாவை கலாய்த்துவருகின்றனர். அதை நீங்களே பாருங்களேன்.

காதலை கன்பார்ம் பண்ணுகிறாரா அமலா பால்? – புதிய படத்தால் பரபரப்பு!!

அமலா பால்?

விவாகரத்துக்கு பிறகு நடிப்பில் தீவிரம் காட்டி வரும் அமலா பால், இந்தி சினிமாவில் கால்பதிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதோடு, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில், அவரது நடிப்பில் வெளியான ‘ஆடை’ கலவையான விமர்சனங்களை பெற்றாலும், அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

இதற்கிடையே, அமலா பாலின் முன்னாள் கணவர் இயக்குநர் விஜய்க்கு இரண்டாவது திருமணம் நடைபெற்ற போது உடனடியாக எதுவும் பேசாத அமலா பால், சில நாட்களுக்கு பிறகு, தானும் ஒருவரை காதலிப்பதாக பேட்டி ஒன்றில் கூறியவர், அவர் தான் தனக்கு தைரியம் கொடுத்து சவாலான வேடங்களில் நடிக்க தூண்டுகிறார், என்று கூறினார். ஆனால், அந்த காதலர் யார்? என்பதை அமலா பால் சொல்லவில்லை.

இந்த நிலையில், ’ராட்சசன்’ படத்தில் நடித்த போது அமலா பாலும், நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து, நடிகர் விஷ்ணு விஷாலும், தனது மனைவியை விவாகரத்து செய்தவர், அதற்கான காரணத்தை கூறியதோடு, அமலா பாலுடனான உறவு நட்பு மட்டுமே, என்றும் கூறினார்.

இதற்கிடையே, விஷ்ணு விஷால் பிரபல பேட்மிண்ட வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலிப்பதாகவும், இருவருக்கும் விரைவில் திருமணம் நடப்பத இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது.

ஆனால், தற்போது அமலா பால் அறிவிக்காத அவரது காதலர் விஷ்ணு விஷாலாக இருப்பாரோ, என்று சந்தேகிக்கும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது, அமலா பாலும், விஷ்ணு விஷாலும் மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள். தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஜெர்சி’ என்ற படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இப்படத்தில் தான் அமலா பாலும், விஷ்ணு விஷாலும் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.

மான்ஸ்டர் படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இப்படத்தை இயக்குகிறார். கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கான தமிழ் தலைப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

ஏற்கனவே, ‘ராட்சசன்’ படத்தின் போது விஷ்ணு விஷால் – அமலா பால் இடையே காதல் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இவர்கள் இணைந்திருப்பது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது.

கடும் சண்டைக்கிடையில் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறியது இவர் தானாம் : சபாஷ், சரியான போட்டி!!

பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 55 வது நாளை தாண்டிவிட்டது. இதுவரை 6 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த 9 வது வாரத்தில் நாமினேசனில் மதுமிதா, அபிராமி, லாஸ்லியா ஆகிய மூவரும் இருக்கிறார்கள். மதுமிதா நேற்று த ற்கொ லைக்கு முயன்ற காரணத்தால் வெளியேற்றப்பட்டார்.

கடந்த வாரம் மீண்டும் உள்ளே வந்த வனிதா, அபிராமி முகென் காதல் கதையில் மதுமிதாவை தனக்கான ஆயுதமாக பயன்படுத்தி பிக்பாஸ் வீட்டை ஆண் பெண் என இரு பிரிவாக பிரித்துள்ளார்என ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். வீட்டில் இருப்பவர்கள் அவர் பிரச்சனையை தூண்டிவிட்டதால் வத்திக்குச்சி வனிதா என பட்டப்பெயர் வைத்துள்ளார்கள்.

இந்நிலையில் இந்த வாரம் அபிராமி குறைவான வாக்குகளை பெற்றுள்ளதால் அவர் தான் வெளியேற்றப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

வெளியேற்றப்பட்ட மதுமிதா : பிக்பாஸில் அபிராமியின் நிலைமை என்ன தெரியுமா?

