மோகன்லால் இயக்கத்தில் முதல் முறையாக மலையாள சினிமாவில் தல அஜித்‌ ! படத்தின் பெயர் என்ன தெரியுமா?

அஜித்………..

வலிமை படத்தில் நடிக்கும் அஜித், ஏறத்தாழ 95 சதவீதம் படப்பிடிப்பை முடித்துவிட்டார். இன்னும் 1 வாரம் படப்பிடிப்பு மட்டுமே எஞ்சி இருக்கிறது.

இந்த படத்தை பற்றின Update வராமல் காத்திருக்கும் ரசிகர்களுக்கு, வலிமை படத்தின் பிரமோஷன் பணிகள் மே 1 முதல் ஆரம்பிக்கும், அதாவது தலையின் 50 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அதன் பணிகள் தொடங்கும் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் கூறியுள்ளார்.

மேலும் படத்தை பார்த்த அஜித், படம் ரொம்ப கிளாஸ் ஆக இருக்கிறது என்றும் வெகுஜன பாமர மக்களுக்கும் படம் போய் சேரவேண்டும் என்பதற்காக சில காட்சிகளை வைக்கச் சொல்லி உள்ளார். மேலும் அடுத்த படத்தையும் H. வினோத் அவர்களையே இயக்க கூறியுள்ளார்.

ஆனால், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், தல அஜித் அடுத்ததாக மலையாள நடிகர் மோகன்லால் இயக்கும் ஒரு படத்தில் Cameo வேடத்தில் நடிக்கவுள்ளாராம்.

ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த படத்திற்கு Barroz என்று பெயர் வைத்துள்ளதாகவும் முழுக்க முழுக்க 3 டியில் உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்ததிரைப்படத்திற்கு லிடியன் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார். ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறாராம்.பிரபல மலையாள சினிமா நடிகர் ப்ருத்விராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.

கணவர் சம்மதித்தால் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன்: தமிழ் நடிகை பதில்!

பிரியாமணி……

பிரபல தமிழ் நடிகை ஒருவரின் கிளாமர் புகைப்படங்களை பார்த்து என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ’எனது கணவர் சம்மதித்தால் திருமணம் செய்து கொள்கிறேன் என்று அந்த நடிகை பதில் அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாரதிராஜா இயக்கிய ’கண்களால் கைது செய்’ என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ’பருத்திவீரன்’ என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை பெற்றவர் நடிகை ப்ரியாமணி.

அதன்பின்னர் பல தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் நடித்த நடிகை பிரியாமணி கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் சமீபத்தில் பிரியாமணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து இருந்தார். இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ்களும் கமெண்ட்ஸ்களும் குவிந்த நிலையில் ரசிகர் ஒருவர் கமெண்ட்டில், ‘என்னை திருமணம் செய்து கொள்வீர்களா?

என்று கேட்க அதற்கு பதில் அளித்த பிரியாமணி ’எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை, ஆனால் என் கணவரிடம் அனுமதி கேளுங்கள், அவர் சம்மதம் தெரிவித்தால் நான் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். இந்த பதில் தற்போது வைரலாகி வருகிறது.

அட சிவகார்த்திகேயன் இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாரா! அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

சிவகார்த்திகேயன்……….

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் விரைவில் டாக்டர் படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து டான் படத்தில் சிவகார்த்திகேயன் செம்ம பிஸியாகவுள்ளார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் டான் படத்தில் கல்லூரி மாணவனாக நடிக்கின்றார்.

அதற்காக க டுமையாக உடல் எடையை குறைத்தாராம், ஆனால், படத்திற்கு அந்த லுக் சரியில்லை என்பதால் மீண்டும் உடல் எடையை ஏற்றி வருகிறாராம்.

நடிகை தேவயானியின் மகள்களா இது! அச்சு அசல் அம்மாவை போலவே இருக்கிறார்களே!!

தேவயானி……….

தமிழில் வெளியான தோட்ட சிநிங்கி படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார் நடிகை தேவயானி.

இதன்பின் ஹிந்தி, தமிழ், மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரானார். மேலும் தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

நடிகை தேவயானி, இயக்குனர் ராஜ் குமாரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், கடுகு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நடிகை தேவயானிசமீபத்தில் தனது மகள்களுடன் கிராமத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில் இருவரையும் பார்ப்பதற்கு சிறு வயதில் நடிகை தேவயானி பார்ப்பதை போலவே தெரிகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

தளபதி 65 படத்தின் ஒப்பனிங் பாடல் இதுதான்.. படக்குழு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

தளபதி 65………

முன்னரெல்லாம் தளபதி விஜய்யின் புதிய படங்களை பற்றி முகம் தெரியாதவர்கள் தான் ரகசியங்களை வெளியிட்டு வந்த நிலையில் தற்போது படங்களில் பணியாற்றுபவர்களே சில முக்கியமான விஷயங்களை ரசிகர்களிடம் பகிர்ந்து வருகின்றனர்.

