திரைப்படங்களில் நடிக்கவருவதற்கு முன்பு நடிகை ரஷ்மிகா எப்படி உள்ளார் பாருங்க, பலரும் பார்த்திராத வீடியோ பதிவு!!

ரஷ்மிகா மந்தனா..

தென்னிந்திய திரையுலகில் தற்போது முன்னணி கதாநாயகியாக விளங்குபவர் தான் நடிகை ரஷ்மிகா மந்தனா, இவருக்கு தற்போது பெரிய ரசிகர்கள் வட்டம் உருவாகியுள்ளது.

கன்னட திரையுலகின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான ரஷ்மிகா மந்தனா அங்கு முன்னணி நடிகையாக மாறினார்.

அதனை தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களில் தனது கவனத்தை செலுத்தி வந்த நடிகை ரஷ்மிகா, இந்தியளவில் பலருக்கும் பிடித்த நடிகையாகும் அளவு பிரபலமானார்.

மேலும் பல வருட காத்திருப்பிற்கு பின் ரஷ்மிகா தமிழில் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். கிராமத்து பெண்ணாக சுல்தான் படத்தில் அசதியுள்ள ரஷ்மிகா தமிழிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வரவுள்ளார்.

இந்நிலையில் நேற்று நடிகை ரஷ்மிகாவின் பிறந்தநாள் என்பதால் அவர் நடித்த அறிமுக திரைப்படமான கிரிக் பார்ட்டி என்ற படத்தின் இயக்குனர் ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆம், இப்படத்திற்காக நடிகை ரஷ்மிகாவை ஆடிஷன் செய்த பொது எடுக்கப்பட்ட வீடியோவை பதிவிட்டுள்ளார். இதனை கண்ட அவரின் ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

குக் வித் கோமாளி பைனல்ஸுக்கு வந்த தமிழ் சினிமாவின் டாப் நடிகர், யாருக்கு விருது கொடுத்துள்ளார் தெரியுமா?

குக் வித் கோமாளி…

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிகவும் முக்கியமான நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த ஒரு நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உள்ளனர்.

மேலும் தற்போது ஒளிபரப்பாகி வரும் சூட் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் பைனல்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது, இதன் ஒளிபரப்பு அடுத்த வாரம் ஏப்ரல் 14 ஆம் தேதி என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பைனல்ஸ்க்கு பாபா பாஸ்கர், அஸ்வின், ஷகீலா, கனி, பவித்ரா என ஐந்து போட்டியாளர்கள் தேர்வாகி இருந்தனர். மேலும் இதில் கனி வின்னர் என்றும் அவருக்கு அடுத்தடுத்த இடத்தை ஷகீலா மற்றும் அஸ்வின் பிடித்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த பைனல்ஸ் நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் டாப் நடிகரான சிம்பு கலந்து கொண்டு பரிசுகளை வழங்கியுள்ளார்.

ஆம், தற்போது சிம்பு கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி அதில் சிம்பு அஸ்வினுக்கு விருது கொடுப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அஸ்வின் நடிகர் சிம்புவின் தீவிர ரசிகர் என்பது குறிப்படத்தக்கது.

தளபதி 65 படம் இப்படி தான் இருக்கும் – முதல்முறையாக ரகசியத்தை கூறிய நடிகை பூஜா ஹெக்டே!

தளபதி 65…

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.

இப்படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் பூஜை சமீபத்தில் தளபதி விஜய் மற்றும் படக்குழுவினர்களுடன் நடைபெற்றது, மேலும் அதன் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் செம வைரலானது.

இந்நிலையில் இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ள நடிகை பூஜா ஹெக்டே இப்படம் குறித்து சமீபத்தில் பேட்டியளித்துள்ளார்.

ஆம் அதில் “ரொம்ப சந்தோசம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சார் ஹீரோனா எப்படியிருக்கும்? வானத்துல பறந்துட்டு இருக்கேன். இயக்குநர் நெல்சன் கதை சொன்னதுமே படத்தை மிஸ் பண்ணக் கூடாதுனு முடிவு பண்ணிட்டேன். ரசிகர்கள், கொண்டாடித் தீர்த்துடுவாங்க.