பிக்பாஸில் அபிராமியின் நிலைமை

பிக்பாஸில் நேற்று பார்வையாளர்களுக்கு அ திர்ச்சியான சம்பவமாக மதுமிதா த ற்கொ லைக்கு மு யற்சித்த விஷயம் வெளியே வந்தது. இதனால் முன் னெச்சரிக்கையாக மதுமிதா வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஆனால் இந்த வாரம் நாமினேட் ஆனவர்களில் குறைவான வாக்குகள் பெற்றது அபிராமி தான். மதுமிதாவால் அபிராமி கா ப்பாற்றப்படுவாரா இல்லை இவரும் வெளியேற்றப்படுவாரா என்பது இன்று தெரிந்துவிடும்.

ஆனால் நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி அபிராமி எலிமினேட் செய்யப்படாமல், பல வாரங்களாக கூறப்பட்டு வரும் சீ க்ரெட் ரூமில் அடைக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம். என்ன நடக்கவுள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அன்று கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை : கண்ணீருடன் நடிகை கீதா!!

கண்ணீருடன் நடிகை கீதா

ஒருநாள் தன்னை பார்க்க நிச்சயம் சுதந்திரம் வருவான் என ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார் நடிகை கீதா. கடந்தாண்டு சென்னை வளசரவாக்கத்தில் கால்வாயிலிருந்து தொப்புள்கொடியுடன் பச்சிளம் குழந்தையொன்று மீட்கப்பட்டது.

பிறந்து 2 மணிநேரங்களேயான அக்குழந்தையை மீட்ட நடிகை கீதா ”சுதந்திரம்” என பெயர் சூட்டினார். தன் மகளுக்கு திருமணமாகி ஒரு ஆண்டாகியும் குழந்தை இல்லாததால் அவரே வளர்க்க ஆசைப்பட்டார்.

ஆனால் அதற்கு சட்ட திட்டங்கள் இடம் கொடுக்காததால் அரசின் பார்வையில் காப்பகத்திடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் குழந்தையுடன் கொஞ்சி விளையாடி மகிழ்ந்தார் கீதா.

இவரது சேவையை பாராட்டி அரசு வேலை ஒன்றும் கிடைத்தது, ஆம் சுதந்திரம் சிகிச்சை பெற்ற மருத்துவமனையிலேயே இவருக்கு வேலை வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது சுதந்திரம் தத்துக் கொடுக்கப்பட்ட நிலையில், ஒரு ஆண்டும் கடந்து விட்டது.

மேலும் குழந்தையை பற்றி எந்த தகவலும் இல்லாமல் ஏங்கும் கீதா என்றாவது ஒருநாள் தன்னை பார்க்க வருவான் என ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறாராம்.

அது வெறும் கற்பனைக் கதை : டிஜிபிக்கு எதிராகக் கொதிக்கும் ஸ்ரீதேவியின் கணவர்!!

ஸ்ரீதேவி

‘ஸ்ரீதேவின் ம ரணம் கொ லை’ எனப் பேசிய கேரள டிஜிபின் கருத்துக்கு ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் விளக்கமளித்துள்ளார்.

பிரபல முன்னணி நடிகையாகத் திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த வருடம் தன் உறவினர் திருமணத்தில் பங்கேற்க துபாய் சென்றிருந்தார். அங்கு அவர் தங்கியிருந்த ஹோட்டல் குளியல் தொட்டியில் தவறி விழுந்து பிப்ரவரி 24-ம் தேதி உ யிரிழந்தார். ஸ்ரீதேவி இ றந்த பிறகு அவர் கொ லை செய்யப்பட்டிருக்கலாம் எனப் பலராலும் ச ந்தேகிக்கப்பட்டது.