விஜய் நடிப்பில் தளபதி 65 படம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை நெல்சன் இயக்க உள்ளார். மேலும் முதற்கட்ட படப்பிடிப்பு முழுவதும் சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் நடைபெற உள்ளது. இதற்காக தற்போது செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தளபதி65 படத்தில் பணியாற்றப்போகும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள் போன்றவர்களை இயக்குனர் நெல்சன் உதவியுடன் தேர்வு செய்து வருகின்றனர். அந்தவகையில் தளபதி 65 படத்தில் ஒரு பாடலுக்கு ஜானி என்பவர் நடனம் அமைக்க உள்ளார்.

இதை படக்குழுவினர் சீக்ரெட்டாக தெரிவிக்கலாம் என நினைத்த நிலையில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தானே அறிவித்துக் கொண்டார். இதுகூட பரவாயில்லை மாஸ்டர் படத்தின் பாடல் எப்போது படமாக்கப்படும், எந்தெந்த தேதிகளில் படமாக்கப்படும் என்பதை எல்லாம் ஓபன் ஆக தெரிவித்துவிட்டார்.

தளபதி படத்தில் இடம்பெற்றுள்ள ஸ்டைலிஷான பாடல் ஒன்றின் ரிகர்சல் ஏப்ரல் 24ஆம் தேதி தொடங்கும் எனவும் மேலும் அந்த பாடல் படப்பிடிப்பு மே 3 ஆம் தேதியிலிருந்து 9ஆம் தேதி வரை நடக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சன் வட்டாரம் கடுப்பில் இருப்பதாக தெரிகிறது. தளபதி படத்தில் ரஜினிக்கு ராக்கம்மா பாடல் எப்படி அமைந்ததோ அதேபோல் தளபதி விஜய்க்கு இந்த பாடல் அமையும் என்கிறார்கள் சன் வட்டாரங்கள். இப்பேர்பட்ட பாடலை சாதாரணமாக பப்ளிசிட்டி செய்து விட்டாரே என அப்செட்டில் இருக்கிறார்களாம்.

முதல் தேசிய விருது வாங்கிய தமிழ் நடிகை யார் தெரியுமா?

சினிமா………

சினிமாவைப் பொருத்தவரை நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அதிகம் எதிர்பார்ப்பது படத்தின் வசூல் மற்றும் விருதுதான். படத்தின் பெருமையை எடுத்துக்காட்டுவது அந்த படத்திற்கு கிடைக்கும் விருது வைத்துதான்.

ஒரு சில இயக்குனர்கள் நல்ல கதை மக்களுக்கு சொல்ல வேண்டுமென படத்தை எடுப்பார்கள். ஆனால் ஒரு சில இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக விருது வாங்கக்கூடிய படங்களில் நடிக்கவும் இயக்கவும் செய்வார்கள்.

இந்திய சினிமாவில் மிகப்பெரிய விருதாக கருதப்படுவது தேசிய விருது தான். சமீபகாலமாக பல நடிகர்கள் தங்கள் திறமையை நிரூபித்து தேசிய விருதை குவித்து வருகின்றன.

1966 ஆம் ஆண்டு நேஷனல் அவார்டு எனும் விருது முதல்முதலாக அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு முன்பு இந்த மாதிரியான எந்த ஒரு விருதும் யாருக்கும் வழங்கப்பட்டதில்லை தேசிய விருது ஆரம்பித்ததிலிருந்து கிட்டத்தட்ட 10 வருடமாக எந்த ஒரு தமிழ் நடிகைக்கும் வழங்கப்படவில்லை. பின்பு 1976-ல் சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற படத்திற்காக ஒரு பெண்மணிக்கு தேசிய விருது கிடைத்தது.

ஜெயகாந்தன் அவர்களின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம். இதில் நடிகை லட்சுமி அவர்கள் நன்றாக நடித்ததால் அவருக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டது. தமிழ் சினிமாவில் தேசிய விருது வாங்கிய முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார்.

அதன்பிறகு தொடர்ந்து நடிகர் மற்றும் நடிகைகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி தேசிய விருதை வாங்கி வருகின்றனர்.

சத்தமில்லாமல் 25வது படத்தை தொட்ட விதார்த்.. என்ன கதை தெரியுமா ?

விதார்த்………..

துணை நடிகராக இருந்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக மாறியவர் விதார்த். அதிலும் பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படம் இவருக்கு வேறு ஒரு அடையாளத்தைக் கொடுத்தது.