அப்படியொரு மாஸ் கதை, படத்துலயும் நான் அழகா தெரிவேன். ஏன்னா, ‘ராதே ஷ்யாம்’ கேமராமேன் மனோஜ் பரமஹம்சா சார் தான், #விஜய்65 க்கும் ஒளிப்பதிவு பண்றார்! ஷூட்டுக்காக “I am Waiting” என கூறியுள்ளார்.

பெண் வேடம் போட்டு ஆளே மாறிய நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் புகழ் செந்தில்!!

செந்தில்…

சின்னத்திரையில் சில நடிகர்கள் உள்ளார்கள், எந்தவித கதாபாத்திரம் கொடுத்தாலும் அசால்ட்டாக நடிப்பார்கள்.

அப்படி ஒரு நடிகர் தான் செந்தில். இவர் ஒரு ரேடியா ஜாக்கி, ஆனால் அப்போது அவரை மாயனாக தான் ரசிகர்கள் பார்க்கிறார்கள். காரணம் அந்த கதாபாத்திரத்தின் மூலம் மக்களின் மனதில் பெரிய இடம் பிடித்துவிட்டார். காமெடியானால் கலக்குவார், மாஸான காட்சி என்றாலும் அதகளம் செய்வார்.

இப்போது ஓடிக் கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இவர் செய்யும் அட்டகாசங்கள் ஏராளம். தற்போது கூட ஒரு சீனிற்காக பல வேடங்கள் போட்டுள்ளார்.

அதில் ஒன்று தான் பெண் வேடம், அந்த காட்சிகள் இன்று தான் ஒளிபரப்பாகவுள்ளது. ஆனால் அதற்குள் அந்த லேடி கெட்டப் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதைப்பார்த்த ரசிகர்கள் நம்ம செந்திலா இது என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர். அதோடு இன்று இந்த காட்சிக்காகவே பார்க்க வேண்டும் என்றும் கமெண்ட் செய்கின்றனர்.

அட்லீ-விஜய் கூட்டணி மீண்டும் அமைகிறதா?- சத்தமே இல்லாமல் நடந்த விஷயம்!!

அட்லீ-விஜய்…

சினிமாவில் ஒரு கூட்டணியில் வந்த படம் ஹிட்டடித்து விட்டால் மீண்டும் மீண்டும் அவர்கள் இணைய வேண்டும் என மக்கள் விரும்புவார்கள்.

அப்படி தமிழ் சினிமாவில் ஹிட்டான கூட்டணியில் ஒன்று விஜய்-அட்லீ இணையும் படங்கள். அவர்கள் இதுவரை தெறி, மெல்சல், பிகில் என 3 படு ஹிட்டான படங்களை கொடுத்துள்ளார்கள்.

பிகிலை தொடர்ந்து விஜய் மீண்டும் அட்லீயுடன் கூட்டணி அமைக்கிறார் என்றார்கள். ஆனால் விஜய்யோ, லோகேஷ் கனகராஜ் கதையை தேர்வு செய்து மாஸ்டர் என்கிற படத்தில் நடித்தார்.

அப்படத்தை தொடர்ந்து விஜய், முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது, ஆனால் ஏதோ பிரச்சனை காரணமாக அவர்களது கூட்டணி அமையவில்லை.

எனவே விஜய், டாக்டர் பட புகழ் நெல்சனின் கதையை தேர்வு செய்ய இப்போது படத்தின் வேலைகளும் ஆரம்பித்துவிட்டன. அண்மையில் படத்திற்கான பூஜை போடப்பட்டு படப்பிடிப்பும் 2 நாள் நடந்தது.

இந்த நிலையில் விஜய்யின் அடுத்த பட லிஸ்டில் அட்லீ இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் விஜய்யை நேரில் சந்தித்த அட்லீ ஒரு புதிய கதையின் ஒன்-லைன் கூறியதாகவும் அது விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டதாக கூறுகின்றனர்.