இதையடுத்து ஸ்ரீதேவியின் உடல் மற்றும் அவர் தங்கியிருந்த அறைகளில் துபாய் தடயவியல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், ‘ ஸ்ரீதேவியின் ர த்தத்தில் ஆல்கஹால் கலந்திருப்பதாகவும் அவரின் இ றப்பு விபத்து’ என்றும் அறிக்கை வெளியிட்டனர். இதையடுத்து ஸ்ரீதேவி இ றப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

ஸ்ரீதேவி இ றந்த அன்று ஹோட்டலில் என்ன நடந்தது?
இந்நிலையில் சமீபத்தில் கேரளகவ்முதி என்ற நாளிதழுக்குப் பேட்டியளித்த கேரள டிஜிபி ரிஷிராஜ் சிங், “ தடயவியல் நிபுணரான உமாதாதன் (Umadathan) என் நெருங்கிய நண்பர். அவர் சில காலங்களுக்கு முன்னர், ஸ்ரீதேவியின் ம ரணம் விபத்து இல்லை அது கொ லை என என்னிடம் கூறினார். அதை நிரூபிக்கும் வகையில் சில காரணங்களையும் என்னிடம் விளக்கினார். அவர் கூறியபடி, ‘ ஒருவர் எவ்வளவு மது அருந்தியிருந்தாலும் ஒரு அடி நீரில் மூழ்க வாய்ப்பில்லை. அதே நேரம் இ றந்தவரின் காலை வேறு ஒருவர் பிடித்து நீரில் மூழ்கடித்தால் மட்டுமே உ யிரிழக்க முடியும் என என் நண்பன் கூறினார்” என்று டிஜிபி பேசியிருந்தார். டிஜிபி கூறிய தடயவியல் நிபுணர் உமாதாதன் தற்போது உயிருடன் இல்லை.

ஸ்ரீதேவி இ றந்து ஒரு வருடத்துக்குப் பிறகு ஒரு போ லீஸ் அதிகாரியே இப்படியொரு கருத்தைத் தெரிவித்தது பெரும் சர்ச்சையாகப் பேசப்பட்டது. தற்போது டிஜிபியின் கருத்துக்கு பதில் அளித்துள்ளார் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர். ஸ்பாட் பாய் இ (SpotboyE) என்ற பாலிவுட் ஊடகத்துக்குப் பேட்டியளித்து அவர், “இது மாதிரியான முட்டாள் தனமான கதைகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. இது போன்ற கதைகள் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கும். அதனால் இதற்குப் பதிலளிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இந்தக் கதை ஒருவரின் கற்பனை மட்டுமே” எனக் கூறியுள்ளார்.

கிருஷ்ணா நடிப்பில் வெளியான கழுகு : 2 ஓர் பார்வை!!

கழுகு – 2

காதல், களவு, காட்டு விலங்குகள்… இவற்றுக்கு மத்தியில் கதை..
கொடைக்கானலை ஒட்டிய காட்டுப்பகுதியில் மரம் எடுக்கும் கான்ட்ராக்ட்டை எடுக்கிறார் ஒரு லோக்கல் புள்ளி. ஆனால் அங்கே செந்நாய்கள் தொல்லை. செந்நாய்களைச் சமாளிக்கவும் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கவும் தேனியில் சின்னச் சின்னதாகத் திருட்டு வேலைகள் செய்யும் கிருஷ்ணாவையும் காளி வெங்கட்டையும் ‘வேட்டைக்காரர்கள்’ எனத் தவறாக நினைத்து, காட்டுக்குள் அழைத்துப் போகிறார் மேனேஜர் எம்.எஸ்.பாஸ்கர். அங்கே கிருஷ்ணா பிந்து மாதவியைப் பார்க்க, காதல் பிறக்க, வில்லன் புதையலைப் பார்க்க, ஆசை பிறக்க, இயக்குநர் ஸ்க்ரிப்ட் நீளம் பார்க்க… இன்னும் சில கிளைக்கதைகள் பிறக்க, எல்லாம் முட்டி மோதி ஆக்ஸிடென்ட் ஆவதுதான் மீதிக்கதை.