அதன்பிறகு பெரியளவு வசூல் செய்யும் படங்களில் வித்தார்த் நடிக்கவில்லை. ஆனால் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து மினிமம் பட்ஜெட்டில் கணிசமான லாபம் கொடுக்கும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் குறைந்தது வருடத்திற்கு விதார்த் நடிப்பில் 3 படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. எல்லாமே சிறிய பட்ஜெட் படங்கள். தயாரிப்பாளர்கள் கையை கடிக்காத வண்ணம் படம் நடித்து மினிமம் கேரண்டி நடிகராக வருகிறார்.

இதற்காகவே விதார்த்தை வைத்து படம் தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். இதன் காரணமாக 25வது படத்தில் விரைவில் நடிக்க உள்ளார். அந்த படத்திற்கு கார்பன் என பெயர் வைத்துள்ளனர். வித்தியாசமான டைட்டில், வித்யாசமான கதை என்பது விதார்த்துக்கு பழக்கம் தானே.

விதார்த்துக்கு மார்க்கெட் இல்லை என பலரும் கோலிவுட் வட்டாரங்களில் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் 20 முதல் 40 லட்சம் மட்டுமே சம்பளம் வாங்கிக்கொண்டு வருடத்திற்கு பல படங்களில் நடித்து வருகிறார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.

அதிலும் கடைசியாக விதார்த் நடிப்பில் வெளியான வண்டி, ஒரு கிடாயின் கருணை மனு போன்ற படங்கள் அனைத்துமே எதார்த்த கதைகளில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

 

காட்டுவாசி வேடத்தில் Enjoy Enjaami பாடலுக்கு வீடியோ வெளியிட்ட ஜுலி- என்னா ஒரு வீடியோ!!

ஜுலி………

சமூக வலைதளங்கள் மூலம் நிறைய விஷயங்கள் ஹிட்டாகியுள்ளது. அதிலும் சில பிரபலங்களின் பாடல்கள் மக்களிடம் பிரபலமாகிவிட்டது என்றால் போதும் பெரிய அளவில் டிரண்ட் ஆகிவிடும்.

அப்படி தான் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் அவரது மகள் தீ பாட தயாரான பாடல் Enjoy Enjaami. பாடல் பெயரை கேட்டதுமே இப்பாடலை நீங்கள் பாட ஆரம்பித்திருப்பீர்கள்.

ஏனெனில் இந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் கலக்கியுள்ளது. யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனால் பாடல் குழுவினர் செம ஹேப்பி.

இப்பாடலுக்கு நடனம் அமைத்து பிரபலங்கள் பலர் வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி புகழ் ஜுலியும் இப்பாடலுக்கு வீடியோ பதிவு செய்துள்ளார்.

அவர் காட்டு வாசி போல் ஒரு போட்டோ எடுக்க அதை வைத்து ஒரு ரசிகர் வீடியோ செய்துள்ளார். அதைத்தான் ஜுலி தனது இன்ஸ்டா பக்கத்திலும் ஷேர் செய்திருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Julee (@mariajuliana_official)

உடல் எடை கூடி குண்டாக மாறிய விஜய் டிவி ஜாக்லின் – ஷாக்கான ரசிகர்கள்!!

ஜாக்லின்………..

கலக்கப்போவது யார் சீசன் 5 மூலம் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் ஜாக்லின்.

இதன்பின் கலக்கப்போவது யாரு 6, 7, 8 உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனால் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் இணைந்து கோலமாவு கோகிலா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

மேலும் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முரட்டு சிங்கில் நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தொகுப்பாளினி ஜாக்லின், உடல் எடை கூடி குண்டாக மாறியிருப்பதுபோல் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இவரின் இந்த புகைப்படத்தை பார்த்த ஜாக்லினின் ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்..

டபுள் மாஸாக வெளியான நேர்கொண்ட பார்வை தெலுங்கு ரீமேக் வக்கீல்சாப்.. அஜித் போல் பட்டையை கிளப்பும் பவன் கல்யாண்!!

வக்கீல்சாப்…

அமிதாப்பச்சன் நடிப்பில் ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படம் அஜித் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

பெண்களுக்கான படமாக உருவாகியிருந்த நேர்கொண்ட பார்வை படம் தற்போது தெலுங்கில் வக்கீல்சாப் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனிகபூர் தெலுங்கு தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை உருவாக்கியுள்ளார்.

மேலும் தெலுங்கில் பவன் கல்யாண், நிவேதா தாமஸ், அஞ்சலி போன்றோர் நடித்துள்ளனர்.

தற்போது வக்கீல்சாப் படத்தின் டிரைலர் இணையத்தில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக உள்ளது கூடுதல் தகவல்.