எனவே விஜய்யின் 66 அல்லது 67வது படம் அட்லீயுடன் இருக்கும் என சில தகவல்கள் வருகின்றன.

நயன்தாரா, த்ரிஷா பாணியில் ப்ரியா பவானிசங்கர் நடிக்கும் முதல் படம்!

பிரியா பவானி சங்கர்…

கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் நாயகியாக நடித்து வரும் நயன்தாரா மற்றும் த்ரிஷா தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேடங்களில் அதிக படங்களில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இளம் நடிகைகளில் ஒருவரான பிரியா பவானி சங்கர் முதல்முறையாக நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நயன்தாரா நடித்த ‘ஐரா’ என்ற படத்தை இயக்கிய சர்ஜுன் இயக்கி வரும் அடுத்த படத்தில் ப்ரியா பவானி சங்கர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் இந்த படத்தில் ஒரு டிவி ரிப்போர்ட்டராக நடிக்கிறார் என்றும் ஒரு கொலையை அவர் துப்பறிவது தான் இந்த படத்தின் கதை என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் இந்த படத்தில் மெட்ரோ சிரிஷ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தாலும் அவர் ப்ரியா பவானி சங்கருக்கு ஜோடி இல்லை என்றும் பிரியா பவானி சங்கர் கண்டுபிடிக்கும் கொலை வழக்கில் அவர் உதவியாக இருப்பது போன்ற கேரக்டரில் நடித்து வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த இர்பான் மாலிக் என்பவர் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும்,

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம் பகுதியில் நடைபெற்று வருவதாகவும் இருப்பினும் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னையில் தான் படமாக்கப்பட்டு உள்ளது என்றும் குறிப்பிடத்தக்கது.

‘கர்ணன்’ ரிலீஸ் குறித்து தனுஷின் முக்கிய அறிவிப்பு!

தனுஷ்…

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிப்பில் உருவான ’கர்ணன்’ திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் உள்பட அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தேர்தல் முடிந்தவுடன் தியேட்டர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று ஒரு செய்தி வெளியாகி கொண்டு வருகிறது.

அவ்வாறு தியேட்டர்களுக்கு கட்டுப்பாடு விதித்தால் ’கர்ணன்’ ரிலீஸ் தேதியும் ஒத்திவைக்கப்படும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் கூறின.

இந்த நிலையில் சற்று முன் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஏப்ரல் 9ஆம் தேதி ’கர்ணன்’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளார். இதனை அடுத்து ’கர்ணன்’ திரைப்படம் ஏப்ரல் 9-ம் ரிலீஸ் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அட்டகாசமான ’கர்ணன்’ படத்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார் என்பதும் அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ’கர்ணன்’ படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர் மிகப்பெரிய அளவில் வைரலாகி உள்ள நிலையில் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘சுனிதா அக்கா என்னால நிறைய Face பண்ணிருக்காங்க’.. ரியாலிட்டி ஷோவில் கண் கலங்கிய சிவாங்கி!

சிவாங்கி…

விஜய் டிவியில் ஞாயிற்றுக் கிழமை வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பாடகர்கள், ஆங்கர்கள், கலக்கப்போவது யாரு பிரபலங்கள், சீரியல் நடிகர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு தரப்பினரும் தங்களது தரப்புக்காக பேசவும், ஆடிப் பாடவும் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி தரப்பில் இருந்து பங்கேற்று பேசிய சிவாங்கி, ‘இப்போதெல்லாம் சிவாங்கி பிள்ளை சிவாங்கி பிள்ளை என குக் வித் கோமாளி சீசன் 1-ல் குழந்தையாகவும், சீசன் 2ல் ஜெனிலியா போன்று ஜாலியாகவும் பார்க்கிறார்கள்.

பள்ளியில் இருந்து கலாய்க்கப்பட்ட என் குரலே இப்போது ப்ளஸ் ஆகிவிட்டது. குக் வித் கோமாளி ஷோ பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் அண்ணா எனக்கு படவாய்ப்புகள் கொடுத்தார்கள்’என்று குறிப்பிட்டுள்ளார்.