கிருஷ்ணாவுக்கு அப்பாவி வேடம் பொருந்துகிறதுதான். ஆனால் எத்தனை படங்களுக்கு அதையே செய்து கொண்டிருப்பார் எனத் தெரியவில்லை. போன நூற்றாண்டோடு போய்விட்ட, ‘மாமா… எங்க இருக்கீங்க?’ டைப் கதாபாத்திரம் பிந்துமாதவிக்கு! காளிவெங்கட் காமெடிகளுக்கு செந்நாய்களே பரவாயில்லை.

எம்.எஸ்.பாஸ்கர், ஹரீஷ் பெராடி போன்றவர்கள் எல்லாம் காட்டுப்பாதையில் கடந்துபோகும் செடிகளைப்போல சட்டெனக் காணாமல்போகிறார்கள். இசை யுவன் என டைட்டில் கார்டில் பார்த்தால் திடுக்கென இருக்கிறது. பாடல்களிலும் பின்னணி இசையிலும் அவரின் சாயல் கொஞ்சமும் இல்லை. மலையும் பனியும் சேர்ந்து ஒளிப்பதிவாளரைக் காப்பாற்றுகின்றன.

‘என்ன சாப்பிட்ட?’ – ‘தயிர் சாதம்’ – ‘ஊறுகாயைப் பிசைஞ்சு சாப்பிட்டிருக்கலாம்ல!’ – ‘ஓ… தயிர்சாதத்துக்கு ஊறுகாய் தொட்டுக்குவாங்களா?’ – இப்படித்தான் இருக்கின்றன வசனங்கள்! ஓவர்லாப்பில் செல்லும் வசனங்கள் மட்டுமே பெளண்டடு ஸ்க்ரிப்ட்டில் முக்கால்வாசி வரும்போல! கடைசிப் பத்து நிமிடங்கள் மட்டுமே விறுவிறுவென இருக்கின்றன.

யாரிடமும் விசாரிக்காமலா வேட்டைக்காரர்களைத் தேர்ந்தெடுப்பார் எம்.எஸ்.பாஸ்கர், துப்பாக்கியைப் பறிகொடுத்த போலீஸ்காரர்கள் ஏன் கிருஷ்ணாவைத் தேடவில்லை, தேசிய அரசியல் பிரபலம் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் என்ன ஆனது, முதுமக்கள் தாழியில் எப்படித் தங்கப்புதையல், கொடைக்கானலுக்கு எம்.எல்.ஏ-வே கிடையாதே? இப்படிப் படம் முழுக்க ஏகப்பட்ட கேள்விகள் அந்தரத்தில் தொங்குகின்றன. எங்கேயோ ஆரம்பித்து எங்கெங்கோ பறக்கிறது இந்தக் கழுகு.

பிச்சைக்காரி ரோல்ல நடிக்கச் சொன்னாலும் தயங்கமாட்டேன் : ஜாக்குலின் அதிரடி!!

ஜாக்குலின்

“சில நடிகைகள் 35 வயசுலகூட ஸ்கூல் டிரெஸ் போட்டு நடிக்கிறாங்க. அவங்ககிட்ட இந்தக் கேள்வியை கேட்க முடியாதுல்ல. எனக்கு 23 வயசாகிடுச்சு. ஸோ, கல்யாணப் பொண்ணா நடிக்கிறதுல என்ன தப்பு” எனக் கலாயாக ஆரம்பிக்கிறார் சீரியலில் கமிட்டாகியிருக்கும் ஜாக்குலின்!

`கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்தவர் ஜாக்குலின். அதன் பிறகு, நயன்தாராவின் தங்கையாக `கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். சினிமாவிலே நடித்திருந்தாலும் சீரியலில் நடிக்கும் ஆசையும் ஜாக்குலினுக்கு இருந்தது. அந்த ஆசையை `தேன்மொழி பி.ஏ’ என்கிற புது சீரியலின் மூலம் நிறைவேற்றிக்கொண்டார். பிஸி மோடில் இருந்தவரை நேர்காணலுக்காகச் சந்தித்தேன்.

“திடீர்னு ஒரு நாள் விஜய் டி.வி சேனலில் இருந்து சந்துருனு ஒருத்தர் போன் பண்ணி, `புது சீரியல் ஆரம்பிக்கப்போறோம். அதுல நடிக்க உங்களுக்கு ஓ.கேவா’னு கேட்டார். ஆரம்பத்துல விருப்பம் இல்லைனு சொன்னேன். அப்புறம், `யோசிச்சு பதில் சொல்றேன். இரண்டு நாள்கள் டைம் கொடுங்க’னு கேட்டேன்.

இந்த சீரியல் `நிம்க்கி முக்கியா’ (Nimki Mukhiya) என்கிற இந்தி சீரியலுடைய ரீமேக். முதல்ல தயக்கத்தோட இருந்தேன். அப்புறம், சீரியலுடைய புரோமோ பார்த்ததும் ஆசை வந்திடுச்சு. `எதுக்குமே கவலைப்படாம ஜாலியாக சிரிச்சிட்டே இருப்பா. குழந்தைத்தனம், எதையும் சீரியஸா எடுத்துக்காத கேரக்டர்’னு சொன்னதும் என் அம்மாவுக்கும் ரொம்பப் பிடிச்சுப் போயிடுச்சு. `இது உனக்கு நல்ல வாய்ப்பு. அதுவும் லீடு ரோல். நிச்சயம் உனக்கு நல்ல ரீச் கிடைக்கும்’னு சொல்லி என்னை உற்சாகப்படுத்தினாங்க.

`ஆண்டாள் அழகர்’ இயக்குநர் பிரான்சிஸ் கதிரவன் சார்தான் இந்த சீரியலையும் இயக்குறார். ஆரம்பத்துல எனக்குதான் கஷ்டமா இருந்தது. அது ஓவர் ஆக்ட் பண்ற மாதிரியான கேரக்டர். நான் அந்த அளவுக்கு ஓவர் ஆக்ட்லாம் பண்ணமாட்டேன். அந்த கேரக்டருக்குத் தகுந்த மாதிரி என்னை மாற்றியது இயக்குநர்தான். இந்த சீரியலுக்கான புரோமோ ஷூட் வித்தியாசமா இருந்தது. ஒவ்வொரு ஷாட்டும், நல்லா இருக்குனு சொன்னதும், எனக்கு இன்னும் சந்தோஷமாகிடுச்சு. அதுக்கப்புறம் சீரியலுடைய சில எபிசோடுகளைப் பார்த்தேன். மனசுக்கு ரொம்ப நெருக்கமாகிடுச்சு. அடுத்த நாளே ஓ.கே சொல்லிட்டேன். காஸ்டியூம் போட்டப் பிறகு இன்னும் ஆத்மார்த்தமா உணர ஆரம்பிச்சிட்டேன்.”

சீரியலுடைய ஆரம்பத்துலேயே கல்யாண கெட்டப்ல நடிக்கிறீங்க… வெளியில என்ன பேசிக்கிறாங்க?
“சில நடிகைகள் 35 வயசுலகூட ஸ்கூல் டிரெஸ் போட்டு நடிக்கிறாங்க. அவங்ககிட்ட இந்தக் கேள்வியை கேட்க முடியாதுல்ல. எனக்கு 23 வயசாகிடுச்சு. கல்யாண பொண்ணா நடிக்கிறதுல என்ன தப்பு. பிச்சைக்காரியா நடிக்கச் சொன்னாலும் எந்தத் தயக்கமும் இல்லாம நடிப்பேன்.”