‘யாரையுமே உள்நோக்கத்துடன் கலாய்த்ததில்லை. சுனிதா அக்காவை நிறைய முறை கலாய்த்துள்ளேன். அவங்க என்னால் நிறைய சந்தித்துள்ளார்கள். அவை எல்லாமே பெர்சனல் கிடையாது.

எல்லாமே ஜாலிக்காக தான். ’என்று சொன்னதும் ‘ஐயோ.. லவ் யூ சிவாங்கி’ என சுனிதா சிவாங்கிக்கு பதில் அளித்தார். சிவாங்கி இப்போது படுபிஸியாகவும் ட்ரெண்டிங்காகவும் திகழ்கிறார்.

அண்மையில் கவின், தேஜூ அஸ்வினி நடிப்பில் வெளியான AskuMaaro வீடியோ ஆல்பத்தில் பாடி நடித்த சிவாங்கி, சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திலும் நடித்திருக்கிறார்.

வசூலில் தெறிக்கவிடும் கார்த்தியின் சுல்தான்- இதுவரையிலான முழு வசூல் விவரம்!!

சுல்தான்…

நடிகர் கார்த்தி அடுத்தடுத்து தரமான படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அப்படி அவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், கடைக்குட்டி சிங்கம், கைதி, பையா என இவர் நடித்த படங்கள் சில பெரிய ஹிட்டடித்துள்ளன.

வசூல் ரீதியாக மட்டும் இல்லாமல் மக்களின் மனதிலும் நிற்கும் படங்களாக அமைந்துள்ளது.

இப்போது அவர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் சுல்தான். பாக்யராஜ் கண்ணம் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

படம் 3 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை ரூ. 14ல் இருந்து 15 கோடி வசூலித்துள்ளதாம்.

அதோடு உலகம் முழுவதும் படம் இதுவரை 24 கோடிக்கு வசூலித்து சாதனை படைத்துள்ளது.

கார்த்தியின் சினிமா பயணத்திலேயே வசூல் ரீதியாக இது சிறந்த படமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதுலாம் என்னங்க படம், அஜித்தின் வலிமை அதைவிட 4 மடங்கு இருக்கும்.. ரசிகர்களை வெறியேற்றிய முக்கிய பிரபலம்!!

வலிமை…

கடைசியாக அஜித் நடிப்பில் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நேர்கொண்ட பார்வை என்ற படம் வெளியானது. அதன் பிறகு ஒன்றரை வருடம் ஆச்சு. அஜித் படத்தைப் பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை.

வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும், வினோத் இயக்குகிறார் என்பதும் அந்த படத்தை போனிகபூர் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார் என்பது மட்டுமே தெரியும்.

ஒரு வருடத்திற்கு மேலாக தல ரசிகர்களை சமூகவலைதளத்தில் கதறவிட்ட போனிகபூர் ஒரு வழியாக அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட போவதாக அறிவித்திருந்தார்.

வலிமை படத்தில் முக்கிய அம்சமாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது ஆக்சன் காட்சிகளை தான். ஏனென்றால் வலிமை படம் ஒரு பக்கா ஆக்ஷன் படம் என்று ஆரம்பத்திலிருந்தே பரபரப்பை பற்ற வைத்து விட்டனர்.

இந்நிலையில் வலிமை படத்தில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றி வரும் திலிப் சுப்புராயன் ஏற்கனவே வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் பணியாற்றியிருந்தார். அந்த படத்தில் திலீப் சுப்பராயனின் சண்டைக் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதைத்தொடர்ந்து திலிப் சுப்புராயன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தீரன் அதிகாரம்ஒன்று படத்தை விட வலிமை படத்தில் நான்கு மடங்கு அட்டகாசமான சண்டை காட்சிகள் இருக்கும் என கூறி தல ரசிகர்களை வெறியேற்றியுள்ளார்.