“நடிப்புல பிஸி ஆகிட்டீங்க. வி.ஜேவா மறுபடியும் வருவீங்களா?”
“நிச்சயமா வருவேன். நான் கேட்கிறதுக்கு முன்னாடியே, `நடிக்க வந்துட்டோம்ங்கிறதால, உனக்குப் பிடிச்ச வி.ஜே வேலையை விட்டுடாதே’னு டீம்லேயும் சொல்லிட்டாங்க. என்ன வேலை வந்தாலும் என்னைப் பலருக்கும் அடையாளம் தெரிஞ்சது வி.ஜேவாதான். அதனால, எப்பவும் அதை விடமாட்டேன்” எனத் தனது டெம்ப்ளேட் சிரிப்போடு பேசி முடித்தார், ஜாக்குலின்.

மனநலம் பாதிக்கப்பட்டோரை இழிவுபடுத்துகிறதா நேர்கொண்ட பார்வை?

நேர்கொண்ட பார்வை

பரத் மாத்திரைகளைத் தவறாமல் எடுக்க வேண்டும், ஏனெனில் “அதுதான் உனக்கும் நல்லது, உன்னைச் சுற்றியிருப்பவர்களுக்கும் நல்லது” என அறிவுரை வழங்குகிறார். அதன் பொருள், மனநலப் பா திப்பு காரணமாக தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு பரத் ஆ பத்தை விளைவிப்பார் என்பதாகும்.

நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் ‘பைபோலார் டிஸார்டர்’ எனப்படும் இருமுனைப் பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்டோர் குறித்து மோசமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சென்னையில் செயல்பட்டுவரும் ‘மைண்ட் மேட்டர்ஸ் சர்க்கிள்’ என்ற அமைப்பு, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டுவருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த எழுத்தாளர் சரவணராஜா, ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் குறித்து தனது எதிர்ப்பை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது கருத்தைப் பல்வேறு மனநல மருத்துவர்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து சரவணராஜாவிடம் பேசினோம்.
“சமூகம் நாளுக்குநாள் பக்குவப்பட்டுக்கொண்டு தனது கருத்தியல்களை மாற்றிக்கொண்டு வருகிறது. பெரும்பான்மை சமூகத்தால் பாதிப்புக்குள்ளாகும் பல்வேறு வகைச் சிறுபான்மையினரின் உணர்வுகளை மதிக்கும் மனநிலைக்கு மாறிக்கொண்டு வருகிறோம். பல்வேறு காரணங்களால் மன அழுத்தங்களுக்கு உள்ளானவர்களை ‘மனநலச் சேவைப் பயனர்கள்’ என்று அழைக்கவேண்டுமென்று ஐ.நா. சபை உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் வலியுறுத்துகின்றன.

இந்த நிலையில் மனநலச் சேவைப் பயனர்கள் அனைவரும் வன்முறையாளர்கள் என்ற கருத்தைப் பதிவுசெய்யும் திரைப்படங்கள் நம் தமிழ்த்திரையுலகில் தொடர்ந்து வெளிவருகின்றன.`உறியடி’ திரைப்படத்தில் கூலிக்கு கொலை செய்பவன் மனநோயாளியாக நடிப்பதாகக் காட்டுவது, `ராட்சசன்’ திரைப்படத்தில் கடுமையான உடல்நலச் சிக்கல்களை உண்டாக்கக் கூடிய வயதாகும் குறைபாடு (aging syndrome) உள்ள நபரை பகாசுர சக்தி கொண்ட வில்லனாகக் காட்டுவது என மனநிலை பா திக்கப்பட்டவர்களை கொ டூரமானவர்களாக காட்சிப்படுத்தியிருந்தார்கள்.

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்துள்ள `நேர்கொண்ட பார்வை’ திரைப்படமும் அதே கருத்தை உறுதிசெய்யும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளது” எனக் குற்றம் சாட்டினார்.

“‘பிங்க்’ படத்தில், அமிதாப் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் (தீபக் சேகல்) மனநல பாதிப்பு குறித்து ஒரு மேலோட்டமான சுட்டுதல் மட்டுமே இருந்தது. ஆனால், தமிழில் அஜித் ஏற்று நடித்த கதாபாத்திரம் (பரத் சுப்பிரமணியம்) இருமுனைப் பிறழ்வுடையவர் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. மனைவியின் ம ரணத்தையொட்டி பரத்துக்கு இருமுனைப் பிறழ்வு ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது. இது மனநல மருத்துவத்தின் அடிப்படையில் மிகவும் த வறான கருத்து. ஒரு துன்பியல் இழப்பினால், ஒருவருக்கு இருமுனைப் பிறழ்வு ஏற்பட வாய்ப்பில்லை.

பாட்டிலிலிருந்து மாத்திரைகளைக் கொட்டி உண்பதாக அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் ஆபத்தானவை. அவை பொதுமக்களுக்குத் தவறான முன்னுதாரணமாக மாறக்கூடும். எந்தவொரு உடல்நலக்கோளாறுக்கும் மருத்துவர் பரிந்துரைக்கும் அளவுக்குமேல் மருந்துகளை உட்கொண்டால் அது கடும்விளைவுகளை உண்டாக்கும்.

பரத்தின் மனநல மருத்துவராக வரும் கதாபாத்திரம் மிக மோசமாக சித்திரிக்கப்பட்டுள்ளது. “பரத் மாத்திரைகளைத் தவறாமல் எடுக்க வேண்டும், ஏனெனில் அதுதான் உனக்கும் நல்லது. உன்னைச் சுற்றியிருப்பவர்களுக்கும் நல்லது” என அறிவுரை வழங்குகிறார். அதன் பொருள், மனநலப் பாதிப்பு காரணமாக தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு பரத் ஆபத்தை விளைவிப்பார் என்பதாகும்.

உண்மை என்னவெனில், மாத்திரைகள் எடுக்காவிடில் ஒருவர் தனக்குத்தானே ஊறு விளைவிக்கத்தான் சாத்தியம் அதிகம், பிறருக்கு அல்ல. மேலும், அடியாள்களிடம் பேசும் காட்சியில், “தம்பி, நீ ஓடிரு… நீ தாங்க மாட்ட… இது பல வருஷக் கோபம்” என்கிறார் மருத்துவர். இவையெல்லாம் மனநலப் பாதிப்புக்குள்ளானவர்கள் மீது சமூகத்துக்கு அச்சத்தை ஏற்படுத்தும் மிகைப்படுத்தல்களே.

நடிகர் அஜித்துக்கு ஹீரோயிசமான சண்டைக்காட்சிகளை அமைப்பதற்காகவே மூலத்திரைப்படத்திலிருந்து விலகி, இருமுனைப் பிறழ்வு குறித்து தவறான, மிகைப்படுத்தப்பட்ட கருத்துகளைப் பதிய வைத்துள்ளனர். வணிகப் படங்களின் வியாபார நிர்பந்தங்களுக்கு இருமுனைப் பிறழ்வினால் பாதிக்கப்பட்டவர்கள் பலிகடாவாக்கப்படுவதை நிச்சயம் ஏற்க முடியாது.

எனவே, திரைப்படக்குழுவினர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் மனநலப் பாதிப்பு குறித்த அனைத்துக் காட்சிகளையும் நீக்க வேண்டும். குறிப்பாக சமூகப் பொறுப்புணர்விற்கும், நேர்மைக்கும் பெயர் பெற்ற நடிகர் அஜித், இத்தகைய தவறான காட்சிப்படுத்தல்களால் ஏற்படும் நீண்ட கால எதிர்மறை விளைவுகளைப் பரிசீலிக்க வேண்டும்” என்றார்.